ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
v 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி கிராமப்புறங்களில் உள்ள
அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் வழங்குவதற்கு வகை
செய்யும் ஜல் ஜீவன் மிஷன் என்று கூறப்படும் உயிர் நீர் இயக்கம் என்ற திட்டத்தை
அறிவித்தார்.
v 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களில் இருக்கும்
வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்கி முடிக்கவேண்டும் என்பதே
இந்த திட்டத்தின் இலக்காகும்.
v இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 55 லிட்டர் குடிநீராவது வழங்கப்படவேண்டும் என்பதுதான், குறிக்கோளாக இருக்கிறது. அப்போது 37 சதவீத வீடுகளில் இத்தகைய குடிநீர் குழாய் இணைப்புகள்
இருந்தன. இப்போது கணக்கெடுத்ததில், கிராமப்புறங்களில் உள்ள 53 சதவீத வீடுகள், அதாவது 10
கோடியே 20 லட்சம் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் இருக்கின்றன.
பல மாநிலங்களில் மிக குறைவான கிராமப்புற குடியிருப்பு வீடுகளுக்கே குடிநீர் குழாய்
இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
v 60 சதவீதத்துக்கு குறைவான குழாய் இணைப்புகளை கொண்ட
மாநிலங்களில், இந்த
திட்ட செயல்பாடுகள் மூலம் மிகச் சிறப்பாக செயல்பட்ட முதல் மாநிலம் என்று
தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து அதற்கான
விருதை டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க, அதை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு
பெற்றுக்கொண்டார்.
v தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள 124.93
இலட்சம் வீடுகளில் இதுவரை 69.14 இலட்சம் வீடுகளுக்கு (55%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
v தூய்மை இந்திய நகர்ப்புற இயக்கத்தின் (Swachh
Bharat Mission) 2.0 பதிப்பின் கீழ் 50,000-க்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக
இராமேஸ்வரம் நகராட்சி தேர்வு செய்யப்பட்டு அதற்காக விருது
ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
v தூய்மை இந்திய நகர்ப்புற இயக்கத்தின் 2.0 பதிப்பின் கீழ் 15,000 முதல் 25,000 மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக
கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர்
பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு அதற்காக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும்
நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் விருது
வழங்கப்பட்டுள்ளது. நன்றி : தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.