கிளாஸ்கோ ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இணைந்து “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் விநியோகம்” திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
- இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாகும். அவரது முயற்சியால் கடந்த 2015 நவம்பர் 3-ம் தேதி சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு (ஐஎஸ்ஏ) உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் செயல் படுகிறது. இந்த கூட்டமைப்பில் 124 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
- உலகம் முழுவதும் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க ஐஎஸ்ஏ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் விநியோகம்” திட்டம் தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது.
- இந்த பின்னணியில் கடந்த 2-11-2021 ஆம் தேதி கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐஎஸ்ஏ கூட்டத்தில் “ஒரே சூரியன் பிரகடனம்” என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய 5 நாடுகள் புதிய திட்டத்தை முன்னின்று வழிநடத்த உள்ளன. ஜெர்மனி, ஜப்பான் உட்பட 80 நாடுகள் திட்டத்தில் ஆர்வமுடன் இணைந்துள்ளன.
- திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் சூரிய மின் சக்தியை அளவிடும் தொழில்நுட்பம் விரை வில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் எந்தெந்த நாட்டில் எவ்வளவு சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என்பதை கணக்கிட முடியும்.
நன்றி : தமிழ் இந்து திசை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.