Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

அம்ருத் 2.0 (AMRUT 2.0) திட்டத்தை 2025-26 வரை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 புனரமைப்புக்கான அடல் இயக்கம் மற்றும் நகர்ப்புற மறுசீரமைப்பு 2.0 (அம்ருத் 2.0)  (Atal Mission for Rejuvenation and Urban Transformation 2.0 (AMRUT 2.0)) திட்டத்தை 2025-26 வரை செயல்படுத்த  பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில்  12.10.2021 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  நாட்டில் உள்ள நகரங்களை “தண்ணீர் பாதுகாப்பு” மற்றும் “சுயநிலைத்தன்மை” பெற்றவையாக மாற்றி தற்சார்பு இந்தியாவை அடையும் நோக்கில் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குறைந்த செலவில், நம்பகமான குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவு சேவைகளை வழங்குவது தேசிய முன்னுரிமைத் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.2,77,000 கோடி ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot