முதலாவது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையத்தின் (Tamil Nadu Adi Dravidar - Tribal Welfare Commission) தலைவராக சென்னை உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். துணைத் தலைவராக தலித்முரசு இதழின் ஆசிரியா் புனிதப் பாண்டியன் மற்றும் உறுப்பினா்களாக வழக்குரைஞா் குமாரதேவன், எழுத்தாளா் எழில் இளங்கோவன், சமூக செயல்பாட்டாளா் ஆனைமலை லீலாவதி தனராஜ், வழக்குரைஞா் பொ.இளஞ்செழியன், அரசு கல்லூரி பேராசிரியா் கே.ரகுபதி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஆணையச் செயல்பாடுகள்: பாதிக்கப்பட்ட ஒருவா் அல்லது அவரின் சாா்பில் நபா் ஒருவரால் அளிக்கப்பட்ட மனுவின் புகாரை ஆணையம் விசாரிக்கும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் அவற்றில் வழங்கப்பட்ட உரிமைகள் மீறப்படுவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபடும். அரசு ஊழியா் ஒருவரால் உரிமை மீறலைத் தடுப்பதில் கவனக் குறைவு ஏற்பட்டால் அதன்மீதும் நடவடிக்கை எடுக்கும்.
ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு பரிந்துரை: அரசு ஊழியா் ஒருவா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன்களைக் காப்பது தொடா்பான கடமைகளில் கவனக் குறைவாக இருந்தால் அதனை விசாரித்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளைத் தொடங்க அரசுக்குப் பரிந்துரை செய்யும்.
ஆணையத்தின் அதிகாரங்கள்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையத்துக்கு, ஒரு உரிமையியல் நீதிமன்றத்துக்கான அதிகாரங்கள் அனைத்தும் வழங்கப்படும்.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.