நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs in Tamil 9 & 10 March 2021

TNPSC  தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 9-10 மார்ச் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ் நாடு

☛  12 தமிழக அரசியல் கட்சிகளுக்கு பொது சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அவற்றின் விவரம் வருமாறு, மனிதநேய மக்கள் கட்சி - கத்தரிக்கோல், ஜனசங்கம் பார்ட்டி ஆஃப் இந்தியா - வெண்டைக்காய், வஞ்சித் பகுஜன் ஆகாதி - கிராமபோன், மக்கள் ராஜ்யம் கட்சி - தலையணை, நம் இந்தியா நாம் இந்தியர் கட்சி - அன்னாசிப்பழம், பாரத சேவைக் கட்சி - ரப்பர் ஸ்டாம்ப், நேஷனல் டெமாக்ரசி பார்ட்டி ஆஃப் சவுத் இந்தியா - குளிர்சாதன பெட்டி, மக்கள் திலகம் முன்னேற்றக் கழகம் - பலூன், அவர்மகாத்மா நேஷனல் பார்ட்டி - கேஸ் ஸ்டவ், மை இந்தியா பார்ட்டி - சிசிடிவி கேமரா, பாரத மக்கள் கட்சி - ஹெல்மெட், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் - டியூப் லைட் 

☛  கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சேதமடைந்த நிலையில், சுடுமண் மூடி குமிழ் கண்டறியப்பட்டது. இது 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த மூடி குமிழ், தண்ணீர் வைக்க பயன்படுத்தப்படும் மண் பானை மூடி போன்ற அமைப்பை உடையதாக உள்ளது. மிகவும் சிறியதாக இருப்பதால் 2,600 ஆண்டுகளுக்கு முன் சிறுமியரின் விளையாட்டு பொருளாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


இந்தியா

☛  இந்தியாவின் முதல் ’காடுகளின் மூலம் சுகமாக்கும் மையம்’ ( Forest Healing centre )  உத்தரகண்ட் மாநிலம் ராணிக்கேட்டில் அமைந்துள்ள காட்டில்  சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் உத்தரகண்ட் வனத்துறையின் ஆராய்ச்சி பிரிவினால் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 9-3-2021 அன்று பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜோகிந்தர் பிஷ்ட் (Joginder Bisht) தொடங்கி வைத்துள்ளார்.  இயற்கையுடனான நேரடி தொடர்புக்கு கொண்டு வருவதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பெற முடியும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. 

☛  உலகளவில்  மின் - வணிக குறியீடு 2020 (UNCTAD B2C E-commerce Index 2020)- ல் இந்தியா 71 வது இடத்தைப் பெற்றுள்ளது.     ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான (United Nations Conference on Trade and Development (UNCTAD)) அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் முதலிடத்தை சுவிட்சர்லாந்து நாடு பெற்றுள்ளது. 

☛  ”இண்டர்நெட் சாதி திட்டம்” (Internet Saathi) என்பது,  இந்தியாவில், கிராமப்புற பெண்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கோடு,   கூகுள் இந்தியா (Google India), இன்டெல் (Intel) மற்றும் டாடா டிரஸ்ட் (Tata Trusts) ஆகியவற்றால் இணைந்து 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமாகும். 

☛  மத்திய பிரதேச மாநிலத்தில் மத சுதந்திர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  
புதிய சட்டத்தின்படி, ஒருவர் மதம் மாற விரும்பினால் 60 நாட்களுக்கு முன்பாக ஆட்சியரிடம் விண்ணப் பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மதபோதகரும் 60 நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோரை கட்டாயப் படுத்தியோ, ஏமாற்றியோ மத மாற்றம் செய்தால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
ஒன்றுக்கும் மேற்பட்டோரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டு கள் வரை சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் வரை மதமாற்ற திருமணங்கள் ரத்து செய்யப்படும் என பல அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
☛  இந்தியாவின் முதலாவது,  ‘உலக திறன் மையம்’ (World Skill Center)  1342.2 கோடி ரூபாய் செலவில் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள மான்செஸ்வர் எனுமிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஒடிசா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (About Asian Development Bank) நிதியுதவியுடன்  சிங்கப்பூரைச் சேர்ந்த ITE Education Services (ITEES) எனும் நிறுவனத்தின் அலோசனையுடன் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 
☛  இந்தியாவின் முதல்  பாலின பட்ஜெட்டை (Gender Budget), பெண்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில்,  2021-2022 ஆம் ஆண்டின் நிதியாண்டில் வெளியிடவுள்ளதாக  ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 
☛  ”டாக்டர்.அம்பேத்கர் சாதி கலப்பு திருமணங்களின் மூலம் சமூக ஒற்றுமைக்கான திட்டம்” ( ‘Dr. Ambedkar Scheme for Social Integration through Inter-Caste Marriages’)   2014-15 ஆண்டில் டாக்டர்.அம்பேத்கர் பவுண்டேஷனினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்,  ரூ.5 இலட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானமுள்ள சாதி கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் (ஏதேனும் ஒருவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்) ரூ.2.50 இலட்சம் ஊக்கத்தொகையை பெறலாம்.
கூ.தக. :  ‘சமூக ஒற்றுமை வழிகாட்டு நெறிமுறைகள்’  (Communal Harmony guidelines) மத்திய உள்துறை அமைச்சகத்தால் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
☛  ”ஸ்டேண்ட் அப் இந்தியா திட்டம்”  (‘Stand Up India Scheme’) பற்றி...
இந்த திட்டம் 5 ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. தற்போது, மத்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டுவரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.  
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் நோக்கம், உற்பத்தி, சேவைகள், பசுமை தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை  அமைப்பதற்காக  அல்லது வர்த்தகத் துறையில்  தொழில் தொடங்கும்,  பட்டிலின வகுப்பினர் (Scheduled Caste (SC)) மற்றும் பழங்குடியினருக்கு (Scheduled Tribe (ST)) ரூ.10 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான  கடனுதவியை  பட்டியல் வர்த்தக வங்கிகள் ( Scheduled Commercial Banks (SCBs)) மூலமாக (ஒவ்வொரு வங்கிக் கிளையின் மூலம் குறைந்தது  பட்டியலின நபர் மற்றும் ஒரு பெண் பயனருக்கு) வழங்குவதாகும்.  
2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி, இத்திட்டத்தின் கீழ் பெறும்,  கடன்களுக்கான மார்ஜின்  பணத் தொகை (margin money requirement ) '25%' முதல் '15%' வரை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் விவசாயத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இத்திட்டத்தில் புதிதாக  சேர்க்கப்பட்டுள்ளன. ரூ .50 க்கு இடையில் மதிப்புள்ள திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளிடமிருந்து (எஸ்சிபி) கடன்களை எளிதாக்குவதாகும். உற்பத்தி, சேவைகள் அல்லது வர்த்தகத் துறையில் கிரீன்ஃபீல்ட் நிறுவனத்தை அமைப்பதற்காக குறைந்தபட்சம் ஒரு பட்டியல் சாதி (எஸ்சி) அல்லது பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) கடன் வாங்குபவர் மற்றும் ஒரு வங்கி கிளைக்கு ஒரு பெண் கடன் வாங்குபவருக்கு 10 லட்சம் மற்றும் ரூ .1 கோடி.
☛  உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் 9-3-2021 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

வெளிநாட்டு உறவுகள்

☛  ”டஸ்ட்லிக்” (‘Dustlik’) என்ற பெயரில்  இந்தியா மற்றும் உஷ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையே தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை 9-21 மார்ச் 2021 தினங்களில்  உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள ராணிகேட் எனுமிடத்தில் நடைபெறுகிறது. 

☛  ”நட்பு பாலம்” (மைத்ரி சேது)  : இந்தியா வங்கதேசம் இடையே கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி 9-3-2021 அன்று திறந்து வைத்தார். வடகிழக்கு மாநிலமான திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே பெனி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 1.9 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் திரிபுராவின் சப்ரூம் நகரையும் வங்கதேசத்தின் ராம்கரையும் இணைக்கிறது.  

உலகம்

☛  பர்கா மற்றும் நிகாப் (burqa and niqab) போன்றவற்றினால், பொது இடங்களில் முழுவதுமாக முகத்தை மறைப்பதற்கு சுவிட்சர்லாந்து அரசு 7-3-2021 அன்று தடை விதித்துள்ளது.  

☛  ஐக்கிய நாடுகளவையின் கோவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ்  தடுப்பூசியை நன்கொடையாகப் பெறும் முதல்நாடாக ஆப்பிரிக்க நாடானா கானா நாடு 6,00,000 டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.    ’ஆஸ்டிரா ஜெனிகா’ (AstraZeneca) நிறுவனத்தின் தயாரிப்பான இந்த  தடுப்பூசிகளை  இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது.   
☛  வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக தாஷ்னுவ அனன் ஷிஷிர்  நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய நியமனங்கள்

☛  இந்திய கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர் (Comptroller and Auditor General of India)  கிரிஷ் சந்திர முர்மு (Girish Chandra Murmu), ஐக்கிய நாடுகளவையின்  2021 ஆம் ஆண்டுக்கான வெளி தணிக்கையாளர்களின் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நித குழுவில்,  இந்தியாவைத் தவிர, ஜெர்மனி, சிலி, சீனா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் , பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, கானா, இந்தோனேசியா, கனடா மற்றும் ரஷ்யா ஆகிய 12 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 

புத்தகங்கள் 

☛  “The Frontier Gandhi: My Life And Struggle” என்ற பெயரில்  கான் அப்துல் காஃபர் கானின் (Khan Abdul Ghaffar Khan) சுயசரிதை ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை பாகிஸ்தானைச் சேர்ந்த அரசு குடிமைப்பணி அதிகாரி  இமிதியாஸ் அகமது சாகிப்ஜாதா (Imitiaz Ahmad Sahibzada) மொழிபெயர்த்துள்ளார். 

☛  ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் (shlokas of Srimad Bhagavadgita) பற்றி 21 அறிஞர்களின் வர்ணனைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதியை பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டார்.  

விருதுகள்
☛  உலகின் தலைசிறந்த 20 பெண்களுக்கான விருதை (Top 20 Global Women of Excellence award – 2021), தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பல்வேறு இன நடவடிக்கைக் குழு என்ற அமைப்பு சார்பில் வழங்கப்பட்டுள்ள 2020-ம் ஆண்டுக்கான இந்த விருதை அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸும் பெற்றுள்ளார்.
அறிவியல் தொழில்நுட்பம் 

☛  இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் (Defence Research & Development Organisation (DRDO))  உருவாக்கப்பட்டுள்ள  கடற்படைக்கான ‘அதிநவீன கடற்கணை (டார்பிடோ)  - சியெனா’ (‘Advanced Light Torpedo (TAL) Shyena’) 8-3-2021 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. 

☛  ”நிஷார்” (‘NISAR’ (NASA-ISRO SAR)) என்று பெயரிடப்பட்டுள்ள  இந்தியாவின் இஸ்ரோ (Indian Space Research Organisation (ISRO)) மற்றும் அமெரிக்காவின் நாசா ( National Aeronautics & Space Administration (NASA)) இணைந்து தயாரிக்கும் , புவி கண்காணிப்பிற்கான,   சிந்தெடிக் அஃபெர்சர் ரேடார் (Synthetic Aperture Radar (SAR)) தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த ”நிஷார்” (‘NISAR’ (NASA-ISRO SAR)) புவி கண்காணிப்பு திட்டத்தின் மூலம் முதல் செயற்கைக்கோள் 2020 ஆம் ஆண்டில் அனுப்பப்படவுள்ளது.

☛  நான்கு  ‘ஹெரான் டி.பி.’ (4 Heron TP medium-altitude, long-endurance (MALE)) எனப்படும்   ஆளில்லாபோர் விமானங்களை (Unmanned Aerial Vehicles) இஸ்ரேலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு வாடகைக்கு வாங்க இந்திய இராணுவம் முடிவு செய்துள்ளது. 
☛  5 நிமிடங்களில்  அதிவேகமாக சார்ஜாகும் லித்தியம்  பேட்டரியை அதிவேக ரீசார்ஜ் தொழில் நுட்பங்களில் நிபுணத்துவம் கொண்ட இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டோர்டாட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம்  உருவாக்கியுள்ளது.
விளையாட்டு

☛  சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற ’யோனெக்ஸ் சுவிஸ் ஓபன் 2021’ ( YONEX Swiss Open 2021) பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின்  பி.வி.சிந்து  வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 

☛  2020 ஆம் ஆண்டிற்கான பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை  செஸ் வீராங்கனை கொனேரு ஹம்பி (Koneru Humpy) வென்றுள்ளார்.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!