விருதுநகர், இ.குமார லிங்கபுரத்தில், 250 ஏக்க ரில், 400 கோடி ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த ஆடைகள் பூங்கா அமைக் கும் பணியில், 'சிப்காட்' எனப்படும் தமிழக அர சின் தொழில் முன்னேற்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசு, ஜவுளி துறை கட்டமைப்பை மேம்படுத்த, மாநில அரசு களுடன் இணைந்து, தமி ழகம் உட்பட ஏழு மாநி லங்களில், ‘பிரதமரின் ஒருங்கிணைந்த மாபெரும் ஜவுளி பூங்கா' அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பூங்காவை, தமிழகத்தில், விருதுநகரில் உள்ள இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் அமைக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு இடையே மார்ச் 2023 இல் கையெழுத்தானது. முதலீடு இந்த ஜவுளி பூங்கா, 1,052 ஏக்கரில், 2,000 கோடி ரூபாயில் அமை கிறது. அதில், 500 கோடி ரூபாயை, மத்திய அரசு மானியமாக வழங்க உள்ளது. நிலம் கையகப்படுத் தும் பணி முடிந்துவிட்டது. இதனால் தென் மாவட் டங்களில், இரண்டு லட் சம் பேருக்கு வேலை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஜவுளி பூங்கா வளாகத்தில், 250 ஏக்கரில் ஒருங்கிணைந்த ஆடைகள் பூங்காவை, 400 கோடி ரூபாய் செலவில் சிப்காட் அமைக்கிறது.
நன்றி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.