மத்திய பட்ஜெட் 2022 ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 1.2.2022 அன்று தாக்கல் செய்தார். இரண்டாவது முறையாக காகிதமில்லா, 'டிஜிட்டல் பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை, 'டேப்லெட்' கணினியைப் பயன்படுத்தி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரை நிகழ்த்தினார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த டேப்லெட்டை தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பையில் வைத்து, அவர் பார்லிமென்டிற்கு எடுத்து வந்திருந்தார்.
> பட்ஜெட் மதிப்பீடுகள் 2021-22: ரூ.34.83 லட்சம் கோடி
> திருத்திய மதிப்பீடுகள் 2021-22: ரூ.37.70 லட்சம் கோடி
> 2022-23-ல் மொத்த செலவினம் (Expenditure) ரூ.39.45 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது
> 2022-23-ல் கடன் தவிர்த்த மொத்த வரவுகள் (Receipts) ரூ.22.84 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது
> 2022-23-ல் கடன் தவிர்த்த மொத்த வரவுகள் ரூ.22.84 லட்சம் கோடி
> நடப்பாண்டில் (2021-22) நிதிப்பற்றாக்குறை (Deficits) - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9% (பட்ஜெட் மதிப்பீடுகள் 6.8%) ஆக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
> 2022-23-ல் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 6.4% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
> மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2022-2023 ஆம் நிதியாண்டில் 11.1% ஆக இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது.
> இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வரவு / செலவு விபரம் (ஒரு ரூபாயில்)
வரவு (ஒரு ரூபாயில்)
கடன் சார்ந்த வரவுகள் - 35 காசுகள்ஜி.எஸ்.டி - 16 காசுகள்
வருமான வரி - 15 காசுகள்
கார்பரேட் வரி - 15 காசுகள்
மத்திய கலால் வரி - 7 காசுகள்
சுங்க வரி - 5 காசுகள்
வரியல்லாத வருவாய் - 5 காசுகள்
கடன் அல்லாத மூலதன வரவுகள் - 2 காசுகள்
செலவு (ஒரு ரூபாயில்)
கடன்களுக்கான வட்டியை திரும்பச் செலுத்துவதற்காக - 20 காசு
ஒட்டுமொத்த வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான பங்காக - 17 காசுகள்
மத்திய அரசின் திட்ட செலவினங்களுக்கு - 15 காசுகள்
நிதிக்குழுவுக்கு வழங்குவது உள்ளிட்ட வழிகளில் - 10 காசுகள்
மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் - 9 காசுகள்
மற்ற வகை செலவினங்கள் - 9 காசுகள்
மானியங்கள் - 8 காசுகள்
பாதுகாப்புத்துறை - 8 காசுகள்
ஓய்வூதியம் - 4 காசுகள்
2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
பிஎம் கதிசக்தி (PM GatiShakti) :
பிரதமர் ‘கதி சக்தி’ தேசிய செயல் திட்டத்துக்கு (PM GatiShkati National Master Plan) ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கிடப்படும். பிரதமர் கதி சக்தி கீழ் அடுத்த சில ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்.சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், விரைவுப் போக்குவரத்து, நீர்வழிகள், போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகியவை பிஎம் கதிசக்தியை இயக்கும் 7 என்ஜின்கள் ஆகும்.
சாலைப் போக்குவரத்து :
2022-23-ல் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு 25,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிவாக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு விரிவாக்கத்திற்கான ரூ.20,000 கோடி திரட்டப்படும்
பன்மாதிரி போக்குவரத்து பூங்காக்கள்
2022-23-ல் பன்மாதிரி போக்குவரத்து பூங்காக்களை (Multimodal Logistics Parks) 4 இடங்களில் செயல்படுத்துவதற்கு தனியார் பொதுத்துறை கூட்டு முயற்சி மூலம் ஒப்பந்தங்கள் வழங்கப்படும்
ரயில்வே :
உள்ளூர் வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலிக்கு உதவும் வகையில், ஒரு நிலையம் ஒரு பொருள் என்ற கருத்தியல் நடைமுறைப்படுத்தப்படும்.
2022-23 உலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் திறன் அதிகரித்தலுக்கு கவாஜ் திட்டத்தின் கீழ் 2000 கிலோ மீட்டர் ரயில்வே கட்டமைப்பு கொண்டு வரப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய தலைமுறை வந்தே பாரதம் ரயில்கள் தயாரிக்கப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் பன்மாதிரி சரக்குப் போக்குவரத்துக்கான 100 பிஎம் கதிசக்தி சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்.
பர்வதமாலா (Parvatmala) :
தேசிய ரோப்வே வளர்ச்சித் திட்டம் பர்வதமாலா பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும்.
2022-23-ல் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 ரோப்வே திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.
வேளாண்மை :
கோதுமை மற்றும் நெல் கொள்முதலுக்காக 1.63 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.37 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரசாயன கலப்பற்ற இயற்கை வேளாண்மை மேம்படுத்தப்படும். கங்கை நதியின் குறுக்கே 5 கிலோ மீட்டர் அகல வழித்தடத்தின் விவசாய நிலங்கள் மீது ஆரம்பக்கட்ட கவனம் செலுத்தப்படும்.
வேளாண்மை மற்றும் கிராமப்புற தொழில் தொடங்வோருக்கு நிதி அளிக்க மூலதனத்துடன் கூடிய நிதியை நபார்டு வழங்கும்.
பயிர் மதிப்பீடு, நில ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்து தெளித்தலுக்கு கிசான் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.
கென்- பெட்வா திட்டம்
கென் – பெட்வா இணைப்புத் திட்ட அமலாக்கத்துக்கு ரூ.1400 கோடி ஒதுக்கீடு
கென் – பெட்வா இணைப்புத் திட்டத்தால் 9.08 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் :
உதயம் (Udyam) , இ-ஷ்ரம் (e-shram) , என்சிஎஸ் (NCS ) மற்றும் அசீம் (ASEEM) இணையதளங்கள் ஒன்றாக இணைக்கப்டும்.
130 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் (ECLGS) கீழ் கூடுதல் கடன் வழங்கப்பட்டது.
இசிஎல்ஜிஎஸ் 2023ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படவுள்ளது.
இசிஎல்ஜிஎஸ் திட்டத்தின் கீழான உத்திரவாதம் விரிவுபடுத்தப்படவுள்ளது. ரூ.50,000 கோடி அதிகரிக்கப்பட்டு மொத்தம் ரூ. 5 லட்சம் கோடியாக விரிவுபடுத்தப்படும்.
குறு மற்றும் சிறு நிறுவனங்ளுக்கான கடன் உத்திரவாத அறக்கட்டளையின் (Credit Guarantee Trust for Micro and Small Enterprises (CGTMSE)) கீழ், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன் வழங்கப்படும்.
ரூ.6,000 கோடி மதிப்பில் எம்எஸ்எம்இ-க்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் திட்டம்(Raising and Accelerating MSME performance (RAMP)) அறிமுகம் செய்யப்படும்.
திறன் மேம்பாடு :
ஆன்லைன் பயிற்சி மூலம் மக்களின் திறனை மேம்படுத்த திறன் மற்றும் வாழ்வாதாரத்துக்கான டிஜிட்டல் அமைப்பு (Digital Ecosystem for Skilling and Livelihood (DESH-Stack e-portal) ) தொடங்கப்படும்.
* டிரோன் சேவைகளுக்கு, ‘டிரோன் சக்திக்கு’ உதவ தொடக்கநிலை நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
கல்வி
பிரதமரின் இ-வித்யா (PM eVIDYA) திட்டத்தின் ‘ஒரு வகுப்பு- ஒரு டி.வி சேனல்’ 200 டி.வி சேனல்களாக (‘One class-One TV channel’ programme) விரிவுபடுத்தப்படும்.
* விவேகமான சிந்திக்கும் திறன்களை ஊக்குவிக்க மெய்நிகர் ஆய்வு கூடங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மின்னணு-ஆய்வு கூடங்கள் மற்றும் கற்றல் சூழல் ஏற்படுத்தப்படும்.
* டிஜிட்டல் ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்க உயர்தர மின்னணு-பாடத்திட்டம் உருவாக்கப்படும்.
* உலகத்தரத்திலான கல்விக்கு டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்.
சுகாதாரம்
தேசிய டிஜிட்டல் சுகாதார அமைப்புக்கு திறந்தவெளி தளம் அறிமுகப்படுத்தப்படும்.
* தரமான மனநல ஆரோக்கிய கலந்தாய்வுக்கு ‘தேசிய தொலைதூர மன நல திட்டம் மற்றும் சேவைகள் (· ‘National Tele Mental Health Programme’) தொடங்கப்படும்.
நிமான்ஸ்- ஐ சிறப்பு மையமாக கொண்டு 23 தொலை தூர மன நல சிறப்பு மையங்களின் நெட்வொர்க் ஏற்படுத்தப்படும். இதற்கான தொழில்நுட்ப உதவிகளை பெங்களூரில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையம்(IIITB) வழங்கும்.
ஷக்ஷம் அங்கன்வாடி
மிஷன் சக்தி, மிஷன் வத்சல்யா, ஷக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷான் 2.0 திட்டம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பயன்கள்
2 லட்சம் அங்கன்வாடிக்கள் ஷக்ஷம் அங்கன்வாடிகளாக மேம்படுத்தப்படும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு
வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 3.8 கோடி வீடுகளுக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டது.
அனைவருக்கும் வீடு
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டது.
வடகிழக்கு பகுதிக்கான பிரதமரின் மேம்பாட்டு நடவடிக்கை (Prime Minister’s Development Initiative for North-East Region (PM-DevINE))
வடகிழக்கு மாநிலங்களில் சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமரின்-DevINE என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்ப கட்டமாக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
துடிப்பான கிராமங்கள் திட்டம்
வடக்கு எல்லையில் குறைவான மக்கள், இணைப்பு வசதி மற்றும் கட்டமைப்புகள் உள்ள எல்லை கிராமங்களின் மேம்பாட்டுக்கு துடிப்பான கிராமங்கள் திட்டம் தொடங்கப்பட்டது.
வங்கி வசதிகள்
1.5 லட்சம் தபால் அலுவலகங்களில் 100 சதவீதம் வங்கி அமைப்புக்குள் வரவுள்ளன.
வணிக வங்கிகள், 75 மாவட்டங்களில், 75 டிஜிட்டல் வங்கி யூனிட்டுகளை தொடங்கவுள்ளன.
இ-பாஸ்போர்ட் (e-Passport)
மின்னணு சிப்கள் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.
நகர்ப்புற திட்டம்
கட்டிட விதிகளின் நவீனமயமாக்கல், நகர திட்டமிடல் திட்டங்கள் மற்றும் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி ஆகியவை அமல்படுத்தப்படும்.
நகர பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பேட்டரி மாற்று கொள்கை கொண்டு வரப்படும்.
நில ஆவணங்கள் மேலாண்மை
தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் நில ஆவணங்கள் மேலாண்மைக்கு தனித்துவமான நில அடையாள எண்.
துரிதமான பெருநிறுவனம் வெளியேற்றம்
நிறுவனங்கள் விரைவாக வெளியேறுவதற்கு, துரிதமான பெருநிறுவன வெளியேற்ற மையம் (C-PACE) அமைக்கப்படும்.
ஏவிஜிசி ஊக்குவிப்பு குழு
அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், விளையாட்டு மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றின் ஊக்குவிப்புக்கு இத்துறையில் தனி குழு உருவாக்கப்படும்.
தொலை தொடர்பு துறை
உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 5ஜி தொழில்நுட்பத்துக்கு வலுவான சூழலை உருவாக்க வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி திட்டம் தொடங்கப்படும்.
ஏற்றுமதி வளர்ச்சி
நிறுவனம் மற்றும் சேவை மையங்கள் மேம்பாட்டில் மாநிலங்களையும் பங்குதாரர்களாக்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்.
பாதுகாப்புத்துறையில் இந்தியா தற்சார்பு அடைதல்:
2022-23-ல் மூலதன கொள்முதலில் 68% உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய பட்ஜெட்டில் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2021-22-ல் 58% ஆக இருந்தது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பெருந்தொழில்துறையினர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன் இந்நிறுவனத்தின் பட்ஜெட்டில் 25% இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும்.
பரிசோதனை மற்றும் சான்றிதழ் பெறுவதற்கு, சுதந்திரமான அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
புதிய வகைப் பொருட்கள், சேவை வாய்ப்புகள்
செயற்கை நுண்ணறிவு, புவி வானியல் சாதனங்கள், மற்றும் ட்ரோன்கள் செமி கண்டக்டர் மற்றும் அதன் சூழல் அமைப்பு, விண்வெளி பொருளாதாரம், மரபியல் பொருளாதாரம் மற்றும் மருந்து பொருட்கள், பசுமை எரிசக்தி மற்றும் தூய்மையான போக்குவரத்து சாதனங்கள் போன்ற புதிய வகைப் பொருட்கள், சேவை வாய்ப்புகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு அரசு பங்களிப்பு வழங்கப்படும்.
எரிசக்தி மாற்றம் மற்றும் பருவநிலை செயல்திட்டம்:
2030-க்குள் 280 ஜிகாவாட் சூரியசக்தி உற்பத்தி இலக்கை அடைய, உயர்திறன் கொண்ட சூரியசக்தி சாதனங்களை உற்பத்தி செய்ய, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக ரூ.19,500 கோடி கூடுதலாக ஒதுக்கப்படும்.
அனல் மின் நிலையங்களில் உயிரி கழிவு வில்லைகள், 5 முதல் 7% அளவுக்கு இணை எரிபொருளாக பயன்படுத்தப்படும்.
ஆண்டுக்கு 38 மில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு (CO2) வெளியேற்றம் தவிர்ப்பு.
அரசு மூலதன முதலீடு
2022-23-ல் முக்கிய தனியார் முதலீடு மற்றும் தேவைகளை ஊக்குவிப்பதில் அரசு முதலீடு தொடரும்.
நடப்பாண்டில் ரூ.5.54 லட்சம் கோடியாக உள்ள மூலதன செலவு ஒதுக்கீடு 2022-23-ல் 35.4% அதிகரிக்கப்பட்டு ரூ.7.50 லட்சம் கோடி ஒதுக்கீடு
2022-23-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 2.9% ஒதுக்கீடு
மத்திய அரசின் ‘வலுவான மூலதன செலவு’ 2022-23-ல் ரூ. 10.68 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 4.1% ஆகும்.
குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் – சர்வதேச நிதிச்சேவைகள் மையம்.
குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில், உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதிக்கப்படும்.
சர்வதேச நீதித்துறை விவேகத் திட்டத்தின் கீழ் , சச்சரவுகளுக்கு குறித்த காலத்திற்குள் தீர்வு காண ஏதுவாக சர்வதேச சமரசத் தீர்வு மையம் அமைக்கப்படும்.
வளங்களைத் திரட்டுதல்
தரவு மையங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளுக்கு கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்படும்
கடந்த ஆண்டில் ரூ.5.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு மூலதனம் மற்றும் தனியார் பங்கு முதலீடு, பெரிய அளவிலான ஸ்டார்ட் அப் மற்றும் வளர்ச்சி சூழலுக்கு வகை செய்துள்ளது.
புதிய வகை பொருட்கள், சேவை வாய்ப்புகள் துறைகளுக்கு கலப்பு நிதியம் ஊக்குவிக்கப்படும்.
பசுமை கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்ட பசுமைத் தங்கப்பத்திரங்கள் வெளியிடப்படும்.
டிஜிட்டல் பணம்
2022-23-லிருந்து இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தும்.
கூட்டுறவு சங்கங்கள்
கூட்டுறவுகளால் செலுத்தப்பட்ட குறைந்தபட்ச மாற்றுவரி விகிதம் 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே சமச்சீரான வாய்ப்பை வழங்குதல்
ரூ 1 கோடிக்கும் அதிகமாகவும், ரூ.10 கோடி வரையிலும் மொத்த வருமானம் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் வரி 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வரி நிவாரணம்
பெற்றோர்கள் / காப்பாளர்களின் வாழ்க்கை காலத்தில் அதாவது பெற்றோர்கள் / காப்பாளர்கள் 60 வயதை எட்டிய போது, மாற்றுத்திறனாளிகளை சார்ந்திருப்போருக்கு காப்பீட்டு திட்டத்தில் இருந்து கிடைக்கும் வருடாந்திர தொகை அல்லது மொத்த தொகை அனுமதிக்கப்படும்.
தேசிய ஓய்வூதிய திட்டப் பங்களிப்பில் சமநிலை
மாநில அரசு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கிற்குப் பங்களிப்பு செய்யும் உரிமையாளர்களுக்கான வரிப்பிடித்த வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக இவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இது சமூகப் பாதுகாப்புப் பலன்களை விரிவாக்க உதவும்.
புதிய தொழில்களுக்கு ஊக்குவிப்பு
தகுதி வாய்ந்த புதிய தொழில்களுக்கு வரிப் பயன் கிடைப்பதற்கான இணைப்புக்காலம் ஓராண்டிற்கு, 31.03.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணைப்புக்கான கால வரம்பு ஏற்கனவே 31.03.2022 ஆக இருந்தது.
மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களின் வரி விதிப்புக்கான திட்டம்
எந்தவொரு மெய்நிகர் டிஜிட்டல் சொத்து பரிமாற்றத்திலிருந்து கிடைக்கும் வருவாய்க்கு 30 சதவீத விகிதத்தில் வரி விதிக்கப்படும்.
தகவல்கள் ஆதாரம் : PIB
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.