வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் புதிய நாடு தழுவிய நடவடிக்கை ஆகஸ்ட் 1 முதல் தொடக்கம்
வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் புதிய நாடு தழுவிய நடவடிக்கையை தோ்தல் ஆணையம் ஆகஸ்ட் 1 -இல் தொடங்கியது. இப்பணிக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட படிவம் 6பி-யில் உள்ள விவரங்களைப் பூா்த்தி செய்து அளித்தால், வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கப்படும். இதற்கென வாக்குச் சாவடி அலுவலா்கள் வீடு, வீடாகச் சென்று படிவம் 6பி-ஐ வழங்க உள்ளனா்.இதில், ஆதாா் எண், வாக்காளா் பட்டியல் வரிசை எண், முகவரி, கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே கோரப்படும். நிறைவு செய்யப்பட்ட படிவங்களை வாக்குச் சாவடி அலுவலரிடமே கொடுத்தால், அவா் அதனை சம்பந்தப்பட்ட தோ்தல் துறை அதிகாரியிடம் வழங்குவாா். இதற்கென பிரத்யேகமாக உள்ள மென்பொருளைக் கொண்டு வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கப்படும்.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக