Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

சென்னை நந்தனத்தில் ரூ.365 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலம் திறப்பு

 சென்னை நந்தனத்தில் ரூ.365 கோடி மதிப்பீட்டில்  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின்  தலைமை அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஆகியோர் இணைந்து 27.10.2022 அன்று  திறந்து வைத்தனர்.

கூ.தக. : சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், மக்களின் பயண நேரத்தை குறைத்து, பயணத்தை எளிமையாகவும், அதிநவீன வசதியாக அமைத்திடவும் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு   கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான அரசால் 2007-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல்கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளை அப்போதைய  துணை முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களால் 2009ஆம் ஆண்டு ஜீன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் - | மற்றும் கட்டம் - | இன் நீட்டிப்புடன் மொத்தம் 54.1 கி.மீ நீளத்தில் இரண்டு வழித்தடங்களில் முழுமையாக பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-|| இல் 118.9 கி.மீ மொத்த நீளத்திலான மூன்று வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 173 கி.மீ மெட்ரோ இரயில் கட்டமைப்பு, சென்னைப் பெருநகர்ப் பகுதியில் இன்னும் சில ஆண்டுகளில் இயக்கப்படவுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot