நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

சமசீர்கல்வி | ஆறாம் வகுப்பு | தமிழ் பாட குறிப்புகள் - 4

இயல் 8

செய்யுள் - "தனிப்பாடல்"

"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித் தானா? " - இந்த வரிகளைப் பாடியவர் - இராமச்சந்திரக்கவிராயர்

இராமச்சந்திரக்கவிராயர் துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்.

சொற்பொருட்கள்


அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன்
குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்பு நோய்

---

"பகுத்தறிவு கவிராயர்" என அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயணகவி

மாயாவரத்திற்கு அடுத்துள்ள ஒரூர் கொரநாடு என்ற பெயர் " கூறைநாடு" என்பது மருவி உருவானது.

நம்மாழ்வார் பிறந்த ஊர் - குருகூர் (தற்போது ஆழ்வார்த்திருநகரி)


மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரம் சிவாலயத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்

திருவல்லிக்கேணி என்பது அல்லிக்கேணி என்பதன் மருவி உருவானதாகும். அல்லிக்கேணி என்றால் அல்லிக்குளம் என்று அர்த்தம்.

"ஊரும் பேரும்" என்ற நூலை எழுதியவர் - ரா.பி.சேதுபிள்ளை


"புரம்" என்னும் சொல் - சிறந்த ஊர்களைக் குறிப்பது

"பட்டினம்" என்னும் சொல் - கடற்கரையில் உருவாகும் நகரங்களைக் குறிப்பது ஆகும்.

"பாக்கம்" - கடற்கரைச் சிற்றூர்கள்

"புலம்" - நிலம் என்பதை குறிக்கும் .(மாம்புலம்)

"குப்பம்" - நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள்

--------

இலக்கணம்

மாத்திரை

கண் சிமிட்டும் நேரம்/ விரல் சொடுக்கும் நேரம் மாத்திரையின் கால அளவாகும்.

மெய்யெழுத்து - அரை மாத்திரை
உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை
உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை
உயிர்மெ (குறில்) - ஒரு மாத்திரை
உயிர்மெய் (நெடில் ) -இரு மாத்திரை

-----------------------

இயல் 9


குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் - திரிகூட ராசப்ப கவிராயர்

சொற்பொருள்

வானரங்கள் - குரங்குகள்
மந்தி -பெண் குரங்கு
வான்கவிகள் - தேவர்கள்
கமனசித்தர் - வான்வெளியில் நினைத்த இடம் செல்லும் சித்தர்கள்
காய்சித்தி - மனிதனின் இறப்பை நீக்கும் மூலிகை
வேணி - சடை
மின்னார் - பெண்கள், மருங்கு -இடை
சூல்உளை - கருவைத்தாங்கும் துன்பம்

கோட்டுமரம் - கிளைகளை உடைய மரம்

----

அழகிய சொக்கநாதப் புலவர் -சிலேடை பாடுவதில் வல்லவர் - திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரில் பிறந்தவர்.
Announcement !
உரையாடலில் சேர் (5)
5 கருத்துகள்
  1. Profile
    Kuna
    Said: hi, school standars to follow for good
    hi, school standars to follow for good
  2. Profile
    பெயரில்லா
    Said: sir what is the procedure to register online coaching pls suggest me
    sir what is the procedure to register online coaching pls suggest me
  3. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: kesal sir, i don't have all books...ur notes are very useful.. if u post pdf it'll more helpful...pls post pdf...
    kesal sir, i don't have all books...ur notes are very useful.. if u post pdf it'll more helpful...pls post pdf...
  4. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: Syllabs padi kodutha innum nalla irkum.
    Syllabs padi kodutha innum nalla irkum.
    • Unknown
      Unknown
      Profile
      Unknown
      Unknown
      Said: dear kesal sir
      time is short for tntet ,tnpsc exams.pls publish pdf file as much as possible sir.its my humble request sir
      dear kesal sir
      time is short for tntet ,tnpsc exams.pls publish pdf file as much as possible sir.its my humble request sir
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!