தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், இறுதி வாக்காளர் பட்டியல் 5-1-2022 அன்று வெளியிடப்பட்டது. 01.01.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய இந்த வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட்டில் 6,36,25,813 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,12,26,759; பெண் வாக்காளர்கள் 3,23,91,250 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,804 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ள தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 7,11,755 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,56,239 ; பெண்கள் 3,55,394 ; மூன்றாம் பாலினத்தவர் 122).
தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது.இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,78,517 ஆவர். (ஆண்கள் 86,893 ; பெண்கள் 91,613 ; மூன்றாம் பாலினத்தவர் 11).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.