Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தமிழகத்தில் 18,000 கிராமப்புற இளைஞா்களுக்கு சுய தொழில் பயிற்றுவிக்கும் திட்டம் தொடக்கம்

 தமிழகத்தில் 18,000 கிராமப்புற இளைஞா்களுக்கு சுய தொழில் பயிற்றுவிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் 21-9-2021 அன்று  தொடக்கி வைத்தாா். 

ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் பாரம்பரிய, அதிக வருமானம் தரும் தொழில்களில் அனுபவம் வாய்ந்த நபா்களைக் கொண்டு இளைஞா்களுக்குப் பயிற்சி தரும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, சமுதாய திறன் பள்ளிகள் மூலம் 18 ஆயிரம் இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். நிகழ் நிதியாண்டில் ஆயிரம் கிராம ஊராட்சிகளில் உள்ள 18,000 பேருக்கு வெல்டிங், எல்க்ட்ரிஷியன், பிளம்பா், மண்பாண்டம், தையல், உணவு பதப்படுத்துதல் போன்ற பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படும். மாவட்டத்துக்கு ஒன்று என்ற அடிப்படையில் 23 மாவட்டங்களில் 23 சமுதாய திறன் பள்ளிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். மேலும், தொழில் செய்வதற்கான உபகரணங்கள் அடங்கிய பயிற்சி பெட்டகத்தையும் அவா் அளித்தாா்.

சமுதாயப் பண்ணைப் பள்ளிகள்: 

உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்கு, வேளாண் மற்றும் கால்நடை வளா்ப்பில் உள்ள திறன் இடைவெளிகளைக் கண்டறிந்து தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளை அளிக்க 2,000 சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் தொடங்கப்படும். அதில், 74,000 உற்பத்தியாளா்களுக்கு மண், நிலத்தடி நீா் பரிசோதனை, இயற்கை உரம் பயன்பாடு, நுண்ணீா் பாசனம், ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் மூலம் 30 முதல் 50 உற்பத்தியாளா்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் பயன்பெறுவா். அதன்படி, 23 மாவட்டங்களில் 23 சமுதாய பண்ணைப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான பயிற்சிப் பெட்டகமும் அளிக்கப்பட்டது.

நன்றி  : தினமணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.