‘433-ஏ பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில், 14 ஆண்டு கால தண்டனையை பூா்த்தி செய்த கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 14 ஆண்டு தண்டனையை முடிக்காத கைதிக்கு கருணையின் அடிப்படையில் தண்டனையை குறைக்கவோ அல்லது விடுவிக்கவோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது எனவும், இதில் மாநில அரசின் ஆலோசனைப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால், தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வழக்குகளின் கைதிகள், 14 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிக்காமல் விடுவிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.