இந்தியாவில் மேலும் 10 சதுப்பு நிலங்களுக்கு `ராம்சர்' அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. இதில் தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம், கூந்தன்குளம், வேம்பனூர் சதுப்பு நிலம், வெள்ளோடை, வேடந்தாங்கல், உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம் ஆகிய 6 இடங்களும், ஒடிசாவில் உள்ள சட்கோசியா பள்ளத்தாக்கு, கோவாவில் உள்ள நந்தா ஏரி, கர்நாடகாவின் ரங்கநதிட்டு பறவைகள் சரணாலயம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிர்பூர் சதுப்பு நிலம் ஆகும். இதன் மூலம் தமிழ்நாட்டில் `ராம்சர்' அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆகவும் இந்தியாவில் 64 ஆகவும் உயர்ந்துள்ளன.
கூ.தக. : புயல், வெள்ளப் பெருக்கு, சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களிலிருந்து நிலப்பகுதியைக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் சதுப்பு நிலங்களின் அழிவைத் தடுப்பதற்காக 02.02.1971 அன்று இரான் நாட்டின் ராம்சர் நகரில் முதல் சர்வதேச மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சென்று உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதற்கு `ராம்சர்' பிரகடனம் என்று பெயர். ராம்சரில் இந்தியா உள்ளிட்ட 172 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
நன்றி : இந்து தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.