வங்கி வைப்புத்தொகை காப்பீடு திருத்த மசோதாவுக்கு ( Deposit Insurance Credit Guarantee Corporation (DICGC) Bill) மத்திய மந்திரிசபை 28-7-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான துணை நிறுவனமான வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகமானது (Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC)) வங்கி வைப்புத்தொகைகளுக்கு காப்பீடு வசதிகளை வழங்கி வருகிறது. பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியை சந்திக்கும் வங்கிகளில் வைப்புத்தொகை செலுத்தியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை காப்பீடு வசதியை இந்த கழகம் வழங்கி வந்தது.
இந்த சட்டத்தில் தற்போது மேற்கொண்டுள்ள திருத்தம் மூலம் வைப்புத்தொகை செலுத்தியிருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அசல் மற்றும் வட்டியில் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத்தொகை பெற முடியும்.
இந்தியாவில் காப்பீடு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியிருப்பதன் மூலம் அனைத்து வைப்புத்தொகை கணக்குகளிலும் 98.3 சதவீதம் ஈடுகட்டப்படுகிறது. வைப்புத்தொகை மதிப்பின் அடிப்படையில் 50.9 சதவீத மதிப்பு அடங்கும்.
ஆனால் சர்வதேச அளவில் அனைத்து வைப்புத்தொகைகளிலும் 80 சதவீதம் மட்டுமே ஈடுகட்டப்படுவதுடன், இது 20-30 சதவீத மதிப்பை மட்டுமே உள்ளடக்கியதும் ஆகும்.
தற்போதைய நிலையில் வீழ்ச்சிக்குள்ளான ஒரு வங்கியின் வைப்புத்தொகை வாடிக்கையாளர் காப்பீட்டுத்தொகை உள்ளிட்ட பலன்களை பெற 8 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் இனி வெறும் 90 நாட்களுக்கு உள்ளேயே காப்பீட்டுத்தொகை வழங்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டு உள்ளது.
நன்றி :தினத்தந்தி
https://www.dailythanthi.com/News/India/2021/07/29042654/Deposit-Insurance-and-Credit-Guarantee-Corporation.vpf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.