Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs 9-13 April 2021 in Tamil

TNPSC Current Affairs 9-13 ஏப்ரல் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினராக முன்னாள் வருவாய் நிர்வாகஆணையர் கே.சத்யகோபால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார் . முன்னதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனை நியமிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை - கன்னியாகுமரி தொழில் வழிதடத்தின் (Chennai-Kanyakumari Industrial Corridor(CKIC)) பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக 484 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank (ADB)) ஒப்புதல் வழங்கியுள்ளது.

கூ.தக. : 1966 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையிடம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ்(63) நுரையீரல் பாதிப்பு காரணமாக 11-4-2021 அன்று உயிரிழந்தார் .

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்காக ஜப்பான் கடன் உதவி நிறுவனமான ஜெய்கா நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூ.தக. : மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது ரூ.1264 கோடியில் இப்பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னையைத் தேசிய தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் (Intellectual Property Appellate Board (IPAB)) மத்திய அரசின் அவசரச் சட்டத்தின் (Centre through its Tribunals Reforms (Rationalization and Conditional Services) Ordinance, 2021) மூலம் 4-4-2021 அன்று கலைக்கப்பட்டுள்ளது.

கூ.தக. அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் ‘டிரேட் மார்க் சட்டம் 1999’(Trade Marks Act 1999 ) -ன் படி, 2003 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும்.

இந்தியா

“மாஸ்க் அபியான்” ( “Mask Abhiyan” ) என்ற பெயரில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்துவதற்கான திட்டத்தை ஒடிஷா மாநில அரசு தொடங்கியுள்ளது.

”லிட்டில் குரு செயலி” (‘Little Guru’ app) என்ற பெயரில் எளிய முறையில் சமஸ்கிருத மொழி கற்பதற்கான மொபைல் செயலியை இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுண்சில் (ICCR - Indian Council for Cultural Relations) சீனாவின் பீஜிங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் வெளியிட்டுள்ளது.

"அனாமயா திட்டம்” (‘Anamaya – the Tribal Health Collaborative’) என்ற பெயரில், பழங்குடியின மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டத்தை , மத்திய சுகாதாரத்துறை மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகம் இணைந்து தொடங்கியுள்ளன.

’அனாமயா’ திட்டத்தைப் பற்றி ...

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிரமல் அறக்கட்டளை ஆகியவை அரசுக்கு ஆதரவளிக்கும்.

இந்தியாவில் பழங்குடி சமூகங்களின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து சூழல் அமைப்பை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பழங்குடியினரின் சுகாதார பராமரிப்பு தேவைகளை கண்காணிக்க பழங்குடி சுகாதாரத்திற்கான தேசிய கவுன்சில் (National Council on Tribal Health) மற்றும் பழங்குடி சுகாதார கண்காணிப்பு மையம் (Tribal Health Cell ) ஆகியவை அமைக்கப்படும்.

இது நாட்டில் உள்ள பழங்குடி சமூகங்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சிகளை ஒருங்கிணைக்கும்.

இந்தியாவில் ’டிகா உத்சவ்’ (‘Tika Utsav’) என்ற பெயரில் கரோனா தடுப்பூசி திருவிழா 11-14 ஏப்ரல் 2021 தினங்களில் நாடு முழுவதும் நடைபெறுகிறது.

உத்தரபிரதேசத்தின் மதரஸாக்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (CBSE - Central Board of Secondary Education) நிறுவனத்தில் பதிவு செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் பலனாக மதரஸாக்களில் பயிலும் மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பயில முடியும்.

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட் அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

தீவிரமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிா் ஊசி மருந்துக்கு தேவை அதிகரித்துள்ளதால், அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
’மதுகிரந்தி போர்ட்டல்’ (Madhukranti portal) என்ற பெயரில் தேனீ வளர்ப்பிற்கான இணையதள சேவையை தேசிய தேனீ வாரியம் ( National Bee Board) தொடங்கியுள்ளது.

’ஹனீ கார்னர்ஸ்’ (Honey Corners) என்ற பெயரில் தேன் விற்பனைக்கான பிரத்தியேக மையங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த மையங்கள் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் ( National Agricultural Cooperative Marketing Federation) மூலம் நிர்வகிக்கப்படும்.

உலகளவில், 10 கோடி டோஸ் கொவிட் தடுப்பூசிகள் போட்ட வேகமான நாடாக இந்தியா உள்ளது . இந்த அளவை, 85 நாளில் இந்தியா சாதித்துள்ளது. இந்த அளவை எட்ட அமெரிக்கா 89 நாட்களும், சீனா 102 நாட்களும் எடுத்தன.

’ஆகார் கிராந்தி’ (`Aahaar Kranti’) என்ற பெயரில் தேசிய அளவிலான திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிக்கவுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊட்டச்சத்து உணவின் தேவை பற்றிய செய்தியை பரப்புவதோடு, அனைத்து உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை மக்களிடையே உணர்த்துவதுமாகும்.

ஆசியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகத்திற்கான பூர்த்தி மையம் (fulfillment center) ஹரியானா மாநிலத்தின், குருகிராமின் மானெசர் எனுமிடத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தால் அமைக்கப்படுகிறது.

இந்தியாவில் ‘பசுமை கடன் பத்திரங்களை’ (green bonds) வெளியிட்டுள்ள முதல் மாநகராட்சி எனும் பெருமையை உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஷியாபாத் மாநகராட்சி (Ghaziabad Municipal Corporation) பெற்றுள்ளது.

’சரிதாக்’ (SARTHAQ - ‘Students’ and Teachers’ Holistic Advancement through Quality Education) என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 8-4-2021 அன்று வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் முதலாவது, முழுமையாக மின்மயமாக்கப்பட்டுள்ள இரயில்வே மண்டலம் (the first fully electrified Indian railway zone) எனும் பெருமையை மேற்கு மத்திய இரயில்வே மண்டலம் (West Central Railway) பெற்றுள்ளது.

கூ.தக. : மேற்கு மத்திய இரயில்வேயின் தலைமையிடம் மத்தியப் பிரதேச மாநிலத்தின், ஜபல்பூரில் (Jabalpur) உள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி என்ற கரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரகாலத் தேவைக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் 13-4-2021 அன்று வழங்கியுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து கொரோனாவிற்கு எதிராக 91.6% செயல்திறன் கொண்டதாகும். நாட்டில் இதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், தொடர்ந்து இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 3வது தடுப்பூசி இதுவாகும்.

கூ.தக. : ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா ஆகியவற்றின் கூட்டுடன் பூனேவிலுள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கோவாக்ஸின்’ தடுப்பூசியை ஹைதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு உறவுகள்

’சுதந்திர கடற்பயண நடவடிக்கை’ ( Freedom of Navigation Operation) என்ற பெயரில் அமெரிக்க கடற்படையின் ஒத்திகை இலட்சத்தீவிற்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடலில் நடைபெற்றது. இந்த நடவடிக்கையின் போதும், அமெரிக்க கடற்படைக் கப்பல், இந்தியாவின் அனுமதியின்றி, இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலப் (Exclusive Economic Zone of India) பகுதியில் நுழைந்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்தியாவில் தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கண்டறியும் வகையில், அடல் புதுமை இயக்கம் (Atal Innovation Mission) மூலம் முன்னெடுப்புகளை மேற்கொள்ள இந்தியா-டென்மார்க் நாடுகளிடையேயான ஒத்துழைப்பு 12-4-2021 அன்று அறிவிக்கப்பட்டது.

ஆப்பிரிக்க நாடான செஷல்ஸ் தீவுக்கு 50 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இதுவரை 84 நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசியை வழங்கியுல்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வங்கதேசத்தில் 11-4-2021 அன்று நடைபெற்ற ராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே பங்கேற்றாா் .

‘ஐ.என்.எஸ். சர்வேக்‌ஷாக்’ (INS Sarvekshak) என்ற பெயரிலான இந்திய கடற்படைக் கப்பல், மெளரீசியஸ் கடற்படையுடன் இணைந்து 'ஹைட்ரோகிராபிக்’ எனப்படும் நீரப்பரப்பு கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது.

பருவநிலை மாற்றத்திற்கான அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதுவர் ( United States(US) Special Presidential Envoy for Climate) ஜான் கெர்ரி (John Kerry) அரசுமுறைப் ப்யணமாக 5-8 ஏப்ரல் 2021 தினங்களில் இந்தியா வருகை புரிந்தார்.

ரஷிய நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்கி லவ்ரோவ் (Sergey Lavrov) அரசு முறைப் பயணமாக 5 ஏப்ரல் 2021 அன்று இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜீன்-ஒய்வ்ஸ் லி டிரையன் மூன்று நாள் பயணமாக 13-4-2021 அன்று இந்தியா வருகை தந்துள்ளார்.

’ஃபேசிக்’ (BASIC - Brazil, South Africa, India & China) நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான 30 வது அமைச்சர்கள் கூடுகை 7-8 ஏப்ரல் 2021 தினங்களில் இந்தியாவின் தலைமையில் மெய்நிகர் வாயிலாக நடைபெற்றது.

கூ.தக. : 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஃபேசிக் அமைப்பில் பிரேசில். தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

’புதிய முக்திஜோத்தா கல்வி உதவித் தொகை திட்டம்’ (New Muktijoddha Scholarship scheme) என்ற பெயரில் 2000 வங்க தேச விடுதலைப் போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை இந்திய அரசு அறிவித்துள்ளது.

’ஸ்வர்ண ஜெயந்தி கல்வி உதவித்தொகை’ (Swarna Jayanti scholarship) என்ற பெயரில், வங்காளதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் 26-3-2021 அன்று வங்கதேச பயணத்தின் போது அறிவித்துள்ளார்.

பஹ்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாதிஃப் பின் ரஷித் அல்சயானி (Abdullatif bin Rashid AlZayani) அரசுமுறைப் பயணமாக 6-8 ஏப்ரல் 2021 தினங்களில் இந்தியா வருகைபுரிந்தார்.

’லா பெரோஸ்’ ( ‘La Perouse’) என்ற பெயரில் பிரான்ஸ் நாட்டினால் 5-7 ஏப்ரல் 2021 தினங்களில், கிழக்கு இந்திய கடல்பகுதியில் நடத்தப்பட்ட பன்னாட்டு கூட்டு கடற்படை ஒத்திகையில் இந்திய கடற்படையும் கலந்து கொண்டது.

சர்வதேச நிகழ்வுகள்

செயிண்ட் வின்செண்ட் (St. Vincent) தீவில் உள்ள ’லா சோஃப்ரியெரி எரிமலை’ (La Soufrière volcano) வெடித்துள்ளது.

பூட்டான் நாட்டிலுள்ள 93% வயது வந்த குடிமக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியை செலுத்தி, அந்நாடு சாதனை படைத்துள்ளது.

‘பிரிட்டிஷ் அகதமி திரைப்பட விருதுகளில்’ (British Academy Film Awards) சிறந்த திரைப்படம், இயக்குநர் மற்றும் திரைக்கதையமைப்பிற்கான விருதை ‘நொமாட்லேண்ட்’ (Nomadland) எனும் அமெரிக்க திரைப்படம் பெற்றுள்ளது. இதனை ச்லோ ஷாவோ (Chloé Zhao) என்பவர் இயக்கியுள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் முதல் விண்வெளி வீராங்கனையாக 27 வயதான நோரா அல் மத்ருஷி என்ற வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார் . இவருடன், முகம்மது அல் முல்லா என்ற நபரும் விண்வெளி பயணத் திட்டத்திற்கு தேர்வு செய்யபப்ட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்ட இருவருக்குமான பயிற்சி, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி திட்டத்துடன் இணைந்து விரைவில் மேற்கொள்ளப்படும்.

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரும் லூலூ குழுமத்தின் தலைவருமான யூசுப் அலிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டுள்ளது.

எகிப்தின் லக்ஸர் எனுமிடத்தில் 3,000 ஆண்டுகள் பழமையான இழந்த நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரத்தை மன்னர் மூன்றாம் அமென்ஹோடெப்பின் பேரன் துதன்கமுன் மற்றும் துதன்கமுனின் மகன் அய் ஆகியோர் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான இளவரசா் பிலிப் 9-4-2021 அன்று காலமானாா்.

பாகிஸ்தானைச் சோந்த மனித உரிமை ஆா்வலா் ஐ.ஏ. ரஹ்மான் (90) 12-4-2021 அன்று காலமானார் . பாகிஸ்தானின் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவா்களுக்காக தொடா்ந்து குரல் கொடுத்து வந்த அவா் இந்தியாவின் அரியானாவில் பிறந்தவா்.

’செரோஜா புயல்’ (Seroja) ஆஸ்திரேலியா நாட்டைத் தாக்கியுள்ளது.

'மத்திய ஆசியா' ('Central Asia' ) என்ற பெயரில் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சர்வதேச மையத்தை உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் நாடுகள், அந்நாடுகளின் எல்லைப்பகுதியில் உருவாக்கியுள்ளன.

பொருளாதாரம்

இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரான கடன் விகிதம் (debt to Gross Domestic Product (GDP) ratio) 2019 ஆம் ஆண்டின் இறுதியில் 74% என்றிருந்தது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 90 % ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச நாணைய நிதியம் (International Monetary Fund(IMF)) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நியமனங்கள்

இந்தியாவின் 24 வது தலைமை தேர்தல் ஆணையராக (Chief Election Commissioner) சுஷில் சந்திரா (Sushil Chandra) நியமனம் செயப்பட்டுள்ளார் . சுஷில் சந்திரா 13 ஏப்ரல் 2021 முதல் 2022 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி வரை தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார். தற்போதைய, தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சிநீல் அரோரா ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திராவை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.

முக்கிய தினங்கள்

விண்வெளியில் மனிதனின் பயணத்திற்கான சர்வதேச தினம் (International Day of Human Space Flight) - ஏப்ரல் 12 | 1961 ஆண்டின் இதே தினத்தில் தான் ரஷியாவின் யூரி காரின் விண்வெளிக்கு பயணித்த முதல் மனிதன் எனும் பெருமையைப் பெற்றார்.

தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் (National Safe Motherhood Day) - ஏப்ரல் 11

உலக டேபிள் டென்னிஸ் தினம் (World Table Tennis Day) - ஏப்ரல் 6

உலக ஹோமியோபதி தினம் (World Homoeopathy Day) - ஏப்ரல் 10

அறிவியல் & தொழில்நுட்பம்

“நானோஸ்னிஃபர்” (NanoSniffer) என்ற பெயரில் வெடிக்கக் கூடிய அபாயமுள்ள பொருட்களை 10 நொடிகளுக்குள் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் கருவியை ஐ.ஐ.டி. மும்பையின் உதவிபெற்ற தொழில்முனைவு நிறுவனமான நானோஸ்னிஃப் டெக்னாலஜிஸ் ( NanoSniff Technologies) உருவாக்கியுள்ளது.

விளையாட்டுகள்

அமெரிக்காவில் நடைபெற்ற சாா்லஸ்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் வெரோனிகா குதா்மெடோவா சாம்பியன் ஆனாா். இது அவரது முதல் டபிள்யூடிஏ பட்டமாகும்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

ஒடிசா முன்னாள் முதல்வர் ‘உத்கல் கேசரி’ ஹரேகிருஷ்ணா மஹதாப் (Dr. Harekrushna Mahtab) எழுதிய ‘ஒடிசா இதிகாசம்’ (Odisha Itihaas) என்ற நூலின் இந்தி மொழிபெயர்ப்பு பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

4 கருத்துகள்:

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot