Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு - உறுதியானது

 கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில்  நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இருவர் உயிரிழப்புக்கு நிபா வைரஸ்தான் காரணம் என்று சோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. 

பழம் தின்னும் வௌவால்கள் உடலில் இந்த வைரஸ்கள் உள்ளன. இது நேரடியாக வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவலாம். அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், அவற்றின் கழிவுகள் மூலமாக அல்லது, அவை கடித்த பழங்களை உண்பதாலும் ஏற்படலாம்.

கேரள மாநிலத்தில் பரவியுள்ள நிபா வைரஸ், வங்கதேச வகை யைச் சார்ந்தது என்று தெரிய வந்துள்ளது.

நிபா வைரஸ் பரவும் முறை : 

பழம் தின்னும் வௌவால்கள் உடலில் இந்த வைரஸ்கள் உள்ளன. இது நேரடியாக வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவலாம். அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், அவற்றின் கழிவுகள் மூலமாக அல்லது, அவை கடித்த பழங்களை உண்பதாலும் ஏற்படலாம்.

வௌவால்கள் மூலம் குதிரை, நாய், எலி, பூனை, பன்றி என பிற வீட்டு வளர்ப்பு - மனித தொடர்புடைய விலங்குகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் மனிதர்களுக்குப் பரவலாம்.  

காய்ச்சல் ஏற்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து, அவருக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் பரவலாம். நோயாளியின் உடல் திரவங்கள் (உமிழ் நீர், ரத்தம், சிறுநீர்) மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவலாம். 

நிபா வைரஸ் - அறிகுறிகள் : 

காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல்/வாந்தி, அதையடுத்து மூச்சுத்திணறல், அதிகபட்சமாக மூளை, சிறுமூளை, நரம்பு மண்டலப் பாதிப்புகளால் மரணம் கூட நேரிடும்.

நன்றி : தினமணி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot