தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக சிமெண்ட் “வலிமை”யை மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு .க.ஸ்டாலின் அவர்கள் 16.11.2021 அன்று அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி வைத்தார். இந்த வலிமை சிமெண்டின் ஒரு மூட்டையின் விலை 360 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூ.தக. :
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் ஆலங்குளம் சிமெண்ட் கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ஆலை, ஆண்டொன்றுக்கு 2 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன், அப்போதைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தால், அரியலூரில் ஆண்டொன்றுக்கு 5 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன் ஒரு ஆலையும், 10 இலட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மற்றொரு புதிய சிமெண்ட் ஆலையும் நிறுவப்பட்டது. இந்த மூன்று ஆலைகளின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டொன்றுக்கு 17 இலட்சம் மெட்ரிக் டன் ஆகும். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகம் "அரசு" என்ற பெயரில் சிமெண்டை விற்பனை செய்து வருகிறது.
தற்போது, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர சிமெண்ட் "வலிமை" என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ரக "வலிமை" சிமெண்ட், அதிக உறுதியும் (Greater Compression Strength), விரைவான உலரும் தன்மையும் (Quick Setting), தன்மையும் (Heat Resistant) கொண்டது. அதிக வெப்பத்தை தாங்கும். நன்றி : TN DIPR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.