Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

டெல்லியில் இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதி என்கிற அணையா விளக்கு தேசிய போர் நினைவுச்சின்ன அணையா விளக்குடன் இணைப்பு

 டெல்லியில் இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதி என்கிற அணையா விளக்கு தேசிய போர் நினைவுச்சின்ன அணையா விளக்குடன்   இணைக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

1914-21 வரை முதல் உலகப்போரின் போது உயிர் நீத்த பிரிட்டிஷ், இந்திய வீரர்களின் நினைவாக 1921 ஆம் ஆண்டு டெல்லியில் ’இந்தியா கேட்’ நினைவுச்சின்னம் பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்டது.இங்கு,  1971-ம் ஆண்டு அமர் ஜவான் ஜோதி என நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு அணையா விளக்கு ஏற்றப்பட்டது. 1971-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணமடைந்த வீரர்களின் நினைவாக அந்த அணையா விளக்கு ஏற்றப்பட்டது. இந்த விளக்கு 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருகிறது. 

இதற்கிடையில், 1947-ம் ஆண்டு சுதந்திரந்திற்கு பின்னர் 1947-48 -ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற முதல் போரில் இருந்து தற்போதுவரை நடைபெற்ற போர்களில் வீரமரணமடைந்த வீரர்களின் நினைவாக டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.  

இந்த போர் நினைவுச்சின்னத்தில் 1947 முதல் தற்போதுவரை நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இங்கும் அணையா விளக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னமும் இந்தியா கேட் பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. எனவே,  அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கு தேசிய போர் நினைவு சின்னத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையா விளக்குடன் ஒன்றிணைக்கப்படவுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot