Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்தியாவிலேயே முதல் முறையாக “தமிழ்நாடு யானை இறப்பு தணிக்கை கட்டமைப்பு" (‘Tamil Nadu Elephant Death Audit Framework’) தொடக்கம்

 இந்தியாவிலேயே  முதல் முயற்சியாக  யானைகள் இறப்பதற்கான காரணங்களை ஆவணப்படுத்த ”தமிழ்நாடு யானை இறப்பு தணிக்கை கட்டமைப்பை"  (‘Tamil Nadu Elephant Death Audit Framework’) தமிழ்நாடு  அரசு உருவாக்கியுள்ளது. மாநில வனவிலங்கு வாரியக் கூட்டத்தின் போது,   16.11.2022 அன்று முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்   இதனை வெளியிட்டார்.

இந்த கட்டமைப்ப்பானது, யானையின் மரணத்திற்கான காரணத்தை  கண்டறிவதற்காக பிரேத பரிசோதனையை நடத்துவதற்கு ஒரு முறையான தரநிலை நெறிமுறையை பரிந்துரைத்தல், யானைகளின் தடுக்கக்கூடிய மற்றும் இயற்கைக்கு மாறான மரணங்களின் சூழ்நிலைகளை ஆய்வு செய்து புரிந்துகொள்வது மற்றும் இயற்கைக்கு மாறான மற்றும் தடுப்பு மரணங்களைத் தடுப்பதற்கான பரிகார நடவடிக்கைகளை வகுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. இந்த முறைமையின் மூலம், வெளிப்படையான செயல்முறை மூலம்  நம்பகத்தன்மையுடன் யானைகளின் இறப்பு மதிப்பீட்டுத் தரவைச் சேகரிக்க முடியும்.   

 ஊடக அறிக்கைகளின்படி, ஜனவரி 1, 2021 மற்றும் மார்ச் 15, 2022 க்கு இடையில் தமிழ்நாட்டின் வனப் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 131 யானைகளில், 13 மட்டுமே மனிதனால் தூண்டப்பட்டவை. மீதமுள்ளவற்றில், 118 இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை; மின்சாரம் தாக்கியதால் ஆறு; ரயில் தாக்குதலால் நான்கு; ஒன்று சாலை விபத்து மற்றும் இரண்டு பழிவாங்கும் கொலைகள் காரணமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot