அக்டோபர் 2021 ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மொத்தம் தேர்தல் நடந்த 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 138 இடங்களை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 1015 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக அணியும் 201 இடங்களை அதிமுக அணியும் பெற்றுள்ளன.
பிற தகவல்கள் :
- மிக அதிக வயது ஊராட்சிமன்ற தலைவர் எனும் பெயரை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டியை சேர்ந்த பெருமாத்தாள் என்ற 90 வயது பெண்மணி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- மிகக்குறைந்த வயது ஊராட்சிமன்ற தலைவர் என்ற பெருமையை தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் வென்ற 21 வயதே ஆன சாருகலா பெற்றுள்ளார்.
- கோவை குருடம்பாளையம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, சுயேச்சையாகப் போட்டியிட்ட பாஜக கட்சியைச் சேர்ந்த தீ.கார்த்திக் என்பவர் ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.