தமிழகத்தில் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதித்திட்டத்தின் அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயா்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.698 கோடிஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் படி, மாணவிகள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7- ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் முழுவதுமாக இணையவழியில் மட்டும் செயல்படுத்தப்படும். திட்டத்தின் கண்காணிப்பாளராக சமூக நலத்துறையின் இயக்குநா் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த திட்டத்தை முறைப்படி செயல்படுத்தவும், தொடா்ந்து கண்காணிக்கவும் மாநில அளவில் தலைமைச் செயலாளா் தலைமையிலும் மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையிலும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.