நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC பொதுத் தமிழ் -22.அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது,சிறுபஞ்ச மூலம்,ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

பகுதி ஆ.2.அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,
முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது,சிறுபஞ்ச மூலம்,ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.


நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்.
இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.
'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு.
திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.
இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).
நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து : 1 அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்) பொருட்பால் : 260 பாடல்கள் (26 அதிகாரஙள்) காமத்துப்பால் : 10 பாடல்கள் (1 அதிகாரம்) மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று.
இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.
இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும்,
நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது.
இதன் ஆசிரியர் விளம்பி என்ற ஊரில் பிறந்த நாகனார்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.
சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் அல்லது மூன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.
இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.
இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது
இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புக்களும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரபட்டுள்ளன.

    கல்வி (10)
    கல்லாதார் (6)
    அவையறிதல் (9)
    அறிவுடைமை (8)
    ஒழுக்கம் (9)
    இன்னா செய்யாமை (8)
    வெகுளாமை (9)
    பெரியாரைப் பிழையாமை (5)
    புகழ்தலின் கூறுபாடு (4)
    சான்றோர் இயல்பு (12)
    சான்றோர் செய்கை (9)
    கீழ்மக்கள் இயல்பு (17)
    கீழ்மக்கள் செய்கை (17)
    நட்பின் இயல்பு (10)
    நட்பில் விலக்கு (8)
    பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் (7)
    முயற்சி (13)
    கருமம் முடித்தல் (15)
    மறை பிறர் அறியாமை (6)
    தெரிந்து தெளிதல் (13)
    பொருள் (9)
    பொருளைப் பெறுதல் (8)
    நன்றியில் செல்வம் (14)
    ஊழ் (14)
    அரசியல்பு (17)
    அமைச்சர் (8)
    மன்னரைச் சேர்ந்தொழுகல் (19)
    பகைத்திறம் தெரிதல் (26)
    படைவீரர் (16)
    இல்வாழ்க்கை (21)
    உறவினர் (9)
    அறம் செய்தல் (15)
    ஈகை (15)
    வீட்டு நெறி (13)

முதுமொழிக்காஞ்சி


மதுரைப் பதியைச் சேர்ந்த கூடலூர்க் கிழார் என்பவர் இயற்றியது முதுமொழிக்காஞ்சி.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் தமிழ் நூல் தொகுதியில் மிகச் சிறியது இது.
ஒவ்வொன்றும் பத்து அடிகளைக் கொண்ட பத்துப் பாடல்களை மட்டுமே கொண்டுள்ளது.
இந் நூலிலுள்ள எல்லாப் பாடல்களுமே,     ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் என்றே தொடங்குகிறது.
பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப் பத்துப் பெயர்களும் வருமாறு:

    சிறந்த பத்து
    அறிவுப் பத்து
    பழியாப் பத்து
    துவ்வாப் பத்து
    அல்ல பத்து
    இல்லைப் பத்து
    பொய்ப் பத்து
    எளிய பத்து
    நல்கூர்ந்த பத்து
    தண்டாப் பத்து

திரிகடுகம்


திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.

இன்னா நாற்பது

நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன.
கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல்.
நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  நூற் தொகுதியுள் அடங்குவது.
உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல்.
இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன.
ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின் 'இன்னா நாற்பது' எனப் பெயர்பெற்றது.
ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு.

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.
உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம்.
ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.

ஏலாதி

பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்று ஏலாதி.
சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பரால் எழுதப்பட்டது இந்நூல். திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே.
ஏலாதியில் 80 பாடல்கள் உள்ளன. இந்நூலின் பெயர் ஏலத்தை முதலாகக் கொண்ட ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக்கூறி மக்களின் ஒழுக்கக் குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது.

சிறுபஞ்சமூலம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் அய்ந்து விடயங்கள் இருப்பதில்லை. இந் நூலை இயற்றியவர் காரியாசான் காரியாசான் என்ற சமணப் புலவர்.
தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து,இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது.

ஔவையார்

எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்.

அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார். ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால், சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.

ஔவையாரால் பாடப்பட்ட அரசர்கள்

வேந்தர்

    சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்

வள்ளல்கள்

    அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி ஆகிரோரை ஔவை பல பாடல்களில் போற்றியுள்ளார்.
    மூவேந்தர் பறம்புமலையை முற்றியிருந்தபோது அவன் வளர்த்த குருவிப் பாட்டம் பறந்து சென்று நெற்கதிர்களைக் கொண்டுவந்து தந்து பாரிக்கு உணவளித்தனவாம்.
    விறலியர் சமைத்த கீரையோடு சேர்த்துச் சமைத்து உண்பதற்கு ஔவையார் நாஞ்சில் வள்ளுவனிடம் அரிசி கேட்டாராம். இந்த வள்ளுவன் தன் தகுதிக்கு அரிசி தருவது இழிவு எனக் கருதி போர்க்களிறு ஒன்றைப் பரிசாகத் தந்தானாம். இதனைத் தேற்றா ஈகை எனக் குறிப்பிட்டு ஔவை வருந்துகிறார்.


குறிப்பு : இவற்றில் பெரும்பாலான உண்மைகள் விக்கிபீடியா இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. நன்றி : விக்கிபீடியா ta.wikipedia.com
Announcement !
உரையாடலில் சேர் (7)
7 கருத்துகள்
  1. Profile
    பெயரில்லா
    Said: thank you very uesful
    thank you very uesful
  2. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: Thanks for valuable points.........
    Thanks for valuable points.........
  3. karthick
    Profile
    karthick
    karthick
    Said: Excellent portal thanks for u...
    actually today(11/11/2013) i am register ur portal. pls give me all question all areas?
    Excellent portal thanks for u...
    actually today(11/11/2013) i am register ur portal. pls give me all question all areas?
  4. Kessal D
    Profile
    Kessal D
    Kessal D
    Said: Dear Karthic, You are eligible for the Tamilnadu Police TNUSRB Constable Selection Exam 2013. The educational Qualification for Constable Examination is as the same as TNPSC Group 4 Exam. One can apply for the TNUSRB Police Constable Exam, if he/ she has completed SSLC (10th Std). All the best!
    Dear Karthic, You are eligible for the Tamilnadu Police TNUSRB Constable Selection Exam 2013. The educational Qualification for Constable Examination is as the same as TNPSC Group 4 Exam. One can apply for the TNUSRB Police Constable Exam, if he/ she has completed SSLC (10th Std). All the best!
  5. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: This site is godfather to tnpsc students. Super
    This site is godfather to tnpsc students. Super
  6. Kessal D
    Profile
    Kessal D
    Kessal D
    Said: Thanks Susi madam....for your words of encouragement on tnpsc pothu tamil study materials...thanks
    Thanks Susi madam....for your words of encouragement on tnpsc pothu tamil study materials...thanks
  7. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: உங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது , சரியான நேரத்தில் பதிவிட்டதற்கு நன்றி ..உங்களது முயற்சிக்கு எங்களது வாழ்த்துக்கள் ..
    உங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது , சரியான நேரத்தில் பதிவிட்டதற்கு நன்றி ..உங்களது முயற்சிக்கு எங்களது வாழ்த்துக்கள் ..
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!