சாலைகள், ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய அரசுக்குச் சொந்தமாக உள்ள ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளைப் பணமாக்குவதற்கான வழிமுறைகள் அடங்கிய திட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 23-8-2021 அன்று தொடக்கிவைத்தாா். இந்தத் திட்டமானது 2024-25-ஆம் நிதியாண்டு வரை செயல்படுத்தப்படவுள்ளது.அரசின் சொத்துக்களைப் பணமாக்குவது தொடா்பாக 2021-22-ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கை என்பது அவற்றை விற்பதல்ல. சொத்துகளின் உரிமை அனைத்தும் மத்திய அரசு வசமே இருக்கும். அதே வேளையில், அந்தச் சொத்துகளைத் திறம்படப் பயன்படுத்தி நிதி திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.