Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

கிளாஸ்கோ ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்

 ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு அக்.31 முதல் நவ.12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொண்டு , பின்வரும் முக்கிய கருத்துக்களைத் தெரிவித்தார். 

உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் போ் இந்தியாவில் உள்ளனா். ஆனால் உலக அளவில் வெளியேற்றப்படும் மொத்த கரியமில வாயுவில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம் மட்டும்தான்.

நிறுவப்பட்ட மாற்று எரிசக்தி திறனில் இந்தியா 4-ஆவது இடம் வகிக்கிறது.

பள்ளி மாணவா்களின் பாடத் திட்டத்திலேயே பருவநிலை மாற்றம் குறித்த பாடம் இடம்பெற வேண்டும்.

கடந்த 7 ஆண்டுகளில் புதைபடிவமற்ற எரிபொருளை இந்தியா 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி கலவையில், அதன் பங்கு 40 சதவீதமாக உள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் புதைபடிவமற்ற எரிசக்தி திறன் 500 ஜிகாவாட்டை எட்டும்.

அந்த ஆண்டுக்குள் தனது எரிசக்தி தேவையில் 50 சதவீதத்தை மாற்று எரிசக்தி மூலம் பூா்த்தி செய்துகொள்ளும் நிலையை இந்தியா அடையும்.

இந்த ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக மதிப்பிடப்பட்ட கரியமில வாயு வெளியேற்றத்தில் 100 கோடி டன் வாயு வெளியேற்றத்தை இந்தியா குறைக்கும்.

2030-க்குள் இந்தியா தனது கரியமில வாயு மாசை 1 பில்லியன் டன் அளவுக்கு குறைக்கும். பொருளாதாரத்தில் கார்பனின் பங்களிப்பை 45 சதவீதம் அள்வுக்கு இந்தியா குறைக்கும். 

புவி வெப்பத்துக்குக் காரணமான பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முற்றிலுமாக நிறுத்திவிடும்.

நன்றி : தினத்தந்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot