20-வது தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்)-இந்தியா உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் 7.9.2023 அன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அவர்கள், போக்குவரத்து, டிஜிட்டல் மாற்றம், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாடு, சமகால சவால்களை எதிர்கொள்வது, மக்களுக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் திட்டமிடல் ஈடுபாட்டை வலுப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியா - ஆசியான் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான 12 அம்ச முன்மொழிவை பின்வருமாறு முன்வைத்தார்:
• தென்கிழக்கு ஆசியா-இந்தியா-மேற்கு ஆசியா-ஐரோப்பாவை இணைக்கும் பன்முக இணைப்பு மற்றும் பொருளாதார வழிதடத்தை நிறுவுதல்
• இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு முறைகளை ஆசியான் நாடுகளின் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
• டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிதி இணைப்பில் ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட டிஜிட்டல் எதிர்காலத்திற்கான ஆசியான்-இந்தியா நிதி இதில் அறிவிக்கப்பட்டது
• ஆசியான் மற்றும் கிழக்காசியாவின் பொருளாதார மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நமது ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான அறிவுசார் கூட்டாளியாக செயல்படுவதற்கான ஆதரவை புதுப்பிப்பதாக அறிவிக்கப்பட்டது.
• உலக அளவில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பல்வேறு மட்டத்தில் கூட்டாக எழுப்ப அழைப்பு
• இந்தியாவில் உலக சுகாதார நிறுவனத்தால் நிறுவப்பட்டு வரும் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தில் சேர ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு
• சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை, அமைப்பில் இணைந்து பணியாற்ற அழைப்பு
• மக்கள் மருந்தகங்கள் மூலம் மக்களுக்கு மலிவு மற்றும் தரமான மருந்துகளை வழங்குவதில் இந்தியாவின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கப்பட்டது
• தீவிரவாதம், தீவிரவாதத்திற்கு நிதியுதவி மற்றும் இணையத்தில் தவறான தகவல்களுக்கு எதிராக கூட்டுப் போராட்டத்திற்கு அழைப்பு
• பேரழிவைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் சேர ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு
• பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைக்க அழைப்பு
• கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் கள விழிப்புணர்வு ஆகியவற்றில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கு அழைப்பு
கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த இரண்டு கூட்டு அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்தியா மற்றும் ஆசியான் தலைவர்களைத் தவிர, கிழக்கு தைமூர் பிரதிநிதி இந்த உச்சிமாநாட்டில் பார்வையாளராக பங்கேற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.