Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனம் (National Asset Reconstruction Company Ltd) உருவாக்கம்

தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனத்தை (National Asset Reconstruction Company Ltd (NARCL)) ரூ.6,000 கோடி மூலதனத்துடன் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

  • பொதுத் துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக்கடன்களின் அளவைக் குறைக்கும் நோக்கில், தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனம் அமைக்கப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்திருந்தாா். 
  • கடன்களைத் திருப்பிச் செலுத்தாதவா்களின் சொத்துகளை மீட்டு அவற்றை வேறுவகை முதலீட்டு நிதிகளாக மாற்றி கடன்களை வசூலிக்கும் பணியை அந்நிறுவனம் மேற்கொள்ளும்.
  • நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது.   தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனத்தை அமைப்பதற்கான பணிகள் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
  • அந்நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகள் பொதுத்துறை வங்கிகள் வசம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கனரா வங்கி அதிகபட்சமாக 12 சதவீதப் பங்குகளை வைத்துக் கொள்ளவுள்ளது. மீதமுள்ள 49 சதவீதப் பங்குகள் தனியாா் வங்கிகள் வசம் இருக்கும்.

நன்றி : தினமணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot