Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்பு

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 14.12.2022 அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் அமைச்சராக பொறுப்பேற்றார். 

துறை பற்றி ... 

மனிதவள மேம்பாட்டின் முக்கிய அங்கமாக திகழும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, இளைஞர்களிடையே சுகாதாரம், தோழமை, நட்புடன் கூடிய போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்து, அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்த தெளிவான தாக்கத்தை உண்டாக்கும். அனைத்து தரப்பு இளைஞர்களிடையே நல்ல குடிமகனாக விளங்குவதற்கான தகுதிகள், சமுதாய பனிக்காக தங்களை அர்ப்பணித்தல் போன்ற பண்புகளை வளர்ப்பதே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிக்கோளாகும். தனிநபர் பண்புகளை வளர்த்தல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் குறிக்கோளுக்காக பொறுப்பேற்கும் எண்ணத்தை உருவாக்குதல் ஆகியவற்றிற்காக இளைஞர்களிடையே தொண்டு செய்யும் மனப்பான்மையை நிலைநிறுத்த மற்றும் வலுவூட்டுவதை இத்துறை வலியுறுத்துகிறது. விளையாட்டு மற்றும் போட்டிகள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப் பணித்திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் இளைஞர்களிடையே அடிப்படை பண்புகளை வளர்த்து, அவர்களை பொறுப்புமிக்க குடிமகன்களாக மலரச் செய்கின்றன. நமது மாநிலம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் பெற்றிருக்கும் உறுதியான உள்ளாற்றல் மற்றும் போட்டி மனப்பான்மைகளை கண்டறிந்து, தீவிரமாக வளர்க்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள இளைஞர்களின் திறமைகளை கண்டறிய முயற்சித்து, அதன் மூலம் அவர்களின் திறமையை மேம்படுத்த சந்தர்ப்பம் அளிப்பதற்கும், போட்டியில் சிறந்து விளங்கும் நாட்டத்தினை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து கவனம் ச்செலுத்தப்படும்.


அமைச்சர் உதயநிதி தனது அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர்   முதலாவதாக முதல்வர் கோப்பை மாநில கபடி போட்டிக்கு ரூ.47 கோடி ஒதுக்கும் கோப்பு, துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கவும், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு தலா ரூ.6000 உதவித்தொகை வழங்கும் கோப்பு ஆகியவற்றில்  அமைச்சர்  உதயநிதி கையெழுத்திட்டார்.


கூ.தக. : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களைக்கொண்ட அமைச்சரவை கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.