Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

வாசெனார் ஒப்பந்த அமைப்பின் (Wassenaar Arrangement) தலைமைப் பொறுப்பில் இந்தியா

 வாசெனார் ஒப்பந்த அமைப்பு  (Wassenaar Arrangement)  எனப்படும் சர்வதேச பலதரப்பு தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு   அமைப்பின்  தலைமையை இந்தியா 1 ஜனவரி 2023 அன்று  முதல் ஒரு வருட காலத்திற்கு ஏற்கவுள்ளது.

Wassenaar Arrangement (WA) பற்றி:   1996 இல் நிறுவப்பட்ட வாசெனார் ஒப்பந்த அமைப்பு   பலதரப்பு ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒப்பந்த அமைப்பாகும், இது வழக்கமான ஆயுதங்கள் மற்றும்  மறு  உபயோகப் பொருட்களின் பரிமாற்றங்களைக் கண்காணிக்கிறது.  42 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இவ்வமைப்பு  தன்னார்வ அடிப்படையில் செயல்படுகிறது.  பயங்கரவாத அமைப்புகளுக்கு  தொழில்நுட்பங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதே இந்த அமைப்பின் முதன்மை குறிக்கோள் ஆகும். 

1996 இல் செயல்பாட்டுக்கு வந்த  வாசெனார் ஒப்பந்த அமைப்பில் இந்தியா 2017 இல்   42 வது   உறுப்பினராக இணைந்தது.  இதன் செயலகம் வியன்னாவில் (ஆஸ்திரியா) அமைந்துள்ளது. . 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot