'தொழில்முனைவோருக்கு கல்வி: ஒரு தலைமுறை மாணவர்கள், கல்வியாளர்கள், தொழில் முனைவோரை மேம்படுத்துதல்' (‘Education to Entrepreneurship: Empowering a generation of students, educators, and entrepreneurs’) என்ற பெயரிலான திட்டத்தினை செயல்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சகம் , திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் , மற்றும் Meta (முன்னதாக Facebook) ஆகியவற்றுக்கு இடையே மூன்று ஆண்டுகளுக்கான ஒரு ஒத்துழைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மெட்டா (Meta) மற்றும் முக்கிய நிறுவனங்களான தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் (National Institute for Entrepreneurship and Small Business Development (NIESBUD)), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (All India Council for Technical Education (AICTE)) மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE)) ஆகியவற்றுக்கு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
திட்டத்தினைப் பற்றி …
இளைய தலைமுறையினர் சிக்கலைத் தீர்ப்பவர்களாகவும், தொழில்முனைவோராகவும் ஆக்குவதன் மூலம் டிஜிட்டல் திறன்களை அடிமட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கான இந்த திட்டம், மாணவர்கள், இளைஞர்கள், பணியாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர் ஆகியோரை நவீன தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைப்பதற்கு இது துணைபுரியும்.
இத்திட்டத்தின் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 500,000 தொழில்முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தொடக்கத்தில் ஏழு பிராந்திய மொழிகளில் இந்த பயிற்சி வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.