தேசிய இலாப எதிர்ப்பு ஆணையமானது (National Anti-Profiteering Authority (NAA)) நவம்பர் 2017 இல் GST சட்டத்தின் 171A பிரிவின் கீழ் நியாயமற்ற லாபம் ஈட்டும் நடவடிக்கைகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டது.
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் உள்ளீட்டு வரிக் கடன் ஆகியவற்றின் விளைவாக நுகர்வோர் பயனடைவதை உறுதி செய்வதேதேசிய இலாப எதிர்ப்பு ஆணையத்தின் முதன்மைப் பணியாகும்.
தேசிய இலாப எதிர்ப்பு ஆணையம் முதலில் 2019 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு செயல்பட திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் நவம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் 45வது GST கவுன்சில் கூட்டத்தில் 30 நவம்பர் 2022 வரை மேலும் 1 ஆண்டு நீட்டிப்பு வழங்கியது. தற்போது இவ்வமைப்பின் பதவிக்காலம் 30.11.2022 இல் முடிவடைந்து, இந்த அமைப்பு கண்காணித்த அனைத்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இலாபத்திற்கு எதிரான புகார்களையும், 1.12.2022 முதல் இந்தியப் போட்டி ஆணையம் (Competition Commission of India (CCI)) கையாளவுள்ளது.
கூ.தக. : இந்திய போட்டி ஆணையம் போட்டி சட்டம் 2002 (Competition Act, 2002) - இன் கீழ் 20-5-2009 ல் தொடங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.