Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

ஒரே நாடு ஒரே உரம்" திட்டத்தின் கீழ் 'பாரத் யூரியா' உரம் தயாரித்த முதல் நிறுவனம் " ஸ்பிக் "

மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே உரம்' கொள்கையின் அடிப்படையில் நாட்டிலேயே முதல் நிறுவனமாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் 'பாரத் யூரியா' என்ற பெயரில் உரம் விநியோகத்தை 1.12.2022 அன்று தொடங்கியுள்ளது.

'ஒரே நாடு ஒரே உரம்' என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 2022- இல் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், அரசின் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் அனைத்து உரங்களையும் 'பாரத்' என்ற ஒற்றை பெயரில் தான் சந்தைப்படுத்த வேண்டும். அதாவது பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் பொட்டாஷ், பாரத் காம்ப்ளக்ஸ் என்ற பெயரில் தான் உர நிறுவனங்கள் தங்கள் உரங்களை சந்தைப்படுத்த வேண்டும்.

மேலும் உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர், 'லோகோ' பிற தயாரிப்பு தொடர்பான தகவல்களை, உரப் பைகளில் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் அடியில் தான் அச்சிட வேண்டும். மீதமுள்ள இடத்தில், பாரத் என்ற பெயர் மற்றும் பிரதமரின் பாரதிய ஜன் உர்வரக் பரியோஜனா திட்டத்தின் லோகோ இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி : தமிழ் இந்து


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot