Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தமிழ்நாடு காவல்துறையில் ரெளடிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படும் ‘ட்ராக் கேடி’ (Track KD app) செயலிக்கு தேசிய குற்ற ஆவண காப்பக பதக்கம்

  • தில்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் சாா்பில் அண்மையில் ‘ஹக்கத்தான் மற்றும் சைபா் குற்ற சவால்கள்’ என்ற தலைப்பில் புதிதாக உருவாகும் குற்றங்களுக்கு தீா்வுகளை கண்டுபிடிப்பது தொடா்பான போட்டியில், கணினி மென்பொருள் பிரிவில்,  தமிழ்நாடு  காவல்துறையின் ‘ட்ராக் கேடி’ செயலி (Track KD app) மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது.
  • கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பா் 25-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்தச் செயலியின் மூலம் மாநிலம் முழுவதும் ரெளடிகள் கண்காணிக்கப்படுகிறாா்கள். இதற்காக காவல்துறையின் ரெளடிகள் பட்டியல், சரித்திரப் பதிவேட்டு பட்டியலில் உள்ள தொடா் குற்றவாளிகள் உள்ளிட்ட சுமாா் 30 ஆயிரம் பேரின் விவரங்கள்,புகைப்படங்கள், வழக்கு விவரங்கள், கைப்பேசி எண்கள் உள்ளிட்டவை செயலியின் சா்வரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • காவல்துறையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த செயலியை சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான குழுவினா் உருவாக்கினா்.
  • இதன் மூலம் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள், நீதிமன்றத்தால் பிடிஆணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள், தலைமறைவு குற்றவாளிகள் ஆகியோா் கண்டறியப்பட்டு, உடனே கைது செய்யப்படுகின்றனா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot