tag:blogger.com,1999:blog-6537515161009779022024-03-26T14:33:47.527+05:30TNPSC Portal - A guidance website for TNPSC ExamsLatest Updates, Online Tests, Test Batch for TNPSC ExamsKessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.comBlogger5479125tag:blogger.com,1999:blog-653751516100977902.post-65435227341032895062023-10-06T07:38:00.001+05:302023-10-06T07:38:09.901+05:30புத்தொழில்களை ஊக்குவிக்க ரூ.10 லட்சம் வழங்கும் தமிழக அரசு : (நன்றி:தினமலர்) <p style="text-align: justify;">தமிழக அரசின், 'ஸ்டார்ட் அப் டி.என்.,' நிறுவனம், புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. இதற்கான தகுதியான பயனாளிகள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அரசின் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ், 'டான்சிம்' எனப்படும் புத்தொழில் மற்றும் புத் தாக்க இயக்கம் செயல்ப டுகிறது. இது, 'ஸ்டார்ட் அப் டி.என்.,' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம், தமிழகத்தில் புத்தொழில் நிறு வனங்களுக்கு ஆதரவாக, முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி தருவது, சந்தை தொடர்புகளை ஏற்படுத்து வது உட்பட, பல்வேறு உதவிகளை செய்கிறது. அதன்படி, தமிழக புத் தொழில் ஆதார நிதி திட் டத்தின் கீழ், தொடக்க நிலையில் உள்ள புத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்ப டுகிறது. இது வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கிராமப்புற தவிர, சிறு தொழிற்சாலைகள், போன்ற ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங் கும் புத்தொழில் நிறுவ னங்களுக்கு, 15 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, புதிய வேலைவாய்ப்புகள் வாகும் என்பதால், கிராமங் களில் இருந்து நகரங்களுக்கு இளைஞர்கள் இடம்பெயர்வதும் தடுக்கப்படும். </p><p style="text-align: justify;">மேலும், பெண்களை முதன்மையான பங்குதாரர் களாக கொண்டு இயங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, 15 லட்சம் ரூபாயும்; காலநிலை மாற்ற மேலாண்மை, நிலைத்த நீடித்த வளர்ச்சி போன்ற வற்றை உள்ளடக்கிய பசுமை தொழில்நுட்பம் தொடர்பான புத்தொழில் நிறுவனங்களுக்கு, 15 லட் சம் ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படுகிறது. </p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-62667351797597021492023-10-06T07:37:00.007+05:302023-10-06T07:37:45.511+05:3066-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள்<p style="text-align: justify;"> மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் 04.10.2023 அன்று கானா நாட்டில் நடைபெற்ற 66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.</p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-80644717657688737622023-10-06T07:37:00.001+05:302023-10-06T07:37:07.042+05:30 "வள்ளலார் - 200" - வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணை வெளியீடு<p style="text-align: justify;"> "வள்ளலார் - 200" ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழாவில் கடலூர் மாவட்டம், வடலூரில் 99 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணையினை வழங்கி, சிறப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்து, புகைப்பட கண்காட்சி மற்றும் அன்னதானத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 5.10.2023 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார். மேலும், "வள்ளலாரின் இறை அனுபவங்கள்" என்ற நூலினை வெளியிட்டார். </p><p style="text-align: justify;">அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்த அக்டோபர் 5 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் "தனிப்பெருங்கருணை நாள்" என கடைபிடிக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 5 ஆம் நாள் "தனிப்பெருங்கருணை நாளாக" கொண்டாடப்பட்டு வருகிறது. </p><p style="text-align: justify;">2022–2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், "உயிர்த்திரள் ஒன்றெனக்கூறி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானார் தருமசாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கமும் (25.05.2022) வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் (5.10.2022) ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் (5.02.2023) வரவிருப்பதால் இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா எடுக்கப்படும் இதற்கென ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவினை சிறப்புற நடத்திடும் வகையில் முனைவர் பி.கே.கிருட்டிணராஜ் வானவராயர் அவர்கள் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டு வள்ளலாரின் முப்பெரும் விழாவினை அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை, 52 வாரங்களுக்கு தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சிறப்பாக நடத்திட செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. </p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-23370918270001142812023-10-06T07:36:00.001+05:302023-10-06T07:36:10.721+05:30148 பெண் ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா / தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் மானியம்<p style="text-align: justify;"> தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 148 பெண் ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா / தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் புதிய ஆட்டோ ரிக்சாக்களை 5.10.2023 அன்று வழங்கினார். </p><p style="text-align: justify;">2022-2023 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில் "தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்கள், சொந்தமாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பினை உருவாக்கவும், அவர்களின் வருமானம் ஈட்டும் திறன் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டும், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா 1 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 10.07.2023 அன்று தலைமைச் செயலகத்தில், பத்து பெண் பயனாளிகளுக்கு புதிய ஆட்டோ ரிக்சாக்களுக்கான பதிவு ஆவணங்கள் மற்றும் அனுமதி ஆவணங்கள் வழங்கப்பட்டு இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. </p><p style="text-align: justify;">மேலும், 15.08.2023 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருநங்கை ஓட்டுநர்களுக்கும் இம்மானியத் திட்டத்தினை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு மின்சாரம் / சி.என்.ஜி. / எல்.பி.ஜி. மூலம் இயங்கக் கூடிய ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்க தலா 1 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தினை தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கும், திருநங்கை ஓட்டுநர்களுக்கும் நீட்டித்து 16.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 148 பெண் ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா / தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கு 1 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட புதிய ஆட்டோ ரிக்சா வாகனங்களை வழங்கும் விதமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். </p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-38377183496375050212023-10-06T07:35:00.004+05:302023-10-06T07:35:23.345+05:30ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையம் (Global Technology & Innovation Centre) <p style="text-align: justify;"> சென்னை, போரூரில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனம், எரிசக்தித் துறையில் தனித்திறன் வாய்ந்த 2500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் அமைத்துள்ள உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை (Global Technology & Innovation Centre) 5.10.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். </p><p style="text-align: justify;">ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் (M/s. Hitachi Energy India Limited) ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமம், உலகெங்கிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட உலகளாவிய ஃபர்ச்சூன் (Global Fortune) 500 நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதன் துணை நிறுவனங்களில் ஒன்றான ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனம், சுவிட்சர்லாந்தினை தனது தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதன் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் முன்னதாக பிப்ரவரி 2023ல், தனது எரிசக்தி திட்டத்தினை சென்னையில் தொடங்கியுள்ளது. தற்போது, இந்நிறுவனம், சென்னை, போரூரில் ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை அமைத்துள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தில், சுமார் 50,000 சதுர அடியில் ஒரு பிரத்யேக ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் எரிசக்தித் துறையில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்ற 2500 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">கடந்த இரண்டு ஆண்டுகளில், 30-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres GCCs) தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. உலகளவில் தமிழ்நாட்டின் போட்டித்தன்மையை வெகுவாக அதிகரிக்க இவை பெரிதும் உதவும். </p><p style="text-align: justify;">கூ.தக. : </p><p style="text-align: justify;"> தமிழ்நாடு பல பொருளாதார குறியீடுகளில் அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வணிக நடைமுறைச் சட்டம் விதிகளில் / பெருமளவிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, அனுமதிகள் பெறுவதை இலகுவாக்கியதன் விளைவாக, தொழில் செய்வதற்கு உகந்த மாநிலங்களின் தரவரிசையில், 14-ஆம் இடத்திலிருந்த தமிழ்நாடு, வெகுவாக முன்னேறி தற்போது 3-ஆம் இடத்தை பெற்றுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கினை எய்துவதற்காக, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியதன் விளைவாக, 2021 மே மாதம் முதல் இதுநாள் வரை, 4,15,282 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோடி மதிப்பிலான 241 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">ரூ.2,97,196 முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளின் அடுத்த கட்டமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், சென்னையில் சிறப்பான முறையில் நடத்தி, பெருமளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மேற்கொண்டு வருகின்றது. </p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-25969484698549068742023-10-06T07:33:00.008+05:302023-10-06T07:33:51.516+05:30 “ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்” சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா<p style="text-align: justify;"> “ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்” சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா 2.10.2023 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இந்திய விண்வெளி துறையில் சாதனை படைத்த விஞ்ஞானிகள்- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் முனைவர் கே. சிவன், முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, திருவனந்தபுரம் – திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநர் முனைவர் வி.நாராயணன், ஸ்ரீஹரிகோட்டா - சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் திரு. ஏ. இராஜராஜன், பெங்களுரு - யு.ஆர். ராவ் செயற்கைகோள் மையத்தின் இயக்குநர் திரு. எம். சங்கரன், மகேந்திரகிரி - உந்துவிசை வளாக இயக்குநர் திரு. ஜெ. ஆசிர் பாக்கியராஜ், சந்திராயன்- 2 திட்ட இயக்குநர் திருமதி மு. வனிதா, ஆதித்யா L1 திட்ட இயக்குநர் திருமதி நிகார் ஷாஜி, சந்திராயன்- 3 திட்ட இயக்குநர் திரு. ப. வீரமுத்துவேல் ஆகியோரை பாராட்டி, அவர்களுக்கு சால்வை அணிவித்து, தலா 25 லட்சம் ரூபாய் , பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். </p><p style="text-align: justify;"><b>சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் : </b></p><p style="text-align: justify;"> பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடர்கின்ற 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்தக் கல்வி உதவித்தொகைக்காக, பத்து கோடி ரூபாயில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும். </p><p style="text-align: justify;"><b>விழா நாயகர்கள் பற்றி ...</b></p><p style="text-align: justify;"><b>டாக்டர் வீரமுத்துவேல்</b> அவர்கள் – விழுப்புரத்தில் பிறந்தவர். கடந்த ஆகஸ்ட் 23-ஆம் நாள் ஏவப்பட்ட சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிகரமான இயக்குநர் .நிலாவை தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. 1959-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும், 1964-ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2013-ஆம் ஆண்டு சீனாவும்தான் இந்தச் சாதனையை செய்திருக்கிறார்கள். 2008-ஆம் ஆண்டு நிலாவை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கியது. 2023-ஆம் ஆண்டில் அந்த சாதனையின் எல்லையை அடைந்திருக்கிறது. இதுவரை அறியப்படாத நிலவின் தென்துருவப் பகுதியை சந்திரயான்-3 தரையிறங்கி ஆராயத் தொடங்கியிருக்கிறது. அந்த சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ப. வீரமுத்துவேல் செயல்பட்டுள்ளார். </p><p style="text-align: justify;">சந்திரயான் 1 திட்ட இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். 2008 அக்டோபர் 28-ஆம் நாள் அது நிலவை சுற்றத் தொடங்கியது. நிலவில் நீர்க்கூறுகள் இருப்பதை அதுதான் கண்டறிந்து சொன்னது. சந்திரயான்- 2, 2019 ஜூலை 15-ஆம் நாள் ஏவப்பட்டது. இதனுடைய திட்ட இயக்குநராக வனிதா செயல்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் இஸ்ரோ தலைவராக டாக்டர் சிவன் அவர்கள் இருந்தார். இப்போது ஏவப்பட்டது சந்திரயான் - 3. இதனுடைய திட்ட இயக்குநர் வீரமுத்துவேல். இதுதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.</p><p style="text-align: justify;"> <b>ஏ.ராஜராஜன்</b> அவர்கள் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். இஸ்ரோவில் வெளியீட்டு அங்கீகார வாரியத் தலைவராக இருக்கிறார். ககன்யான், எஸ்.எஸ்.எல்.வி. போன்ற இஸ்ரோவுடைய விரிவடைகின்ற தேவைகளுக்கு திடமான மோட்டார்கள் தயாரிப்பதில் இவருடைய பங்கு அளப்பரியது. இஸ்ரோ மெரிட் விருதை 2015-ஆம் ஆண்டு பெற்றவர் இவர்.</p><p style="text-align: justify;"><b>எம்.சங்கரன்</b> அவர்கள் திருச்சியில் பிறந்தவர். யு.ஆர்.ராவ் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றியவர். சந்திரயான் 1,2,3 – ஆகிய மூன்று திட்டங்களிலும் அவர் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றி இருக்கக்கூடியவர். சூரியனை பற்றி ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்தியா எல்-1 என்ற விண்வெளித் திட்டத்திலும் பணியாற்றியவர். தொழில்நுட்பக் கருவிகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்களில் ஒருவர் நம்முடைய எம்.சங்கரன் அவர்கள். </p><p style="text-align: justify;"> <b>ஆசீர் பாக்கியராஜ் </b>அவர்கள் - தூத்துக்குடியில் பிறந்தவர். ராக்கெட் எஞ்சின் விண்கல இயந்திரங்களின் உயர்சோதனைத் துறையில் பெரும் ஈடுபாடு கொண்டவர். ராக்கெட் நிலை ஒருங்கிணைப்புகளில் நவீன வசதிகளை நிறுவியவர். G.S.L.V.-யை இவருடைய குழுதான் ஒருங்கிணைத்தது. உயர் தொழில்நுட்பங்களை இணைப்பதில், இவருடைய பங்களிப்பு முக்கியமானது. </p><p style="text-align: justify;"><b>டாக்டர் எம்.வனிதா </b>அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குநராக இருந்த பெருமைக்குரியவர். மங்கல்யான் வடிவமைப்பிலேயும் முக்கியப் பங்காற்றியவர். இஸ்ரோவில் திட்ட இயக்குநராக பணியாற்றிய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவர். சிறந்த பெண் விஞ்ஞானி விருதையும் பெற்றவர். </p><p style="text-align: justify;"> <b>டாக்டர் நிகார் ஷாஜி </b>அவர்கள் - தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். 1987 முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இஸ்ரோவின் சூரியன் ஆய்வுத் திட்டமான ஆதித்தியா எல் ONE திட்டத்தினுடைய திட்ட இயக்குநராக செயலாற்றினார். </p><p style="text-align: justify;"><b>வி.நாராயணன்</b> அவர்கள் குமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருவனந்தபுரம் திரவ உந்துசக்தி மையத்தின் இயக்குநராக இருக்கிறார். இஸ்ரோ தயாரித்த பெரும்பாலான ராக்கெட் தயாரிப்புகளில் இவருடைய பங்கு அளப்பரியது. சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப் பயன்படுத்திய மார்க்-3 ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். இஸ்ரோவின் சிறந்த விஞ்ஞானி விருதை இரண்டு முறை பெற்றவர் திரு. நாராயணன் அவர்கள். </p><p style="text-align: justify;"><b>டாக்டர் சிவன்</b> அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளை என்ற ஊரில் பிறந்தவர். 1982-ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்து 2018-ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக உயர்ந்த ஆற்றலுக்குரியவர். பி.எஸ்.எல்.வி. மூலம் 104 விண்கலங்களுக்கான திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ராக்கெட் அமைப்பு தொடர்பாக சித்தாரா-என்ற மென்பொருளை உருவாக்கியவர். </p><p style="text-align: justify;"> <b>மயில்சாமி அண்ணாதுரை</b> அவர்கள் பொள்ளாச்சி அருகில் கோத்தவாடி என்கின்ற கிராமத்தில் பிறந்தவர். 36 ஆண்டுகள் இஸ்ரோவில் பணியாற்றியவர். மூன்றாண்டு காலம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் திட்ட இயக்குநராக இருந்தவர். பல்வேறு விண்கலங்களை செலுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர். சந்திரயான்-1 வடிவமைப்பில் இந்தியக் கொடியை பொருத்தியவர் இவர்.</p>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-5361901851800561982023-10-06T07:31:00.007+05:302023-10-06T07:31:33.386+05:30கிராம சபைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் 2.10.2023 , காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்றன. <p style="text-align: justify;"> அண்ணல் காந்தியடிகள் "இந்தியா- கிராமங்களில் வாழ்கிறது” என்று சொல்லி, 'கிராம சுயராஜ்ஜியம்' எனும் கிராம தற்சார்பு நிலையை எல்லா கிராமங்களும் அடைய வேண்டும் என்று விரும்பினார். </p><p style="text-align: justify;"><b>தமிழ்நாட்டில் கிராமசபை வரலாறு : </b></p><p style="text-align: justify;">மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். காஞ்சிபுரம் பக்கம் இருக்கிற உத்தரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயகத் தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு இதை சொல்கிறது. யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்களோ அவர்கள் எல்லோருடைய பெயரையும் ஓலைச்சுவடியில் எழுதிக் குடத்தில் போடுவார்கள். அந்தக் குடத்தை குலுக்கி ஒரு ஓலையை எடுப்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட பெயரில் யாருடைய பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இதுதான் குடவோலை முறை. இப்படித்தான் தமிழ்நாட்டில் மக்களாட்சி என்ற அமைப்பே மலர்ந்தது. அந்த வகையில் பார்த்தால் கிராமங்களில்தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ‘கிராம சபை’ என்ற அமைப்பு தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சோழர் காலந்தொட்டே பழக்கத்தில் இருந்து வருகிறது. சோழப் பேரரசில் 'ஊர் மற்றும் மகாசபை' என்கிற இரு வேறு அவைகள் இருந்தது. இதில் மகாசபையை போன்றதுதான் தற்போதைய கிராமசபை என்று அறியமுடிகிறது. </p><p style="text-align: justify;"><b>கிராம சபைகளின் முக்கியத்துவம் </b></p><p style="text-align: justify;">மக்களாட்சியின் ஆணிவேராக இருக்கிற கிராம சபைக் கூட்டங்களில் மக்களே நேரடியாக விவாதித்து, தங்களுடைய தேவைகளையும், பயனாளிகளையும் தேர்வு செய்வதிலும், வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள். இது இந்திய அளவில் நாடாளுமன்றம், மாநில அளவில் சட்டமன்றம் இருப்பதைப் போல, கிராம அளவில் கிராம சபையானது மக்கள் குரலை எதிரொலிக்கிற மன்றமாக அமைந்திருக்கிறது. </p><p style="text-align: justify;">கிராம சபைகள் குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெற வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 குறிப்பிட்டிருந்தாலும், அதை ஆண்டுக்கு நான்கு முறை என்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மாற்றி அமைத்தார். தற்போதைய அரசானது, இதை ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்று அதிகரித்திருக்கிறது.</p><p style="text-align: justify;">அதன்படி, ஆண்டொன்றுக்கு முறையே *குடியரசு நாள், *உலக தண்ணீர் நாள், *தொழிலாளர் நாள், *விடுதலை நாள், *காந்தியடிகள் பிறந்தநாள் *உள்ளாட்சிகள் நாள் ஆகிய 6 நாட்களில் கிராமசபை நடைபெற்று வருகிறது. </p><p style="text-align: justify;">ஒரு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். நிதி ஆதாரங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டும். கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. *கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தை அங்கீகரித்தல், *ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றத்தினைக் கண்காணித்தல், *ஊராட்சிகளின் வரவு, செலவினங்களை ஆய்வு செய்தல், *பயனாளிகளைத் தேர்வு செய்தல், திட்டக் கண்காணிப்பு செய்தல் ஆகிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. </p><p style="text-align: justify;">கிராம சபை ஒன்றுக்கு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. </p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-76450958845532572122023-10-06T07:29:00.005+05:302023-10-06T07:29:55.148+05:30பசுமை மின்சாரத்தை சேமிக்கும் முயற்சியில் தமிழக அரசு (நன்றி : தினமலர்) <p style="text-align: justify;"> தமிழ்நாட்டில் 6,200 மெகா வாட் திறனில் சூரியசக்தி; 10,170 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. சூரியசக்தி மின்சாரம் பகலிலும்; காற்றாலை மின்சாரம் மே முதல் செப்., வரையும் அதிகம் கிடைக்கிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத இரு வகை பசுமை மின்சார மும் உற்பத்தியான உடனே பயன்படுத் தப்படுகிறது. அந்த மின்சாரத்தை சேமித்து வைத்து, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம் நாட்டில் இல்லை. அதேசமயம் வெளி நாடுகளில், 'கண்டெய்னர்' போன்ற வடிவம் உடைய பேட்டரியில் பசுமை மின் சாரம் சேமிக்கப்பட்டு,தேவைக்கு ஏற்ப பயன் படுத்தப்படுகிறது. </p><p style="text-align: justify;">தமிழ்நாடு அரசு,தமிழக தொழில் முதலீடுகளை ஈர்க்க, 2024 ஜனவரி யில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத் துகிறது. இதற்காக, பல்வேறு நிறுவனங்களுடன், அரசு சார்பில் பேச்சு நடத்தப்பட்டுவருகிறது. </p><p style="text-align: justify;">இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் ராஜா அவர்கள், இந்தியாவில் தமிழ கத்தில் தான் காற்றாலை, சூரியசக்தி மின்சார உற்பத்தி, 50 சதவீதம் மேல் உள்ளது. தமிழகத்தில், காற் றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய பசுமை மின்சாரத்தை சேமிக் கும், 'கிரீன் எனர்ஜி. ஸ்டோரேஜ்' படும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்து வதில், அரசு கவனம் செலுத்த உள்ளது எனக் கூறியுள்ளார். </p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-30207917823526508792023-09-27T07:22:00.004+05:302023-09-27T07:22:50.474+05:30 "தமிழ்நாடு சுற்றுலா கொள்கை - 2023" வெளியீடு <p style="text-align: justify;"> சுற்றுலாத் துறையில் தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட "தமிழ்நாடு சுற்றுலா கொள்கை - 2023" தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 26.9.2023 அன்று வெளியிட்டார். </p><p style="text-align: justify;"><b>"தமிழ்நாடு சுற்றுலா கொள்கை" - 2023ன் சிறப்பம்சங்கள் </b></p><p style="text-align: justify;"></p><ul><li style="text-align: justify;">தொழில் அந்தஸ்து: இந்தக் கொள்கையானது சுற்றுலாத் திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்தை வழங்குகிறது, இதன்மூலம் இதுவரை தொழில்துறை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்களை சுற்றுலாத் துறைக்கும் விரிவுபடுத்தி, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிலையிலான பங்குதாரர்களின் நீண்டகால கோரிக்கையை சுற்றுலா கொள்கை பூர்த்தி செய்கிறது. </li><li style="text-align: justify;">முன்னுரிமை சுற்றுலா பிரிவுகள்: சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்டுள்ளது. நிலைப்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் அளிக்கப்படும். </li><li style="text-align: justify;">சுற்றுலாத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர அனுமதி: அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதியுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும். தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தகுதியான சுற்றுலாத்திட்டங்கள்: தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள்/ முகாம்கள், ரோப்வேகன்கள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம் / மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம் பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. </li><li style="text-align: justify;">ஊக்கத்தொகை வகை A திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் திட்டங்கள்) (ரூ.50 கோடி வரையிலான முதலீட்டில் 25% அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும். </li><li style="text-align: justify;">பெண்கள் / எஸ்சி / எஸ்டி / திருநங்கைகள் / மாற்றுத்திறனாளி (திவ்யாங்) நபர்களால் ஊக்குவிக்கப்படும் திட்டங்களுக்கு 5% அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும். </li><li style="text-align: justify;">நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு 5% அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும். </li><li style="text-align: justify;">குறு நிறுவனங்களுக்கு 10% அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.</li><li style="text-align: justify;"> 20 நபர்களுக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். </li><li style="text-align: justify;">குறு/சிறு நிறுவன, புதிய மற்றும் விரிவாக்க சுற்றுலாத் திட்டங்களுக்கான வட்டி மானியத்தை திரும்ப பெறுவதற்கும், தேசிய மற்றும் பன்னாட்டு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கான மானியமும் வழங்கப்படும். </li><li style="text-align: justify;">வகை B திட்டப்பணிகள் (ரூ.50 கோடி முதல் 200 கோடி வரையிலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்) . 5% அதிகபட்சமாக ரூ. 3 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும். </li><li style="text-align: justify;">20 பேருக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். தேசிய தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.2 இலட்சம் வரையிலான மானியமும், பன்னாட்டு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.10 இலட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படும்.</li><li style="text-align: justify;"> நிறுவனங்களில் பசுமை முன் முயற்சி திட்டங்களுக்கான ஊக்கத்தொகையாக 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை வழங்கப்படும். </li><li style="text-align: justify;">வகை C திட்டப்பணிகள் (ரூ.200 கோடிக்கு மேலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்) நிறுவனங்களின் திட்டங்கள் அடிப்படையில் கட்டமைப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</li><li style="text-align: justify;"> நிறுவன பயன்பாட்டிற்கான மின்கட்டணம் • முக்கிய சுற்றுலாத்தலங்களில் புதிய விடுதிகளுக்கு வணிக மின் கட்டணம் மற்றும் நிறுவன மின் கட்டண வித்தியாச தொகை முதலீட்டுத் தொகையில் 10% வரை அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும். </li><li style="text-align: justify;"> ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள மற்றும் குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய திட்டங்களுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்திய சான்றிதழ் ஆய்வு அடிப்படையில், மின் பயன்பாட்டில் கட்டணச் சலுகைகள் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும். </li></ul><p></p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-57139384098447182572023-09-27T07:22:00.003+05:302023-09-27T07:22:36.977+05:30 தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி<p style="text-align: justify;"> தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி பதிவு செய்வதற்கான http://tva.reg.payil.app என்ற இணையதளத்தை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 26.09.2023 அன்று தொடங்கி வைத்தார். </p><p style="text-align: justify;"><b>தமிழ்ப் பரப்புரைக் கழகம் பற்றி …</b></p><p style="text-align: justify;"> அயலக மாணவர்களின் தமிழ்க்கற்றல் கற்பித்தலுக்காக தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை செப்டம்பர் 2022-இல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். </p><p style="text-align: justify;">இத்திட்டத்தின் பணிகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இதில் திறன்கள் அடிப்படையிலான பாடப்புத்தகங்கள், கற்றல் துணைக்கருவிகள், கட்டணமில்லா இணையவழி வகுப்புகள் முதலான பல வசதிகள் 34 நாடுகளிலும் 16 இந்திய மாநிலங்களிலும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் 160 தொடர்பு மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. </p><p style="text-align: justify;">இந்தத் தொடர்பு மையங்களில், மாணவர்களுக்குத் தன்னார்வலர்கள் தமிழ் பயிற்றுவித்து வருகின்றனர். </p><p style="text-align: justify;"><b> இணையவழி ஆசிரியர் பட்டயப் பயிற்சி பற்றி…</b></p><p style="text-align: justify;">தமிழ் மொழியின் அடிப்படைகளையும் முறையான கற்பித்தல் பயிற்சியையும் இவர்களுக்கு வழங்கினால் தமிழ் மொழிக் கற்பித்தலை இன்னும் மேம்படுத்த முடியும் எனப் பல அயலகத் தமிழ்ச்சங்கங்களும் பள்ளிகளும் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழ் பரப்புரைக்கழகத்தின் மற்றொரு முக்கியமான முன்னெடுப்பாகத் தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான இணையவழி ஓராண்டு ஆசிரியர் பட்டயப்பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டது.</p><p style="text-align: justify;">இந்தப் பட்டயப்பயிற்சியைத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க 12.01.2023 அன்று நடைபெற்ற அயலகத் தமிழர் தினவிழாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. </p><p style="text-align: justify;">தற்போது இந்தப் பட்டயப்பயிற்சியைத் தொடங்குவதற்கான பணிகள் முடிவடைந்து, இந்தக் கல்வித்திட்டத்தில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பை (http://tva.reg.payil.app/) தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.</p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-90086322302723791982023-09-27T07:22:00.002+05:302023-09-27T07:22:18.270+05:30கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி செலுத்துவதற்கான TNPASS ( vptax.tnrd.tn.gov.in ) என்ற புதிய இணையதளம் தொடக்கம் <p style="text-align: justify;"> கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி செலுத்துவதற்கான TNPASS என்ற புதிய இணையதளத்தை முதலமைச்சர் 26.9.2023 அன்று தொடங்கி வைத்தார். அதன்படி, பொதுமக்கள் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம், வரியல்லாத கட்டணங்கள் போன்றவற்றை https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் செலுத்தலாம். இந்த இணையதளத்தை தேசிய தகவலியல் மையம் (National Informatics centre) வடிவமைத்துள்ளது. </p><p style="text-align: justify;">இவ்விணையதளத்தின் மூலமாக இணைய வழி கட்டணம் (Online Payment), ரொக்க அட்டைகள் (Debit / ATM Cards Payment), கடன் அட்டைகள் (Credit Card Payment), யுபிஐ கட்டணம் (UPI Payment) மூலம் பணத்தினை செலுத்திட முடியும். இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக 24x7 முறையில் எந்த நேரத்திலும் வரி/ கட்டணம் செலுத்திட இயலும். இந்த நடவடிக்கையின் மூலம் ஊராட்சி பணியாளர்களின் பணிச்சுமை பெருமளவு குறையும்.</p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-11824525504147100382023-09-27T07:21:00.003+05:302023-09-27T07:21:34.067+05:30தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் - நீதியரசர் திருமதி ஆர். தரணி<p style="text-align: justify;"> தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் நீதியரசர் திருமதி ஆர். தரணி</p>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-28452842289530759112023-09-27T07:20:00.005+05:302023-09-27T07:20:56.411+05:30லோக் அயுக்தா உறுப்பினர்கள் தேடுதல் குழுவின் தலைவர் - நீதியரசர் திருமதி கே.பி.கே. வாசுகி<p style="text-align: justify;"> தமிழ் நாட்டின் லோக் அயுக்தா உறுப்பினர்கள் தேடுதல் குழுவின் தலைவர் நீதியரசர் திருமதி கே.பி.கே. வாசுகி அவர்கள் தேடுதல் குழுவின் அறிக்கையை 26.9.2023 அன்று முதலமைச்சரிடம் சமர்ப்பித்தார். </p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-20086130171883140172023-09-27T07:19:00.004+05:302023-09-27T07:19:26.541+05:30வஹீதா ரஹ்மானுக்கு (Waheeda Rehman) 53 வது தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது (Dadasaheb Phalke Lifetime Achievement Award) <p style="text-align: justify;"> 2021-ம் ஆண்டுக்கான 53 வது தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது (Dadasaheb Phalke Lifetime Achievement Award) பிரபல நடிகை வஹீதா ரஹ்மானுக்கு (Waheeda Rehman) வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் அறிவித்துள்ளார்.</p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-20892811075492050052023-09-27T07:16:00.005+05:302023-09-27T07:16:35.167+05:30தென்கிழக்கு ஆசியாவில் நீண்ட தூரப் பயிற்சியில் முதல் பயிற்சிப் படையின் (First Training Squadron (1TS)) கப்பல்கள் <p style="text-align: justify;"> முதல் பயிற்சிப் படையின் (First Training Squadron (1TS)) கப்பல்கள் - INS Tir, INS சுஜாதா, பயிற்சிக் கப்பல் சுதர்ஷினி (Sail Training Ship Sudarshini) மற்றும் CGS சாரதி (CGS Sarathi) ஆகியவை தென்கிழக்கு ஆசியாவில் நீண்ட தூரப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">இந்த பயிற்சியின் போது, கப்பல்கள் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும். அப்போது, அந்நாடுகளில் பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள், தொழில்முறை தொடர்புகள் மற்றும் கூட்டு கடல்சார் கூட்டாண்மை பயிற்சிகள் ஆகியவை அந்நாடுகளின் கடற்படைகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">தற்போது, நட்பு நாடுகளான பங்களாதேஷ், மாலத்தீவுகள், மொரீஷியஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் 1TS கப்பலில் அனுப்பப்பட்டுள்ளனர். </p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-88691426936978647802023-09-27T07:15:00.005+05:302023-09-27T07:15:35.438+05:30 66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்ளும் சட்டப்பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள்<p style="text-align: justify;"> 2023 அக்டோபர் மாதம் 03 முதல் 05 வரை கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் நடைபெறவிருக்கும் 66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு. மு.அப்பாவு அவர்கள் கலந்து கொள்கிறார். முனைவர். கி.சீனிவாசன், சட்டமன்ற செயலாளர் அவர்கள் இம்மாநாட்டில் இந்திய வட்டார பிரதிநிதிகளின் செயலாளராக கலந்து கொள்கிறார். </p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-49723420533186854292023-09-27T07:12:00.009+05:302023-09-27T07:12:56.477+05:30இந்தியாவில் விற்கப்படும் மின்சார வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டவை<p style="text-align: justify;">சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வாகன் இணையதளத்தின் தரவுகளின்படி, 2023 ஆம் நிதியாண்டில் செப்டம்பர் 2023 வரையில் விற்பனை செய்யப்பட்ட மின்சார வாகனங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாக தமிழ்நாடு மாறியுள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 1 மில்லியன் (10,00,000) மின் வாகனங்களில், 400,000க்கும் அதிகமான மின் வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையங்களில் இருந்து முறையே 175,608 யூனிட்கள் மற்றும் 112,949 யூனிட்களை விற்ற ஓலா எலக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ் மோட்டார் உள்ளிட்ட பத்து நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் ஆகியவை முக்கிய வகை வாகனங்களாகும்.</p><p style="text-align: justify;"></p><ul><li style="text-align: justify;">ஜனவரி 2023 இல் தமிழ்நாடு அரசு, மின்சார வாகனக் கொள்கையை வெளியிட்டது. இந்த கொள்கையின் முக்கிய நோக்கம், </li><li style="text-align: justify;">சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய ஐந்து நகரங்களை மின்சார வாகன மையங்களாக மேம்படுத்துவதாகும்.</li><li style="text-align: justify;">இந்த கொள்கையின்படி, புதிய ஸ்டார்ட்அப்கள் மற்றும் விரிவாக்கத்தை விரும்புபவர்கள் SGST, விற்றுமுதல் அடிப்படையிலான மானியம், மூலதனம் மற்றும் மேம்பட்ட வேதியியல் செல் மானியங்கள் போன்ற பல்வேறு சலுகைகளைப் பெறலாம்.</li><li style="text-align: justify;">2025 ஆம் ஆண்டிற்குள் மின்சார வாகன உற்பத்தித் துறையில் ₹50,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டை தமிழ்நாடு எதிர்பார்க்கிறது. </li><li style="text-align: justify;">2030 ஆம் ஆண்டளவில், இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களில் 30% உற்பத்தி செய்து, உலகளாவிய ஏற்றுமதியில் கணிசமான பங்களிப்பை வழங்குவதை தமிழ்நாடு இலக்காகக் கொண்டுள்ளது.</li></ul><p></p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-63182749937828885482023-09-27T07:12:00.001+05:302023-09-27T07:12:03.723+05:30 2023-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமம் ”உல்லாடா”<p style="text-align: justify;">2023-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமம் மத்திய சுற்றுலா அமைச்சகத்தினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. </p>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-89816404013630428852023-09-26T07:45:00.000+05:302023-09-26T07:45:03.900+05:30கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் கார்னிலியன் கல் வகையை சார்ந்த உயர்வகை சிவப்பு கல்மணிகள் கண்டெடுப்பு<p style="text-align: justify;"> கீழடியில் நடைபெறும், ஒன்பதாம் கட்ட அக ழாய்வில், முதன்முறையாக வேலைபாடுடன் கூடிய கார்னிலியன் கல் வகையை சார்ந்த சூதுபவளங்கள் எனப்படும் உயர்வகை சிவப்பு கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. </p><p style="text-align: center;"><span id="docs-internal-guid-ba2de95c-7fff-5ae1-4066-ea4f048faa85"><span style="background-color: white; color: #404040; font-family: Verdana, sans-serif; font-size: 12pt; font-variant-alternates: normal; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-weight: 700; vertical-align: baseline; white-space-collapse: preserve;"><span style="border: none; display: inline-block; height: 248px; overflow: hidden; width: 373px;"><img height="248" src="https://lh4.googleusercontent.com/LJXn_T9M8rUKrTWXces1CUoHFW1We9pgRDZnUWITbh18Xvx0ImqAa9oHadL-bZyOSVCJF8msRC1ODveOJevZPQr40t1ObSL8L3s0mwnf8faUcojnDVYrS2UuvjbR9T8yg6sPnrO1CkQsMvjxo0E92kw" style="margin-left: 0px; margin-top: 0px;" width="373" /></span></span></span></p><p style="text-align: justify;"><span style="color: #404040; font-family: Verdana, sans-serif;"><span style="white-space-collapse: preserve;">சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில், ஒன்பதாம் கட்ட அகழாய்வு, கீழடி, கொந்தகை ஆகிய இரு - தளங்களில் நடந்து வருகிறது. கொந்தகை தளத்தில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியில், ஆய்வு செய்த போது, 1.4 செ.மீ., நீளம், 2 செ.மீ., விட்டம் கொண்ட இரண்டு சூது பவளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. </span></span></p><p style="text-align: justify;"><span style="color: #404040; font-family: Verdana, sans-serif;"><span style="white-space-collapse: preserve;">கீழடியில் ஏற்கனவே வராஹி உருவம் பதித்த சூதுபவளம் கண்டறியப்பட்டது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டின் அகழாய்வில், 80வது முதுமக் கள் தாழியினுள், சூதுபவளங்கள் கண்டறி யப்பட்டன. இவை எல்லாம் ஒரே மாதிரியா னவை என அறியப்பட்ட நிலையில், தற்போது கிடைத்த இரண்டு சூதுபவளங்களில் ஒன்றில் மேலும், கீழும் தலா இரண்டு கோடுகளும், நடு வில் அலைகள் போன்ற குறியீடும் வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. </span></span></p><p style="text-align: justify;"><span style="color: #404040; font-family: Verdana, sans-serif;"><span style="white-space-collapse: preserve;">குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் தான் அதிகமாக சூதுபவளங்கள் காணப்படும். கீழடி அகழாய்விலும் இது கிடைத்திருப்பது வணிக தொடர்புக்கான அடையாளமாக காணப்படுகிறது. 2,500 ஆண்டுகள் பழமையானது வழக்கமாக அகழாய்வில் கண்டெடுக்கப்படும் கண் ணாடி மணிகள், பாசி மணி கள், கல் மணிகள் வரிசையில் சூதுபவள மணிகளும் கிடைத்து வருகின்றன. ஏற்க னவே கொந்தகையில் 3-ம் கட்ட அகழாய்வில் அகழ்ந் தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இதேபோல் 74 சூது பவளம் மணிகள் கண்டெடுக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது. </span></span></p><p style="text-align: justify;"><span style="color: #404040; font-family: Verdana, sans-serif;"><span style="white-space-collapse: preserve;">சங்க காலத்தில் சூதுபவளம் மணிகள் அழகு பொருட் கள் மற்றும் அணிகலன்களில் அதிக அளவில் பயன்படுத் தப்பட்டதாகவும், குறிப்பாக பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள்தான் இதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. </span></span><span style="text-align: left; white-space-collapse: preserve;"><span style="color: #404040; font-family: Verdana, sans-serif;">தற்போது கண்டெடுக்கப் பட்ட சூதுபவளம் மணிகள் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப் பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.</span></span></p>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-26152392696063396622023-09-26T07:43:00.003+05:302023-09-26T21:39:47.975+05:30உயிரி எரிபொருளில் இந்திய தரநிலைகள் (Indian standards on biofuels) உருவாக்கம்<p style="text-align: justify;"> இந்திய தரநிலைகளின் பணியகம் (Bureau of Indian Standards (BIS)) உயிரி எரிபொருளில் (biofuels) பின்வரும் ஒன்பது இந்திய தரநிலைகளை(Indian standards on biofuels) உருவாக்கியுள்ளது:</p><p style="text-align: justify;">IS 15464 : 2022 - நீரற்ற எத்தனால் மோட்டார் பெட்ரோலில் கலக்கும் கூறுகளாகப் பயன்படுத்தப்படுகிறது (Anhydrous Ethanol for Use as Blending Component in Motor Gasoline - Specification)</p><p style="text-align: justify;">IS 15607 : 2022 - பயோடீசல் B-100 - ஃபேட்டி ஆசிட் மெத்தில் எஸ்டர்ஸ் FAME (Biodiesel B-100 - Fatty Acid Methyl Esters FAME – Specification)</p><p style="text-align: justify;">IS 16087 : 2016 - உயிர்வாயு (பயோமீத்தேன்) - (முதல் திருத்தம்)(Biogas (Biomethane) - Specification (First Revision))</p><p style="text-align: justify;">IS 16531 : 2022 - பயோடீசல் டீசல் எரிபொருள் கலப்பு B8 முதல் B20 வரையிலான (Biodiesel Diesel Fuel Blend B8 to B20 Specification)</p><p style="text-align: justify;">IS 16629 : 2017 - ED95 வாகன எரிபொருளில் பயன்படுத்த ஹைட்ரஸ் எத்தனால் (Hydrous ethanol for use in ED95 automotive fuel – Specification)</p><p style="text-align: justify;">IS 16634 : 2017 - E85 எரிபொருள் (நீரற்ற எத்தனால் மற்றும் பெட்ரோலின் கலவை) (E85 fuel (Blend Of Anhydrous Ethanol And Gasoline) – Specification)</p><p style="text-align: justify;">IS 17021 : 2018 - E 20 எரிபொருள் - நீரற்ற எத்தனால் மற்றும் பெட்ரோலின் கலவை - தீப்பொறி பற்றவைக்கப்பட்ட இயந்திரத்தால் இயங்கும் வாகனங்களுக்கான எரிபொருளாக (E 20 fuel - Admixture of anhydrous ethanol and gasoline - As fuel for spark ignited engine powered vehicles – Specification)</p><p style="text-align: justify;">IS 17081 : 2019 - ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (மண்ணெண்ணெய் வகை, ஜெட் ஏ - 1) செயற்கை ஹைட்ரோகார்பன்கள் (Aviation turbine fuel (Kerosene Type, Jet A - 1) containing synthesized hydrocarbons - Specification) </p><p style="text-align: justify;">IS 17821 : 2022 - நேர்மறை பற்றவைப்பு இயந்திரத்தில் இயங்கும் வாகனங்களில் பயன்படுத்துவதற்கான எரிபொருளாக எத்தனால் - விவரக்குறிப்பு (Ethanol as a Fuel for Use in Positive Ignition Engine Powered Vehicles - Specification) </p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;">இந்த தரநிலைகளின் உதவியுடன், உயிரி எரிபொருள் உற்பத்தியின் அதிகரித்த திறனை அடைய முடியும். இது 2070-க்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடையவும், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் 50% ஆற்றலைப் பெறவும் உதவுவது மட்டுமல்லாமல், மேக் இன் இந்தியா, ஆத்மநிர்பர் பாரத், வேஸ்ட் டு வெல்த் போன்ற பல நோக்கங்களை அடைவதில் பங்களிக்கும். </p><p style="text-align: justify;">கூ.தக. : புதுதில்லியில் இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற 18வது G20 உச்சி மாநாட்டின் போது, G20 தலைவர்கள், 30 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் அடங்கிய Global Biofuel Alliance (GBA) எனும் ஒரு மன்றம் உருவாக்கப்பட்டது. நிலைத்தன்மை மற்றும் தூய்மையான எரிசக்தி இலக்கை நோக்கிய இந்தியா தலைமையிலான முயற்சியே Global Biofuel Alliance (GBA) ஆகும். தேசியக் கொள்கையை உருவாக்குதல், சந்தையின் மேம்பாடு, தொழில்நுட்பத் திறனின் பரிணாமம் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் நடைமுறைக் குறியீடுகளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உலகளாவிய வளர்ச்சி மற்றும் நிலையான உயிரி எரிபொருளைப் பயன்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;">அறிக்கையின்படி, அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகியவை உயிரி எரிபொருளின் முக்கிய உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களாக உள்ளன. உலகளவில் 85% உற்பத்தி மற்றும் 81% எத்தனால் நுகர்வுக்கு இந்த மூன்று நாடுகளும் கூட்டாக பங்களிக்கின்றன. </p><p style="text-align: justify;">உலகளாவிய எத்தனால் சந்தை 2022 இல் 99 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டது மற்றும் 2032 ஆம் ஆண்டில் 5% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இந்திய தொழில்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்குகிறது மற்றும் விவசாயிகளின் வருமானம், வேலை உருவாக்கம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. </p><p style="text-align: justify;">தற்போது, இந்தியாவில் போக்குவரத்துத் துறைக்கான எரிபொருள் தேவையில் 98% புதைபடிவ எரிபொருட்களாலும், மீதமுள்ள 2% உயிரி எரிபொருள்களாலும் பூர்த்தி செய்யப்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பெட்ரோலியம் இறக்குமதியால் கருவூலத்திற்கு சுமார் 55 பில்லியன் டாலர்கள் செலவானது. சமீபகாலமாக, ரஷ்யா-உக்ரைன் போர் உலக அளவில் எண்ணெய் விலையை உயர்த்தியது மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி விலை ஏற்றப்பட்ட விலையுடன் இந்திய பொருளாதாரத்தை மேலும் சுமையாக ஆக்கியுள்ளது. எத்தனாலை 20% வரை பெட்ரோலுடன் கலப்பதால் சுமார் 4 பில்லியன் டாலர்கள் சேமிக்கப்படும்.</p><p style="text-align: justify;">எனவே, இந்திய எண்ணைய் உற்பத்தி நிறுவனங்கள் 1G மற்றும் 2G எத்தனால் உற்பத்திக்கான புதிய டிஸ்டில்லரிகளை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன, மேலும் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் எத்தனால் கலந்த எரிபொருளுடன் இணக்கமான இயந்திரங்களை உருவாக்கி வருகின்றனர். எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்க வெல்லப்பாகு மற்றும் தானிய அடிப்படையிலான டிஸ்டில்லரிகளுக்கான வட்டி மானியத் திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. 85% வரை எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தும் திறன் கொண்ட ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனங்கள், ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரேசிலில் இயங்கி வருகின்றன, விரைவில் இந்தியாவில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-14054638932696628322023-09-26T07:41:00.006+05:302023-09-26T07:41:47.179+05:30 முதலாவது 'பாரத் ட்ரோன் சக்தி 2023' கண்காட்சி<p style="text-align: justify;"> முதலாவது 'பாரத் ட்ரோன் சக்தி 2023' கண்காட்சியை 2023,செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இதை இந்திய விமானப்படை மற்றும் இந்திய ட்ரோன் சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. 2023,செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த இரண்டு நாள் நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து 75-க்கும் மேற்பட்ட ட்ரோன் புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பாரத் ட்ரோன் சக்தி 2023 -ன் தொடக்கத்தைத் தொடர்ந்து முதல் சி -295 மெகாவாட் போக்குவரத்து விமானம் இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டது.</p>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-52105088713001427412023-09-26T07:41:00.002+05:302023-09-26T07:41:22.510+05:30தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் வளர்ச்சி - (நன்றி : தினகரன் தலையங்கம்) <p style="text-align: justify;"> இந்தியாவை பொறுத்தவரை தொழிற்சாலைகளின் உற்பத்தி ஒட்டுமொத்த உற்பத்தியில் 60 சதவீதம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 40 சதவீத வளர்ச்சி சிறு, குறு தொழில்களின் மூலமே கிடைத்து வருகிறது. </p><p style="text-align: justify;">நாட்டின் ஏற்றுமதியிலும் 40 சதவீதம் சிறு, குறு தொழில்களின் உற்பத்தி முக்கிய பங்காற்றுவதோடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் சிறு, குறு தொழில்களே கொடுக்கின்றன. </p><p style="text-align: justify;">சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இத்தொழில்கள் சார்ந்த புத்தாக்க திட்டத்திற்கு தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கி வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">சேலம், ஓசூர், கடலூர் உள்ளிட்ட 4 இடங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 6 தொழிற்பேட்டைகள் உள்ள நிலையில், மேலும் 6 தொழிற்பேட்டைகளை உருவாக்கிட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. </p><p style="text-align: justify;">சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் அதற்கான மின் கட்டணங்களும் முக்கிய பங்காற்றுகின்றன. சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மின் கட்டண முறைகளை தற்போது மாற்றியமைத்துள்ளது. அதன்படி தொழிற்சாலைகளுக்கு 50 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை மாதம் ரூ.100லிருந்து ரூ.75 ஆகவும், 50 கிலோவாட்டுக்கு மேல் 100 கிலோவாட் வரையிலான நிலைக்கட்டணத்தை ரூ.325லிருந்து ரூ.150 ஆகவும், 100 கிலோவாட் முதல் 112 கிலோவாட் வரையிலான நிலைக்கட்டணத்தை ரூ.500லிருந்து ரூ.150 ஆகவும் குறைத்து மாற்றியமைத்துள்ளனர். மேலும் தொழிற்சாலைகளுக்கான உச்சநேர நுகர்வு மின்கட்டணம் 25 சதவீதத்திலிருந்து 15 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்காக கூடுதல் மானியமாக ரூ.145 கோடி நிதியை தமிழக அரசு வழங்க உள்ளது. இதனால் 3.57 லட்சம் தொழிற்சாலை நுகர்வோர் பயனாளிகளாக மாறுவர். தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் மாத நுகர்வோர் விலை குறியீடுகளின்படி 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இருப்பினும் தொழில்துறையினர் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்திலும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இத்தகைய சலுகைகளை அரசு அளித்துள்ளது. கட்டண உயர்வை 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாக குறைத்து, தொழில் நிறுவனங்களின் சுமையை அரசு வெகுவாக குறைத்துள்ளது.</p><p style="text-align: justify;">ஜவுளி தொழிலின் வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்கிடவும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஏராளம். அந்த வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் கோரிக்கைகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்நிறுவனங்களுக்கு தேவையான சலுகைகளை வழங்கி தொழில் துறையில் புரட்சிக்கு வித்திடுகிறது. பருவகால தேவைக்கேற்ப மாறும் தன்மை கொண்ட மின் தேவைகளில் சலுகைகள் வழங்கும்போது தொழில் உற்பத்தி தானாகவே கூடும். மேலும் தொழிற்சாலைகளுக்கான நிலைக்கட்டணத்தை குறைக்கும்போது தொழில் முனைவோருக்கும் சிரமங்கள் குறையும். தமிழக அரசின் சமீபகால நடவடிக்கைகள் இந்திய அளவில் தொழில்துறையில் தமிழகம் பிரகாசிக்க வழிவகுப்பதாக உள்ளது.</p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-45719878719728338592023-09-26T07:40:00.005+05:302023-09-26T07:40:42.136+05:30பராம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் வெளிப்பொருத்தும் / உட்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் - அரசாணை வெளியீடு. <p style="text-align: justify;">பராம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் வெளிப்பொருத்தும் / உட்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் ஒன்றிய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டம் நீலப்புரட்சி திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பட யோஜனா திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 18.08.2023 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் 1,000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 விழுக்காடு மானியத்தில் வெளிப்பொருத்தும் / உட்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டதை நிறைவேற்றும் வகையில், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு உதவிடும் பொருட்டு 2023-24-ஆம் நிதியாண்டில் மாநில அரசு நிதியின் கீழ், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 1,000 எண்ணிக்கையிலான 28 குதிரைத்திறனுக்கு குறைவான இயந்திர சக்தியுடைய வெளிப்பொருத்தும் / உட்பொருத்தும் இயந்திரங்களை, இயந்திரம் ஒன்றின் விலை ரூ.1.20 இலட்சம் என்ற அடிப்படையில் 40 விழுக்காடு மானியத்தில் வழங்கிட மானியத் தொகையாக மொத்தம் ரூ.4.80 கோடி நிதி ஒப்பளிப்பும் அளித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. </p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-66351127899070898722023-09-26T07:40:00.000+05:302023-09-26T07:40:01.805+05:30அதிவேக இணைய சேவைக்காக 22 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது.<p style="text-align: justify;">அதிவேக இணைய சேவைக்காக 22 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங் என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இதற்காக தொடர்ச்சியாக ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பி வருகிறது. இதுவரையில் 4,500-க்கும் அதிகமான ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் புவி வட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">இந்த நிலையில் மேலும் 22 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 24.9.2023 அன்று விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. அவை புவி வட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.</p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-653751516100977902.post-76163738569496008172023-09-26T07:38:00.006+05:302023-09-26T07:39:05.452+05:30எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் இலக்கிய விருது<p style="text-align: justify;"> ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (டிஎன்ஐஇ) குழுமம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் இலக்கிய விருதினை முதன்முதலாகப் பெற்றிருக்கிறார் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன். இந்த விருது தமிழ் இலக்கியத்துக்கான பெரும் பங்களிப்புக்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டது. </p><p style="text-align: justify;">மேலும் சிறந்த அபுனைவுக்காக எழுத்தாளர் அனிருத் கனிஷெட்டிக்கும் புனைவுக்காக தேவிகா ரெகேவுக்கும் விருது மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. </p><p style="text-align: justify;"><b>கூ.தக. : </b>2014ல் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவல் வெளியாகி அதன் கதை உலகத்தையே தகிக்க வைத்தது. சர்வதேச புக்கர் பரிசுப் பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் தமிழ் நாவல் என்ற சாதனையை இந்த நாவல் பெற்றது. 2015 ஆம் ஆண்டில், 'மாதொருபாகன்' வெளியானது. மேலும் அர்த்தநாரி, ஆலவாயன், பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை, 'கூளமாதாரி' உள்ளிட்ட அவரது பல நாவல்களும் பல சிறுகதைத் தொகுப்புகளும் கவிதைத் தொகுப்புகளும் புகழ்பெற்றவை. </p><p style="text-align: justify;">அனிருத் கனிசெட்டி ஒடிஸி மொழியில் எழுதிய 'லார்ட்ஸ் ஆஃப் தி டெக்கான்: சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரை' (Lords of the Deccan: Southern India from Chalukyas to Cholas) புத்தகம் வாசகர்களிடையே பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. இவரது இந்த புத்தகம் ஓடிடி தளத்தில் வெப் சீரிஸாகவும் வெளியாகவுள்ளது.</p><p style="text-align: justify;">'குவாட்டர்லைஃப்' (Quarterlife) என்ற தனது முதல் நாவல் மூலமாக 2023 ஆம் ஆண்டின் இலக்கிய நட்சத்திரமாகியுள்ளார் தேவிகா ரெகே. </p><div style="text-align: justify;"><br /></div>Kessal Dhttp://www.blogger.com/profile/01855213249964259875noreply@blogger.com0