மூத்த தமிழறிஞர் இரா.இளங்குமரனார் காலமானார் :
- திரு. இரா.இளங்குமரனார் 30.1.1927-ல் நெல்லை மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தார்.
- முழுமையாக கிடைக்கப்பெறாமல், காலத்தால் செல்லரித்துப்போன குண்டலகேசி காப்பியத்தை தன்னுடைய கற்பனைத் திறனாலும், கவிதை இயற்றும் ஆர்வத்தாலும் முழுமை செய்து. அந்நூலினை 1958-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.
- 1963-ல் இவர் எழுதிய திருக்குறள் கட்டுரை தொகுப்பு நூலை, தமிழகம் வந்திருந்த அன்றைய பிரதமர் நேரு வெளியிட்டார்.
- புறநானூற்றை எளிய தமிழில் எழுதி, அந்தத் தொகுப்பு நூலை 2003-ம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெளியிட்டார்.
- 4,865 தமிழ் முறைத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.
- திருச்சியில் திருவள்ளுவர் தவச்சாலை என்ற பெயரில் தமிழ்ப்பணி ஆற்றினார்.
- தமிழ்ச் சங்கம் குறித்த வரலாற்று நூலையும் இவர் எழுதியிருக்கிறார்.
- பாவாணர் வரலாறு , பாவாணர் மடல்கள் (இருதொகுதி) , பாவாணர் வேர்ச்சொல்லாய்வுத் தொகுப்பான 'தேவநேயம்' (14தொகுதி) , தமிழ்ச் சொற்களுக்குப் பொருட்காரணம் தரும் அருமுயற்சிப் பெருந்தொகுப்பு 'செந்தமிழ்ச் சொற்பொருட்களஞ்சியம்' (பத்துத்தொகுதி) என 500க்கும் அதிகமான தனித்தன்மையான நூல்வரிசைகளை இரா.இளங்குமரனார் வழங்கி உள்ளார்.
- அழிந்துபோன நூல்களாகக் கருதப்பட்ட 'காக்கைப்பாடினியம்', 'தமிழக ஒழுகு' முதலிய பலநூல்கள் இவர் பதிப்பால் உயிர்பெற்றுள்ளன.
- சுவடிகள் அச்சேறிய வரலாற்றை விளக்கும் 'சுவடிக்கலை' எனும் நூலை எழுதியுள்ளார்.
நன்றி : தமிழ் இந்து
https://www.hindutamil.in/news/tamilnadu/697367-tamil-scholar-ilangumaranar-passed-away-5.html
இளங்குமரன் ஐயா அவர்களின் வழக்குச் சொல் அகராதி
பதிலளிநீக்குhttps://solalvallan.com/topics/%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d/