வெளிநாடு வாழ் இந்தியர் (Non-Resident Indian,NRI) தினம் - ஜனவரி 9
கூ.தக. : மறைந்த முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பேயி எடுத்த முடிவின் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் ஜனவரி 09, 2003 அன்று புதுதில்லியில் கொண்டாடப்பட்டது. 1915 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய தினம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. o தற்போது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் இந்த தினம் வெளிநாடு வாழ் இந்திய சமூகத்தினர் அரசுடனும், தங்களின் பாரம்பரியத்துடனும் இணைவதற்கான ஒரு வாய்ப்பினை அளிக்கிறது. இம்மாநாட்டின் போது இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, விருதுகள் வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.