சென்னை நந்தனத்தில் ரூ.365 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஆகியோர் இணைந்து 27.10.2022 அன்று திறந்து வைத்தனர்.
கூ.தக. : சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், மக்களின்
பயண நேரத்தை குறைத்து, பயணத்தை எளிமையாகவும், அதிநவீன வசதியாக
அமைத்திடவும் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான அரசால்
2007-ஆம்
ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல்கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளை
அப்போதைய துணை முதலமைச்சர் திரு.மு.க.
ஸ்டாலின் அவர்களால் 2009ஆம் ஆண்டு ஜீன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது
சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்
- | மற்றும்
கட்டம் - | இன் நீட்டிப்புடன் மொத்தம் 54.1 கி.மீ
நீளத்தில் இரண்டு வழித்தடங்களில் முழுமையாக பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-|| இல் 118.9 கி.மீ மொத்த நீளத்திலான மூன்று வழித்தடங்களில்
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 173 கி.மீ மெட்ரோ இரயில்
கட்டமைப்பு, சென்னைப் பெருநகர்ப் பகுதியில் இன்னும் சில
ஆண்டுகளில் இயக்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.