Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

"பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ரித்வா அபியான்" (Pradhan Mantri Surakshit Matritva Abhiyan” (PMSMA))

கருவுற்ற தாய்மார்களின், தரம் வாய்ந்த பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களின் கற்பகாலத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது டிரைமஸ்டர்களில் (2nd / 3rd trimesters)    இலவசமாக, குறிப்பிட்ட தினங்களில், ஒவ்வொரு மாதமும் பிரதி 9 ஆம் தேதியில் மகப்பேற்றுக்கு முந்தைய மருத்துவ கவனிப்பு வழங்கப்படும் மத்திய அரசின் திட்டமே   "பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ரித்வா அபியான்" (Pradhan Mantri Surakshit Matritva Abhiyan” (PMSMA))  ஆகும்.   இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 


இதற்கென ஏற்படுத்தப்படும் பிரதான் மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ முகாம்களில் ஒவ்வொரு மாதமும் ஒன்பதாம் தேதி கருவுற்ற பெண்களுக்கு கர்ப்பகால மருத்துவசேவைகள் அளிக்கப்படுகின்றன.  இந்த ஏற்பாட்டினால் ஆறு மாதத்திற்குள் அல்லது ஒன்பது மாதத்திற்குள் கருவுற்ற பெண்களுக்கு ஒரு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஒருமாதத்தின் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகவோ, வேறு விடுமுறை நாளாகவோ இருந்து விட்டால் அதற்கு அடுத்த நாள் முகாம்கள் செயல்படும்


ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய மருத்துவ மையங்கள், ஊரக மருத்துவமனைகள், துணை மாவட்ட மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், நகர்ப்புற மருந்தகங்கள், பேறுகால விடுதிகள் போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot