”இந்தித் திணிப்புக்கு எதிரான தீர்மானம்” தமிழ்நாடு சட்டப்பேரவையில் 18.10.2022 அன்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் ஜவாஹர்லால் நேரு இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியது. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழுத் தலைவர் அவர்களால் கடந்த 9-9-2022 அன்று குடியரசு தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.