பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான (Economic Weaker Sections (EWS)) 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி, ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 7.11.2022 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி , பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தின் 103-வது பிரிவில் ஏற்படுத்திய திருத்தம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த 10% இட ஒதுக்கீடு சட்டவிரோதம் என நீதிபதி ரவீந்திர பட் கூறியுள்ளார். நீதிபதி ரவீந்திர பட்டின் கருத்தை ஆதரிப்பதாக தலைமை நீதிபதி யு.யு. லலித் கூறியுள்ளார்.
கூ.தக. : பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.