Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - அக்டோபர் 2021

அக்டோபர் 2021 ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மொத்தம் தேர்தல் நடந்த 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 138 இடங்களை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள்   கிடைத்துள்ளன.  9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 1015 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக அணியும் 201 இடங்களை அதிமுக அணியும் பெற்றுள்ளன. 

பிற தகவல்கள் :

  • மிக அதிக வயது ஊராட்சிமன்ற தலைவர் எனும் பெயரை நெல்லை மாவட்டம்  பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டியை சேர்ந்த பெருமாத்தாள் என்ற  90 வயது பெண்மணி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மிகக்குறைந்த வயது  ஊராட்சிமன்ற  தலைவர் என்ற பெருமையை தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  வெங்கடாம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் வென்ற  21 வயதே ஆன சாருகலா  பெற்றுள்ளார்.
  • கோவை குருடம்பாளையம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, சுயேச்சையாகப் போட்டியிட்ட பாஜக கட்சியைச் சேர்ந்த  தீ.கார்த்திக் என்பவர் ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot