Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா தொடக்கம்

தமிழ்நாட்டில் மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா நிகழ்ச்சி  சென்னை இராணி மேரிக் கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 25.5.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

கூ.தக. :

v  2006-07ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

v  2009-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள், நமது மாநிலத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் (Tamil Nadu Skill Development Mission) என்ற தனித்துவம் வாய்ந்த ஒரு அமைப்பை   உருவாக்கினார். அப்போது தேசிய அளவிலோ அல்லது பிற எந்த மாநிலத்திலோ இத்தகைய திறன் மேம்பாட்டிற்கான தனி அமைப்பு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

v  நாட்டிலேயே முதன்முதலாக தருமபுரி மாவட்டத்தில்  1989-ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழு  திட்டம் தொடங்கப்பட்டது.

v  நான் முதல்வன்’  திட்டம் கடந்த 01.03.2022 அன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10 இலட்சம் இளைஞர்களுக்கு கல்வி, அறிவு மற்றும் திறன் உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இதற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களும் மாற்றப்பட இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot