தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பின்வரும் அறிவிப்புகளை 31-8-2021 அன்று வெளியிட்டுள்ளார்.
‘தீராக் காதல் திருக்குறள்' என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க ‘தமிழ் பரப்புரைக் கழகம்' உருவாக்கப்படும். இதற்கெனத் தொடர் செலவினமாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ் அறிஞர்களான சிலம்பொலி சு.செல்லப்பன், தொ.பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம் மற்றும் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, பரிவுத் தொகை வழங்கப்படும்.
சங்க இலக்கிய வாழ்வியல், ஓவியங்களாகவும் எளிய விளக்கத்துடனும் காபி மேசைப் புத்தகமாக வெளியிடப்படும். இதற்கென ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்.
தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கிய கூட்டங்கள் நடத்திட ரூ.15 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
புகழ்பெற்ற தலைவர்கள், தமிழறிஞர்கள் ஒலி, ஒளிப் பொழிவுகள் ஆவணமாக்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
சங்க இலக்கியங்கள் சந்தி பிரிக்கப்பட்டு நூல்களாக அச்சிட்டுக் குறைந்த விலையில் வெளியிட ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற ஊக்குவிக்கப்படும்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பெறப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்கம் மற்றும் ஆய்வுத் தொகுப்புகள் தமிழில் தொகுத்துத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வாயிலாக இணையத்தில் வெளியிடப்படும்.
‘தீராக் காதல் திருக்கு’ என்ற பெயரில் ஊடகங்கள் வாயிலாகத் திருக்கு இன்றையத் தலைமுறையினரைச் சென்றடையும் வகையில் தொலைக்காட்சிகளுடன் இணைந்தும் இணைய வடிவிலும் அசைவூட்டும் படங்கள், விநாடி-வினா, குறும்படங்கள், நடனம் போன்ற கலை வடிவங்களோடு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக சிறப்பு நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.