தூய்மை இந்தியா (Swachh Bharat) தினத்திற்கு (அக்டோபர் 2) முன்னோட்டமாக, தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம், ஊரகம் ஆகியவை இணைந்து வருடாந்திர தூய்மையே சேவை 2023 (Swachhata Hi Seva- 2023) இருவார இயக்கத்தை செப்டம்பர் 15 முதல் அக்டோபர் '23 வரை ஏற்பாடு செய்துள்ளன. இந்தியன் பொதுமக்கள் தூய்மை இயக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் பங்களிப்பை திரட்டுவது இந்த இருவார இயக்கத்தின் நோக்கமாகும்.
கூ.தக. : ஸ்வச் பாரத் மிஷன் அக்டோபர் 2, 2014 அன்று, ஒரு தேசிய இயக்கமாக நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. தூய்மைக்கான வெகுஜன இயக்கத்தை வழிநடத்தும் அதே வேளையில், தூய்மையான மற்றும் சுகாதாரமான இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றுமாறு மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.