நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website
புத்தொழில்களை ஊக்குவிக்க ரூ.10 லட்சம் வழங்கும் தமிழக அரசு : (நன்றி:தினமலர்)

புத்தொழில்களை ஊக்குவிக்க ரூ.10 லட்சம் வழங்கும் தமிழக அரசு : (நன்றி:தினமலர்)

தமிழக  அரசின், 'ஸ்டார்ட் அப் டி.என்.,' நிறுவனம், புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. இதற்கான தகுதியான பயனாளிகள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அரசின் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ், 'டான்சிம்' எனப்படும் புத்தொழில் மற்றும் புத் தாக்க இயக்கம் செயல்ப டுகிறது. இது, 'ஸ்டார்ட் அப் டி.என்.,' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம், தமிழகத்தில் புத்தொழில் நிறு வனங்களுக்கு ஆதரவாக, முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி தருவது, சந்தை தொடர்புகளை ஏற்படுத்து வது உட்பட, பல்வேறு உதவிகளை செய்கிறது. அதன்படி, தமிழக புத் தொழில் ஆதார நிதி திட் டத்தின் கீழ், தொடக்க நிலையில் உள்ள புத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்ப டுகிறது. இது வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கிராமப்புற தவிர, சிறு தொழிற்சாலைகள், போன்ற ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங் கும் புத்தொழில் நிறுவ னங்களுக்கு, 15 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, புதிய வேலைவாய்ப்புகள் வாகும் என்பதால், கிராமங் களில் இருந்து நகரங்களுக்கு இளைஞர்கள் இடம்பெயர்வதும் தடுக்கப்படும். 

மேலும், பெண்களை முதன்மையான பங்குதாரர் களாக கொண்டு இயங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, 15 லட்சம் ரூபாயும்; காலநிலை மாற்ற மேலாண்மை, நிலைத்த நீடித்த வளர்ச்சி போன்ற வற்றை உள்ளடக்கிய பசுமை தொழில்நுட்பம் தொடர்பான புத்தொழில் நிறுவனங்களுக்கு, 15 லட் சம் ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படுகிறது.  


66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள்

66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள்

 மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் 04.10.2023 அன்று கானா நாட்டில் நடைபெற்ற 66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.


 "வள்ளலார் - 200"  - வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணை வெளியீடு

"வள்ளலார் - 200" - வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணை வெளியீடு

  "வள்ளலார் - 200" ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழாவில்  கடலூர் மாவட்டம், வடலூரில் 99 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணையினை வழங்கி, சிறப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்து, புகைப்பட கண்காட்சி மற்றும் அன்னதானத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 5.10.2023 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.     மேலும், "வள்ளலாரின் இறை அனுபவங்கள்" என்ற நூலினை வெளியிட்டார். 

அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்த அக்டோபர் 5 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் "தனிப்பெருங்கருணை நாள்" என கடைபிடிக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 5 ஆம் நாள் "தனிப்பெருங்கருணை நாளாக" கொண்டாடப்பட்டு வருகிறது. 

2022–2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், "உயிர்த்திரள் ஒன்றெனக்கூறி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானார் தருமசாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கமும் (25.05.2022) வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் (5.10.2022) ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் (5.02.2023) வரவிருப்பதால் இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா எடுக்கப்படும் இதற்கென ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவினை சிறப்புற நடத்திடும் வகையில் முனைவர் பி.கே.கிருட்டிணராஜ் வானவராயர் அவர்கள் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டு வள்ளலாரின் முப்பெரும் விழாவினை அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை, 52 வாரங்களுக்கு தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சிறப்பாக நடத்திட செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. 


148 பெண் ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா / தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் மானியம்

148 பெண் ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா / தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் மானியம்

 தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 148 பெண் ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா / தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ்   தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் புதிய ஆட்டோ ரிக்சாக்களை 5.10.2023 அன்று வழங்கினார். 

2022-2023 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில் "தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்கள், சொந்தமாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பினை உருவாக்கவும், அவர்களின் வருமானம் ஈட்டும் திறன் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டும், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா 1 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 10.07.2023 அன்று தலைமைச் செயலகத்தில், பத்து பெண் பயனாளிகளுக்கு புதிய ஆட்டோ ரிக்சாக்களுக்கான பதிவு ஆவணங்கள் மற்றும் அனுமதி ஆவணங்கள் வழங்கப்பட்டு இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 

மேலும், 15.08.2023 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருநங்கை ஓட்டுநர்களுக்கும் இம்மானியத் திட்டத்தினை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு மின்சாரம் / சி.என்.ஜி. / எல்.பி.ஜி. மூலம் இயங்கக் கூடிய ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்க தலா 1 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தினை தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கும், திருநங்கை ஓட்டுநர்களுக்கும் நீட்டித்து 16.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 148 பெண் ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா / தொழில்முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கு 1 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட புதிய ஆட்டோ ரிக்சா வாகனங்களை வழங்கும் விதமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  


ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையம் (Global Technology & Innovation Centre)

ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையம் (Global Technology & Innovation Centre)

 சென்னை, போரூரில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனம், எரிசக்தித் துறையில் தனித்திறன் வாய்ந்த 2500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் அமைத்துள்ள உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை (Global Technology & Innovation Centre)  5.10.2023 அன்று  தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். 

ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் (M/s. Hitachi Energy India Limited) ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமம், உலகெங்கிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட உலகளாவிய ஃபர்ச்சூன் (Global Fortune) 500 நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதன் துணை நிறுவனங்களில் ஒன்றான ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனம், சுவிட்சர்லாந்தினை தனது  தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதன் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் முன்னதாக பிப்ரவரி 2023ல், தனது எரிசக்தி திட்டத்தினை சென்னையில் தொடங்கியுள்ளது. தற்போது, இந்நிறுவனம், சென்னை, போரூரில் ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை அமைத்துள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தில், சுமார் 50,000 சதுர அடியில் ஒரு பிரத்யேக ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் எரிசக்தித் துறையில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்ற 2500 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில், 30-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres GCCs) தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. உலகளவில் தமிழ்நாட்டின் போட்டித்தன்மையை வெகுவாக அதிகரிக்க இவை பெரிதும் உதவும். 

கூ.தக. : 

  தமிழ்நாடு பல பொருளாதார குறியீடுகளில் அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வணிக நடைமுறைச் சட்டம் விதிகளில் / பெருமளவிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, அனுமதிகள் பெறுவதை இலகுவாக்கியதன் விளைவாக, தொழில் செய்வதற்கு உகந்த மாநிலங்களின் தரவரிசையில், 14-ஆம் இடத்திலிருந்த தமிழ்நாடு, வெகுவாக முன்னேறி தற்போது 3-ஆம் இடத்தை பெற்றுள்ளது.  2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கினை எய்துவதற்காக, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியதன் விளைவாக, 2021 மே மாதம் முதல் இதுநாள் வரை, 4,15,282 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோடி மதிப்பிலான 241 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

ரூ.2,97,196 முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளின் அடுத்த கட்டமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், சென்னையில் சிறப்பான முறையில் நடத்தி, பெருமளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மேற்கொண்டு வருகின்றது. 


 “ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்” சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா

“ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்” சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா

  “ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்” சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா 2.10.2023 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்வில், இந்திய விண்வெளி துறையில் சாதனை படைத்த விஞ்ஞானிகள்- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் முனைவர் கே. சிவன், முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, திருவனந்தபுரம் – திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநர் முனைவர் வி.நாராயணன், ஸ்ரீஹரிகோட்டா - சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் திரு. ஏ. இராஜராஜன், பெங்களுரு - யு.ஆர். ராவ் செயற்கைகோள் மையத்தின் இயக்குநர் திரு. எம். சங்கரன், மகேந்திரகிரி - உந்துவிசை வளாக இயக்குநர் திரு. ஜெ. ஆசிர் பாக்கியராஜ், சந்திராயன்- 2 திட்ட இயக்குநர் திருமதி மு. வனிதா, ஆதித்யா L1 திட்ட இயக்குநர் திருமதி நிகார் ஷாஜி, சந்திராயன்- 3 திட்ட இயக்குநர் திரு. ப. வீரமுத்துவேல் ஆகியோரை பாராட்டி, அவர்களுக்கு சால்வை அணிவித்து,  தலா 25 லட்சம் ரூபாய் , பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.  

சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப்  :  

 பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடர்கின்ற 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்தக் கல்வி உதவித்தொகைக்காக, பத்து கோடி ரூபாயில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும். 

விழா நாயகர்கள் பற்றி ...

டாக்டர் வீரமுத்துவேல் அவர்கள் – விழுப்புரத்தில் பிறந்தவர். கடந்த ஆகஸ்ட் 23-ஆம் நாள் ஏவப்பட்ட சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிகரமான இயக்குநர் .நிலாவை தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. 1959-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும், 1964-ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2013-ஆம் ஆண்டு சீனாவும்தான் இந்தச் சாதனையை செய்திருக்கிறார்கள். 2008-ஆம் ஆண்டு நிலாவை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கியது. 2023-ஆம் ஆண்டில் அந்த சாதனையின் எல்லையை அடைந்திருக்கிறது.  இதுவரை அறியப்படாத நிலவின் தென்துருவப் பகுதியை சந்திரயான்-3 தரையிறங்கி ஆராயத் தொடங்கியிருக்கிறது. அந்த சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக  தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ப. வீரமுத்துவேல்  செயல்பட்டுள்ளார். 

சந்திரயான் 1 திட்ட இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். 2008 அக்டோபர் 28-ஆம் நாள் அது நிலவை சுற்றத் தொடங்கியது. நிலவில் நீர்க்கூறுகள் இருப்பதை அதுதான் கண்டறிந்து சொன்னது. சந்திரயான்- 2, 2019 ஜூலை 15-ஆம் நாள் ஏவப்பட்டது. இதனுடைய திட்ட இயக்குநராக வனிதா செயல்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் இஸ்ரோ தலைவராக டாக்டர் சிவன் அவர்கள் இருந்தார். இப்போது ஏவப்பட்டது சந்திரயான் - 3. இதனுடைய திட்ட இயக்குநர் வீரமுத்துவேல். இதுதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.

 ஏ.ராஜராஜன் அவர்கள் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். இஸ்ரோவில் வெளியீட்டு அங்கீகார வாரியத் தலைவராக இருக்கிறார். ககன்யான், எஸ்.எஸ்.எல்.வி. போன்ற இஸ்ரோவுடைய விரிவடைகின்ற தேவைகளுக்கு திடமான மோட்டார்கள் தயாரிப்பதில் இவருடைய பங்கு அளப்பரியது. இஸ்ரோ மெரிட் விருதை 2015-ஆம் ஆண்டு பெற்றவர் இவர்.

எம்.சங்கரன் அவர்கள் திருச்சியில் பிறந்தவர். யு.ஆர்.ராவ் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றியவர். சந்திரயான் 1,2,3 – ஆகிய மூன்று திட்டங்களிலும் அவர் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றி இருக்கக்கூடியவர். சூரியனை பற்றி ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்தியா எல்-1 என்ற விண்வெளித் திட்டத்திலும் பணியாற்றியவர். தொழில்நுட்பக் கருவிகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்களில் ஒருவர் நம்முடைய எம்.சங்கரன் அவர்கள். 

 ஆசீர் பாக்கியராஜ் அவர்கள் - தூத்துக்குடியில் பிறந்தவர். ராக்கெட் எஞ்சின் விண்கல இயந்திரங்களின் உயர்சோதனைத் துறையில் பெரும் ஈடுபாடு கொண்டவர். ராக்கெட் நிலை ஒருங்கிணைப்புகளில் நவீன வசதிகளை நிறுவியவர். G.S.L.V.-யை இவருடைய குழுதான் ஒருங்கிணைத்தது. உயர் தொழில்நுட்பங்களை இணைப்பதில், இவருடைய பங்களிப்பு முக்கியமானது. 

டாக்டர் எம்.வனிதா அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குநராக இருந்த பெருமைக்குரியவர். மங்கல்யான் வடிவமைப்பிலேயும் முக்கியப் பங்காற்றியவர். இஸ்ரோவில் திட்ட இயக்குநராக பணியாற்றிய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவர். சிறந்த பெண் விஞ்ஞானி விருதையும் பெற்றவர்.  

 டாக்டர் நிகார் ஷாஜி அவர்கள் - தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். 1987 முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இஸ்ரோவின் சூரியன் ஆய்வுத் திட்டமான ஆதித்தியா எல் ONE திட்டத்தினுடைய திட்ட இயக்குநராக செயலாற்றினார். 

வி.நாராயணன் அவர்கள் குமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருவனந்தபுரம் திரவ உந்துசக்தி மையத்தின் இயக்குநராக இருக்கிறார். இஸ்ரோ தயாரித்த பெரும்பாலான ராக்கெட் தயாரிப்புகளில் இவருடைய பங்கு அளப்பரியது. சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப் பயன்படுத்திய மார்க்-3 ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். இஸ்ரோவின் சிறந்த விஞ்ஞானி விருதை இரண்டு முறை பெற்றவர் திரு. நாராயணன் அவர்கள். 

டாக்டர் சிவன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளை என்ற ஊரில் பிறந்தவர். 1982-ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்து 2018-ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக உயர்ந்த ஆற்றலுக்குரியவர். பி.எஸ்.எல்.வி. மூலம் 104 விண்கலங்களுக்கான திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ராக்கெட் அமைப்பு தொடர்பாக சித்தாரா-என்ற மென்பொருளை உருவாக்கியவர்.  

 மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பொள்ளாச்சி அருகில் கோத்தவாடி என்கின்ற கிராமத்தில் பிறந்தவர். 36 ஆண்டுகள் இஸ்ரோவில் பணியாற்றியவர். மூன்றாண்டு காலம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் திட்ட இயக்குநராக இருந்தவர். பல்வேறு விண்கலங்களை செலுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர். சந்திரயான்-1 வடிவமைப்பில் இந்தியக் கொடியை பொருத்தியவர் இவர்.

கிராம சபைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் 2.10.2023 , காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்றன.

கிராம சபைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் 2.10.2023 , காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்றன.

  அண்ணல் காந்தியடிகள்   "இந்தியா- கிராமங்களில் வாழ்கிறது” என்று சொல்லி, 'கிராம சுயராஜ்ஜியம்' எனும் கிராம தற்சார்பு நிலையை எல்லா கிராமங்களும் அடைய வேண்டும் என்று விரும்பினார்.  

தமிழ்நாட்டில் கிராமசபை வரலாறு : 

மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். காஞ்சிபுரம் பக்கம் இருக்கிற உத்தரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயகத் தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு இதை சொல்கிறது. யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்களோ அவர்கள் எல்லோருடைய பெயரையும் ஓலைச்சுவடியில் எழுதிக் குடத்தில் போடுவார்கள். அந்தக் குடத்தை குலுக்கி ஒரு ஓலையை எடுப்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட பெயரில் யாருடைய பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இதுதான் குடவோலை முறை. இப்படித்தான் தமிழ்நாட்டில் மக்களாட்சி என்ற அமைப்பே மலர்ந்தது. அந்த வகையில் பார்த்தால் கிராமங்களில்தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ‘கிராம சபை’ என்ற அமைப்பு தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சோழர் காலந்தொட்டே பழக்கத்தில் இருந்து வருகிறது. சோழப் பேரரசில் 'ஊர் மற்றும் மகாசபை' என்கிற இரு வேறு அவைகள் இருந்தது. இதில் மகாசபையை போன்றதுதான் தற்போதைய கிராமசபை என்று அறியமுடிகிறது. 

கிராம சபைகளின் முக்கியத்துவம் 

மக்களாட்சியின் ஆணிவேராக இருக்கிற கிராம சபைக் கூட்டங்களில் மக்களே நேரடியாக விவாதித்து, தங்களுடைய தேவைகளையும், பயனாளிகளையும் தேர்வு செய்வதிலும், வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள். இது இந்திய அளவில் நாடாளுமன்றம், மாநில அளவில் சட்டமன்றம் இருப்பதைப் போல, கிராம அளவில் கிராம சபையானது மக்கள் குரலை எதிரொலிக்கிற மன்றமாக அமைந்திருக்கிறது. 

கிராம சபைகள் குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெற வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 குறிப்பிட்டிருந்தாலும், அதை ஆண்டுக்கு நான்கு முறை என்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மாற்றி  அமைத்தார். தற்போதைய  அரசானது, இதை ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்று அதிகரித்திருக்கிறது.

அதன்படி, ஆண்டொன்றுக்கு முறையே *குடியரசு நாள், *உலக தண்ணீர் நாள், *தொழிலாளர் நாள், *விடுதலை நாள், *காந்தியடிகள் பிறந்தநாள் *உள்ளாட்சிகள் நாள் ஆகிய 6 நாட்களில் கிராமசபை நடைபெற்று வருகிறது. 

ஒரு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். நிதி ஆதாரங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டும். கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. *கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தை அங்கீகரித்தல், *ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றத்தினைக் கண்காணித்தல், *ஊராட்சிகளின் வரவு, செலவினங்களை ஆய்வு செய்தல், *பயனாளிகளைத் தேர்வு செய்தல், திட்டக் கண்காணிப்பு செய்தல் ஆகிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 

கிராம சபை ஒன்றுக்கு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.  


பசுமை மின்சாரத்தை சேமிக்கும் முயற்சியில் தமிழக அரசு  (நன்றி : தினமலர்)

பசுமை மின்சாரத்தை சேமிக்கும் முயற்சியில் தமிழக அரசு (நன்றி : தினமலர்)

 தமிழ்நாட்டில் 6,200 மெகா வாட் திறனில் சூரியசக்தி; 10,170 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. சூரியசக்தி மின்சாரம் பகலிலும்; காற்றாலை மின்சாரம் மே முதல் செப்., வரையும் அதிகம் கிடைக்கிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத இரு வகை பசுமை மின்சார மும் உற்பத்தியான உடனே பயன்படுத் தப்படுகிறது. அந்த மின்சாரத்தை சேமித்து வைத்து, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம் நாட்டில் இல்லை. அதேசமயம் வெளி நாடுகளில், 'கண்டெய்னர்' போன்ற வடிவம் உடைய பேட்டரியில் பசுமை மின் சாரம் சேமிக்கப்பட்டு,தேவைக்கு ஏற்ப பயன் படுத்தப்படுகிறது. 

தமிழ்நாடு அரசு,தமிழக தொழில் முதலீடுகளை ஈர்க்க, 2024 ஜனவரி யில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத் துகிறது. இதற்காக, பல்வேறு நிறுவனங்களுடன், அரசு சார்பில் பேச்சு நடத்தப்பட்டுவருகிறது.  

