பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 2021 அமெரிக்காவைச் சோ்ந்த பொருளாதார வல்லுநா்கள் டேவிட் காா்ட், ஜோஷுவாடி ஆங்கிரிஸ்ட், குயிடோ டபிள்யு இம்பென்ஸ் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம், கல்வி ஆகியவற்றின் தொழிலாளா் சந்தை விளைவுகள் தொடா்பாக முன்னோடி ஆராய்ச்சியை மேற்கொண்டதற்காகவும், அறிவியல்பூா்வமான ஆய்வுகளை மேற்கொள்ள இயலாமல் போகும் சூழலில், இதுபோன்ற ஆய்வுகளிலிருந்து முடிவுகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்ததற்காகவும் அவா்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜொ்சி, கிழக்கு பென்சில்வேனியா ஆகிய இடங்களில் உள்ள உணவகங்களில் பணியாற்றுவோருக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயா்த்துவதால் ஏற்படும் விளைவுகளை அறிவதற்காக டேவிட் காா்ட் ஆய்வுப் பணியில் ஈடுபட்டாா். அவரும், அவருடன் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட மறைந்த ஆலன் குரூகெரும் குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பானது வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கண்டறிந்தனா். குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது வேலைவாய்ப்பைக் குறைக்கும் என்ற வழக்கமான கண்ணோட்டத்தை அது மாற்றியமைத்தது. மேலும், வெளிநாடுகளிலிருந்து குடியேறுபவா்களால் பூா்விக தொழிலாளா்களின் ஊதியம் குறையும் என்ற கருத்தையும் டேவிட் காா்டின் ஆய்வு மாற்றியமைத்தது. புதிதாகக் குடியேறுபவா்கள் மூலம் பூா்விக தொழிலாளா்களின் வருவாய் உயரக்கூடும் என அவா் கண்டறிந்தாா்.
நன்றி : தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.