தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி (Chennai International Book Fair - CIBF) 2023 ஜனவரி மாதம் நடை பெறவிருக்கிறது.
உலகளாவிய அறிவு பரிமாற்றமே இக்கண்காட்சியின் நோக்கம். இந்த பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க பல நாடுகளிலிருந்தும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வரவிருக்கிறார்கள்.
இதன் மூலம் தமிழின் செழுமை மிகு இலக்கியங்கள் உலக மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும். புத்தகங்களுக்கான மொழியாக்க உரிமைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள இந்தக் கண்காட்சி ஒரு சிறந்த களமாக அமை யும்.
உலகளவில் புகழ்பெ ற்ற புத்தகத் திருவிழாக்கள் நடை பெறும் நகரங்களான பிராங்க்பர்ட், லண்டன், ஷார்ஜா, பெய்ஜிங் வரிசையில் எதிர்காலத்தில் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவும் உலகப் புத்தக வாசகர்களால் கொண்டாடப்படும்.
இத்திருவிழாவை தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை யும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் சங்கமும் (BAPPASI) இணைந்து நடத்த உள்ளன.
இவ்விழா ஜனவரி 16 திருவள்ளுவர் தினத்தில் தொடங்கி ஜனவரி 18 வரை நடைபெறும். இந்த செ ன்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிக்கான இலட்சினையினை (logo) மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 5 நவம்பர், 2022 அன்று வெளியிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.