12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தக்கூடிய ஜைகோவ்-டி (ZyCoV-D ) தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி : ஜைகோவ்-டி (ZyCoV-D) தடுப்பூசியை அவசரகாலத்துக்கு பயன்படுத்தும் அங்கீகாரத்தை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (DCGI) இருந்து ஜைடஸ் காடிலா (Zydus Cadila ) நிறுவனம் 20-8-2021 அன்று பெற்றது. இது உலகின் முதல் மற்றும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட டிஎன்ஏ அடிப்படையிலான கொரோனா தடுப்பூசியாகும். இதை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பயன்படுத்த முடியும்.
கூ.தக. :
Zydus Cadila நிறுவனம் 1952 ஆம் ஆண்டு ராமன்பாய் பி . பட்டேல் (Ramanbhai B. Patel) என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் தலைமையிடம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ளது.
கொவிட் சுரக்ஷா திட்ட (Mission COVID Suraksha) ஆதரவுடன், உயிரி தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து ஜைடஸ் நிறுவனம் உலகின் முதல் டிஎன்ஏ கொவிட் தடுப்பூசி ஜைகோவ்-டி-யை உருவாக்கி அதற்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை பெற்றுள்ளது. இந்திய தடுப்பூசி திட்டம், கொவிட் சுரக்ஷா, தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்டம் 3.0-ன் கீழ் தொடங்கப்பட்டு உயிரிதொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC) மூலம் அமல்படுத்தப்படுகிறது.பாதுகாப்பான, திறன்வாய்ந்த கொவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.