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் ராஜா அவர்கள், இந்தியாவில் தமிழ கத்தில் தான் காற்றாலை, சூரியசக்தி மின்சார உற்பத்தி, 50 சதவீதம் மேல் உள்ளது.  தமிழகத்தில், காற் றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய பசுமை மின்சாரத்தை சேமிக் கும், 'கிரீன் எனர்ஜி. ஸ்டோரேஜ்' படும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்து வதில், அரசு கவனம் செலுத்த உள்ளது எனக் கூறியுள்ளார். 


 "தமிழ்நாடு சுற்றுலா கொள்கை - 2023"  வெளியீடு

"தமிழ்நாடு சுற்றுலா கொள்கை - 2023" வெளியீடு

 சுற்றுலாத் துறையில் தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட "தமிழ்நாடு சுற்றுலா கொள்கை - 2023"   தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 26.9.2023 அன்று வெளியிட்டார்.  

"தமிழ்நாடு சுற்றுலா கொள்கை" - 2023ன் சிறப்பம்சங்கள் 

  • தொழில் அந்தஸ்து: இந்தக் கொள்கையானது சுற்றுலாத் திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்தை வழங்குகிறது, இதன்மூலம் இதுவரை தொழில்துறை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்களை சுற்றுலாத் துறைக்கும் விரிவுபடுத்தி, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிலையிலான பங்குதாரர்களின் நீண்டகால கோரிக்கையை சுற்றுலா கொள்கை பூர்த்தி செய்கிறது. 
  • முன்னுரிமை சுற்றுலா பிரிவுகள்: சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்டுள்ளது. நிலைப்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் அளிக்கப்படும். 
  • சுற்றுலாத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர அனுமதி: அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதியுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும். தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தகுதியான சுற்றுலாத்திட்டங்கள்: தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள்/ முகாம்கள், ரோப்வேகன்கள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம் / மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம் பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 
  • ஊக்கத்தொகை வகை A திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் திட்டங்கள்)  (ரூ.50 கோடி வரையிலான முதலீட்டில் 25% அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும். 
  • பெண்கள் / எஸ்சி / எஸ்டி / திருநங்கைகள் / மாற்றுத்திறனாளி (திவ்யாங்) நபர்களால் ஊக்குவிக்கப்படும் திட்டங்களுக்கு 5% அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும். 
  • நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு 5% அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும். 
  • குறு நிறுவனங்களுக்கு 10% அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.
  •  20 நபர்களுக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். 
  • குறு/சிறு நிறுவன, புதிய மற்றும் விரிவாக்க சுற்றுலாத் திட்டங்களுக்கான வட்டி மானியத்தை திரும்ப பெறுவதற்கும், தேசிய மற்றும் பன்னாட்டு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கான மானியமும் வழங்கப்படும். 
  • வகை B திட்டப்பணிகள் (ரூ.50 கோடி முதல் 200 கோடி வரையிலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்) .  5% அதிகபட்சமாக ரூ. 3 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும். 
  • 20 பேருக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். தேசிய தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.2 இலட்சம் வரையிலான மானியமும், பன்னாட்டு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.10 இலட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படும்.
  •  நிறுவனங்களில் பசுமை முன் முயற்சி திட்டங்களுக்கான ஊக்கத்தொகையாக 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை வழங்கப்படும். 
  • வகை C திட்டப்பணிகள் (ரூ.200 கோடிக்கு மேலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்) நிறுவனங்களின் திட்டங்கள் அடிப்படையில் கட்டமைப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  •  நிறுவன பயன்பாட்டிற்கான மின்கட்டணம் • முக்கிய சுற்றுலாத்தலங்களில் புதிய விடுதிகளுக்கு வணிக மின் கட்டணம் மற்றும் நிறுவன மின் கட்டண வித்தியாச தொகை முதலீட்டுத் தொகையில் 10% வரை அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும். 
  •  ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள மற்றும் குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய திட்டங்களுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்திய சான்றிதழ் ஆய்வு அடிப்படையில், மின் பயன்பாட்டில் கட்டணச் சலுகைகள் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும்.  


 தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி

தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி

 தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி பதிவு செய்வதற்கான http://tva.reg.payil.app என்ற இணையதளத்தை  முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 26.09.2023 அன்று தொடங்கி வைத்தார். 

தமிழ்ப் பரப்புரைக் கழகம் பற்றி …

 அயலக மாணவர்களின் தமிழ்க்கற்றல் கற்பித்தலுக்காக தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை செப்டம்பர் 2022-இல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். 

இத்திட்டத்தின் பணிகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இதில் திறன்கள் அடிப்படையிலான பாடப்புத்தகங்கள், கற்றல் துணைக்கருவிகள், கட்டணமில்லா இணையவழி வகுப்புகள் முதலான பல வசதிகள் 34 நாடுகளிலும் 16 இந்திய மாநிலங்களிலும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் 160 தொடர்பு மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்தத் தொடர்பு மையங்களில், மாணவர்களுக்குத் தன்னார்வலர்கள் தமிழ் பயிற்றுவித்து வருகின்றனர். 

 இணையவழி ஆசிரியர் பட்டயப் பயிற்சி பற்றி…

தமிழ் மொழியின் அடிப்படைகளையும் முறையான கற்பித்தல் பயிற்சியையும் இவர்களுக்கு வழங்கினால் தமிழ் மொழிக் கற்பித்தலை இன்னும் மேம்படுத்த முடியும் எனப் பல அயலகத் தமிழ்ச்சங்கங்களும் பள்ளிகளும் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழ் பரப்புரைக்கழகத்தின் மற்றொரு முக்கியமான முன்னெடுப்பாகத் தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான இணையவழி ஓராண்டு ஆசிரியர் பட்டயப்பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டது.

இந்தப் பட்டயப்பயிற்சியைத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க 12.01.2023 அன்று நடைபெற்ற அயலகத் தமிழர் தினவிழாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

தற்போது இந்தப் பட்டயப்பயிற்சியைத் தொடங்குவதற்கான பணிகள் முடிவடைந்து, இந்தக் கல்வித்திட்டத்தில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பை (http://tva.reg.payil.app/)  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.


கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி செலுத்துவதற்கான  TNPASS ( vptax.tnrd.tn.gov.in )  என்ற  புதிய இணையதளம் தொடக்கம்

கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி செலுத்துவதற்கான TNPASS ( vptax.tnrd.tn.gov.in ) என்ற புதிய இணையதளம் தொடக்கம்

 கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி செலுத்துவதற்கான  TNPASS என்ற  புதிய இணையதளத்தை முதலமைச்சர் 26.9.2023 அன்று தொடங்கி வைத்தார். அதன்படி, பொதுமக்கள் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம், வரியல்லாத கட்டணங்கள் போன்றவற்றை  https://vptax.tnrd.tn.gov.in/  என்ற இணையதளத்தின் மூலம் செலுத்தலாம். இந்த இணையதளத்தை  தேசிய தகவலியல் மையம் (National Informatics centre) வடிவமைத்துள்ளது. 

இவ்விணையதளத்தின் மூலமாக இணைய வழி கட்டணம் (Online Payment), ரொக்க அட்டைகள் (Debit / ATM Cards Payment), கடன் அட்டைகள் (Credit Card Payment), யுபிஐ கட்டணம் (UPI Payment) மூலம் பணத்தினை செலுத்திட முடியும். இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக 24x7 முறையில் எந்த நேரத்திலும் வரி/ கட்டணம் செலுத்திட இயலும். இந்த நடவடிக்கையின் மூலம் ஊராட்சி பணியாளர்களின் பணிச்சுமை பெருமளவு குறையும்.


தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் - நீதியரசர் திருமதி ஆர். தரணி

தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் - நீதியரசர் திருமதி ஆர். தரணி

 தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் நீதியரசர் திருமதி ஆர். தரணி

கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!