பிரதமர் மோடி அவர்கள் 2-4 மே 2022 ஆகிய தினங்களில் 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றார். இப்பயணத்தின் போது, முதல் நாளன்று ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து பயணத்தின் 2-வது நாள் பிரதமர் மோடி டென்மார்க் சென்றார். அங்கு அவர் டென்மார்க் பிரதமர் பிரதமர் மிட்டீ ஃபெடிக்செனை சந்தித்து பேசினார். மேலும் டென்மார்க்கில் நடைபெற்ற இந்தியா - நார்டிக் உச்சி மாநாட்டில் (second India-Nordic summit ) கலந்து கொண்டார், பின்னர் இறுதியாக பிரான்ஸ் நாட்டிற்கும் பயணித்தார். முன்னதாக, இப்பயணத்தின் போது, நார்டிக் எனப்படும் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய 5 நாடுகளில் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
கூ.தக.
: இந்த
பயணத்தின் போது , உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா போர் குறித்து இந்தியா மற்றும் பிரான்ஸ்
கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன. அதில், உக்ரைனில்
ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கு இந்தியாவும் பிரான்சும் கவலை
தெரிவிக்கின்றன. உக்ரைனில் உடனடியாக போரை
நிறுத்த வேண்டும். உக்ரைனில் பொதுமக்கள்
கொல்லப்பட்டதை இரு நாடுகளும் கண்டிக்கின்றன. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை
மற்றும் இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கும், மக்கள்
பாதிப்புக்கு உள்ளாவது உடனடி நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.