Tamil Nadu (Unit V)
பேராசிரியர் தி. இராசகோபாலன் அவர்கள் எழுதிய "கலைஞரின் பேனா” நூலினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 28.5.2025 அன்று வெளியிட்டார்.
1952 முதல் 2024 வரையிலான தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, ஏப்ரல் 2025 இல் முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட பிரத்யேக இணைய போர்ட்டல் மூலம் பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாக ஆக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னாளுமை நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தகவல் களஞ்சியத்தில் சட்டமன்ற விவாதங்கள், சட்டங்கள், நல திட்டங்கள், உரைகள், புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்புகள் அடங்கியுள்ளன, மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருமொழி தேடல் வசதிகளை வழங்குகிறது. இந்த முயற்சியானது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த, சட்டமன்ற வரலாற்றைப் பாதுகாக்க, மற்றும் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அணுகலை எளிதாக்க நோக்கமாகக் கொண்டுள்ளது. 1952 க்கு முன்பு, 1921 இல் இருந்து தொடங்கும் நடவடிக்கைகளின் டிஜிட்டல் மயமாக்கல் அடுத்த கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil - CICT) சமீபத்தில் திருக்குறளை நான்கு முக்கிய திராவிட மொழிகளான குருக் (Kurukh), கோண்டி (Gondi), மால்டோ (Malto), மற்றும் பிராஹுய் (Brahui) ஆகியவற்றில் மொழிபெயர்த்துள்ளது.
தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு :
திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8 சதவீதத்திலிருந்த்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
"பொது சுகாதாரம் 2025 வட்டமேசை" (Roundtable on Public Health 2025): தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை மற்றும் தடுப்பு மருத்துவம், மற்றும் செல்லுலார் மற்றும் மாலிகுலார் பிளாட்ஃபார்ம்களுக்கான மையம் (Centre for Cellular and Molecular Platforms (C-CAMP)) ஆகியவை இணைந்து "பொது சுகாதாரம் 2025 வட்டமேசை" (Roundtable on Public Health 2025) ஒன்றை நடத்தின, இதன்போது அவர்கள் உள்நாட்டு சுகாதார தீர்வுகள் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் விரிவான முதன்மை சுகாதார சேவை வழங்கலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மூலோபாய கூட்டணியை அறிவித்தனர்.
C-CAMP இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் கூடிய ஒரு ஆழ்ந்த-அறிவியல் கண்டுபிடிப்பு மையம் (deep-science innovation hub) ஆகும்.
மேயர் திரு.எஸ்.முத்து சிலை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1999-ஆம் ஆண்டு மதுரையில் திறக்கப்பட்ட மதுரை முதல் மேயர் திரு.எஸ்.முத்து அவர்களின் புதுப்பிக்கப்பட்ட சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 31.5.2025 அன்று மதுரையில் திறந்து வைத்தார்.
4 +11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம் :
உயர்கல்வித் துறை சார்பில் 2025-2026 நிதியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவற்றின் மூலம் சார்ந்த பகுதிகளிலுள்ள 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள்.
ஏற்கனவே, தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 26.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி துறையில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் :
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) சாதனை :
2014-ல் 'Make in India' திட்டம் தொடங்கப்பட்டபோது, 2025-க்குள் உற்பத்தித் துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25% ஆக உயர்த்துவதை இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் தற்போது வரை 16% சதவீதம் எட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 25% உற்பத்தித் துறையிலிருந்து பெற்று நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலமாக உள்ளது.
உலகத் தரத்தில் உற்பத்தி மையம்
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், சாம்சங், ஹுண்டாய், ஃபோர்ட், நிஸான், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், அசோக் லேலண்ட் போன்ற உலகளாவிய பெருநிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
உலகளவில் புகழ்பெற்ற ஆப்பிள்(Apple) போன்களை தயாரிக்கும் நிறுவனங்களில் 50,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல லட்சக்கணக்கான ஐபோன்களை உற்பத்தி செய்கின்றனர். அதேபோல், நைக் (Nike) நிறுவனத்திற்கான பொருள்களைத் தயாரித்து வழங்குவதில் முதன்மை நிறுவனமாக இருக்கும் ஃபெங் டே (Feng Tay) நிறுவனம் 37,000 பணியாளர்களுடன் பல தொழிற்சாலைகளை இயக்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 31,000-க்கும் மேற்பட்ட செயல்பாட்டில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளன, இதுதான் இந்தியாவில் அதிகமான எண்ணிக்கை ஆகும்.
இந்தியாவிலேயே ஏற்றுமதியில் முன்னணியில் நிற்கும் தமிழ்நாடு :
தமிழ்நாடு ஆடைகள், வாகன உற்பத்தி, பொறியியல் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதுல் இந்தியாவிலேயே
முதன்மையான மாநிலமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 6% க்கும் குறைவாக இருந்தாலும், எண்ணெய் அல்லாத பொருட்களில்ன் ஏற்றுமதியில் 15% பங்கைத் தமிழ்நாடு வகிக்கிறது.
இந்தியாவின் 41% மின்னணு சாதனப் பொருட்கள், 38% காலணிகள் மற்றும் 45% வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தமிழ்நாட்டில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் உற்பத்தி துறையின் சிறப்பான வளர்ச்சியினால் இந்தியாவில் 9.69 விழுக்காடு மாநில உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தி நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் வெற்றிக்கான முக்கிய காரணிகள் :
உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைக் கிளஸ்டர்கள்
இந்த சாதனைகள் ஓரிரவில் நடந்தது அல்ல. மாநில அரசு தொடர்ந்து துறைமுகங்கள் (சென்னை, தூத்துக்குடி போன்றவை), சாலை வலையமைப்புகள் மற்றும் தொழிற்துறை நிலங்களில் முதலீடு செய்துள்ளது. 1971-ஆம் ஆண்டு திமுக அரசால் நிறுவப்பட்ட SIPCOT (தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம்) தொழிற்பூங்காக்களை உருவாக்கி, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை உற்பத்திதுறை தேசிய அளவில் பிரபலமாகும் முன்பே உயர்த்தியிருந்தது. இதனால், முதலீட்டாளர்கள் வருவதற்கு முன்பே அவர்களுக்கான நிலம் மற்றும் அடிப்படை வசதிகள் தயாராக இருந்தன. கோயம்புத்தூர் (பொறியியல் பொருட்கள்), சென்னை (வாகனங்க), திருப்பூர் (துணிகள்) போன்ற நகரங்கள் சிறப்புத் துறை மையங்களாக உருவெடுத்தன.
முதலீட்டாளர்களுக்கு அரசின் ஆதரவு
தமிழ்நாடு அரசின் Guidance Tamil Nadu என்பது ஒரு முழுச் சேவை முதலீட்டு மையமாகும். பல மாநிலங்களில் "ஒற்றை சாளர் அனுமதி", "முதலீட்டாளர் மாநாடுகள்" என்பவை வெறும் பிரசாரமாக இருந்தாலும், தமிழ்நாடு நடைமுறையில் இதை செயல்படுத்துகிறது.
'Guidance Tamil Nadu' நிறுவனங்களுக்கு நிலம், அனுமதிகள், தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் அன்றாட செயல்பாட்டு சிக்கல்களுக்கு உதவுகிறது. இந்த விரைவான மற்றும் திறமையான அணுகுமுறை, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது.
செயல்திறன் மிக்க அரசு நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் :
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசும் அரசுப் பணியாளர்களும் தடையாக இல்லாமல், விரைவான தீர்வுகளை வழங்குகின்றனர். மத்திய அரசு மின்னணு சாதனங்களின் உதிரிபாகங்களுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிவித்தபோது, தமிழ்நாடு ஒரு வாரத்திற்குள் தனது திட்டத்தை அறிவித்து, மின்னணு சாதனங்களின் ஏற்றுமதியை தற்போது உள்ள $14 பில்லியனிலிருந்து $100 பில்லியனாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்தது.
அரசியல் மற்றும் நிர்வாகத் தலைமை
அரசியல் மற்றும் நிர்வாகத் தலைமை தொழிலாளர் பிரச்சினைகளுக்கு சமரச தீர்வுகளை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, சாம்சங் தொழிற்சாலையில் வேலைநிறுத்தம் ஏற்பட்டபோது, அரசு தலையிட்டு விரைவாகத் தீர்வு கண்டது அரசின் செயலூக்கமுள்ள நடைமுறையை காட்டுகிறது
தமிழ்நாடு 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடே இந்தியாவில் உற்பத்திதுறையில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு வழிக்காட்டும் மாநிலமாக இருக்கிறது.
தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (Clean Tamil Nadu Company Limited (CTCL)) :
தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் தினம்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தினை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (CTCL) என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது
தூய்மை இயக்கத்தின் கீழ் செயல்படும் தூய்மை தமிழ்நாடு நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலையான கழிவு மேலாண்மையை கட்டமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக மற்றும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சரியான முறையில் கையாளவும் அவற்றை மறுசுழற்சி செய்யவும் ஒரு வலுவான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து கழிவு பொருட்களையும் சேகரிக்கும் நிறுவனங்களையும் மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களையும் தேர்வு செய்து அவற்றின் பட்டியல்கள் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சாதனைகள் மற்றும் முன்னெடுப்புகள் :
44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 :
இந்திய வரலாற்றில் முதன்முறையாகவும் தமிழ்நாடு அரசும் இந்திய சதுரங்கக் கூட்டமைப்பும் இணைந்து ஏறத்தாழ 114 கோடி ரூபாய்ச் செலவில் மாமல்லபுரத்தில் உலகப் புகழ் பெற்ற 44-வது செஸ் ஒலிம்யாட் போட்டி 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகின் 186 நாடுகளைச் சார்ந்த 1654 சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு Man of the Year" என்கின்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
சென்னை ஃபார்முலா- 4 கார் பந்தயம் 2024 :
இந்தியாவிலேயே முதல்முதலாக இரவு நேர ஃபார்முலா-4 கார் பந்தயப் போட்டியை 2024 ஆகஸ்ட் மாதத்தில் சென்னை மாநகரில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் 3.7 கிலோமீட்டர் சுற்று வட்டத்தில் 15 நாடுகளைச் சேர்ந்த 40 ஓட்டுநர்கள் பங்குபெற்றார்கள்.
சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி-2022 :
தமிழ்நாடு அரசின் 5 கோடி ரூபாய் நிதி உதவியுடன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி டென்னிஸ் சங்கத்தினால் சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்ற வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் அவர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்கள்.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை-2023 :
சர்வதேச ஸ்குவாஷ் ஸ்குவாஷ் போட்டி 2023 சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது.
ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி -2023
7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – 2023 தமிழ்நாடு அரசு வழங்கிய வழங்கிய 22.66 கோடி ரூபாய் நிதியுதவியுடன் ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் உலகின் முதல் Polygras Paris GT Ecoturf செயற்கை இழையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023 :
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்புடன் நடத்தப்பட்டது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சார்ந்த 5,630 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இப்போட்டியில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் 2 ஆம் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்தது.அதற்கு முன்னதாக, 5-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2022 இல், 288 வீரர்கள் பங்கேற்று 52 பதக்கங்களுடன் தமிழ்நாடு 8-வது இடம் பெற்றிருந்தது.
சர்வதேச அலை சறுக்குப் போட்டி- 2023 :
உலகளவில் புகழ்பெற்ற சர்வதேச அலை சறுக்குப் போட்டி-2023 மாமல்லபுரத்தில் 2 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் சிறப்புடன் நடைபெற்றது.
முதலமைச்சர் கோப்பை-2023 & 2024 :
15 விளையாட்டுகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை-2023, கடந்த 2023ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ. 50.86 கோடி செலவில் நடத்தப்பட்டது. முதலமைச்சர் கோப்பை 2024 இல் ரூ. 83.37 கோடி செலவில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளில் 5 இலட்சத்து 29 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஒரு புதிய வரலாற்றை படைத்தனர். மேலும், தமிழ்நாட்டில் முதன்முறையாக சர்வதேச அலை சறுக்குப் போட்டி, அண்ணா மாரத்தான் போட்டி, ஹெச்.சி.எல் சைக்கோளத்தான், அண்ணா மிதிவண்டிப் போட்டி உள்ளிட்ட வேறுபல போட்டிகளும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட் ளை :
திறமை உள்ள வீரர் வீராங்கனைகளின் தேவைகளை நிறைவு செய்து அவர்களின் கனவுகளுக்குச் சிறகுகள் கொடுக்கும் முனைப்புடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 8.5.2023 அன்று புதிய முயற்சியாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 680 வீரர் வீராங்கனைகளுக்கு ருபாய் 17 கோடி அளவிற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று 174 பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்குப் புகழ் தேடித் தந்துள்ளனர்.
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் தமிழக விளையாட்டு வீரர்கள் :
17 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.1.19 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பாராலிம்பிக் 2024 போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 4 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5.00 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள் :
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் வாயிலாகத் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பிரபலமான 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் தலா 3 கோடி ரூபாய்ச் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 75 சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
4,617 விளையாட்டு வீரர்களுக்கு 152.52 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை :
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள 4,617 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு உயரிய ஊக்கத் தொகையாக 152 கோடியே 52 இலட்சம் ரூபாய் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
எலைட் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை ரூ. 25 இலட்சம் என்பது ரூ. 30 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் :
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கவும், அவர்களின் பயிற்சித் திறனை மேம்படுத்திடும் வகையிலும் 2023-2024 நிதி நிலை அறிக்கை விவாதத்தின்போது டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டுக் கருவிகள் வழங்கப்படும் என முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டதன்படி 18.2.2024 அன்று மதுரை மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது முதல் 86 கோடி ரூபாய்ச் செலவில் அனைத்து 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் 16,798 விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண திட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.
விளையாட்டுத் துறை குவித்து வரும் விருதுகள் :
விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகரிக்கப்பட்டு, அகில இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) சார்பில் "விளையாட்டு விருது-2023" வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஏசஸ் விருதுகள் 2023, 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும், வழங்கப்பட்டு தமிழ்நாடு சிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறை வளர்ச்சி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அளித்து வரும் ஊகத்தைப் பாராட்டி ஜெம் அவார்ட்ஸ் 2025 விருது வழங்கப்பட்டுள்ளது. இளைய உலக செஸ் சாம்பியனான டி.குகேஷ், 2024 ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருதைப் பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது 4 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் பெற்றுள்ளனர். 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு 26 தங்கம் 31 வெள்ளி மற்றும் 35 வெண்கலப் பதக்கங்களுடன் 6வது இடத்தைப் பிடித்துச் சாதித்துள்ளது.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது :
கடந்த 4 ஆண்டுகளில் சிறந்த சமூக சேவைக்காக 10 ஆண்களுக்கும், 8 பெண்களுக்கும் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளது. இந்த விருது, பதக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றுடன் ரூ.1,00,000 ரொக்கப் பரிசும் கொண்டது.
பல்நோக்கு விளையாட்டு அரங்கம் :
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் பயிற்சி மையத்துடன் கூடிய பல்நோக்கு விளையாட்டு அரங்கம் ரூ.14.77 கோடியில் அமைக்கப்படுகிறது.
திறமையான விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் :
சிலம்பம் விளையாட்டு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது;. சர்வதேசப் போட்டி மற்றும் பாரா ஒலிம்பிக் தேசிய போட்டிகளில் பதக்கங்களை வென்ற 104 விளையாட்டு வீரர்கள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டுள்ளனர்.
நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கான ஓய்வூதியத் திட்டம் :
நலிவடைந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டு. 74 வீரர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடெமிகள் :
ஒலிம்பிக் அகாடமி போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் பெறுவதற்குத் தகுதி படைத்த வீரர்களை உருவாக்கிடும் பணியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முனைந்துள்ளது. இதன் பொருட்டு உயர் செயல் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் நோக்கில் சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரி ஆகிய இடங்களில் ஒலிம்பிக் அகாடெமிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு உரிய உயர்தரப் பயிற்சிகள் வழங்கிட நிபுணத்துவம் வாய்ந்த 76 புதிய பயிற்சியாளர்கள் 4 வெளிநாட்டு பயிற்சியாளர்கள் 5 நிபுணர்கள் 2 பாரா விளையாட்டுப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மிஷன் இன்டர்நேஷனல் மெடல் திட்டம் (MIMS) :
சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்ல விளையாட்டு திறமைகளை வளர்க்க, மிஷன் இன்டர்நேஷனல் மெடல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கான நிதி உதவி ரூ.10.00 இலட்சத்திலிருந்து ரூ.12.00 இலட்சமாக உயர்த்தப்பட்டு, 71 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
"உழவரைத் தேடி - வேளாண்மை-உழவர் நலத்துறை" திட்டம் தொடக்கம் : வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் "உழவரைத் தேடி - வேளாண்மை-உழவர் நலத்துறை" திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 29.5.2025 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து கிராமங்களுக்கு நேரடியாக சென்று உழவர்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை அறிந்து, அதற்கான திட்டங்களை வழங்கிட புதிய தொழில் நுட்பங்களை எடுத்துக்கூறிட ஏதுவாக 2025-26ஆம் ஆண்டு வேளாண்மை தனிநிதிநிலை அறிக்கையில் "உழவர்களைத் வேளாண்மை-உழவர் நலத்துறை" திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 17,116 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்மூலம் வேளாண்மை விரிவாக்க சேவைகள் மற்றும் அரசின் திட்டங்கள் உழவர்களுக்கு அவர்களுடைய கிராமத்திலேயே வழங்கப்படும். மேலும், இத்திட்டத்திற்கான முகாம்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை (2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில்) ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும். இதன்மூலம் விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன் அரசு நலத்திட்ட உதவிகள் அவர்களை விரைவாக சென்றடையும்.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு மாதமும் நான்கு கிராமங்கள் வீதம் மொத்தம் மாதந்தோறும் 1540 கிராமங்களில் "உழவரைத் தேடி-வேளாண்மை-உழவர் நலத்துறை திட்ட முகாம்கள் நடத்தப்படும்.
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் : செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 29.5.2025 அன்று அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 10,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 91,024 சதுர அடி பரப்பளவில் பொருட்காட்சி அரங்கம், 5,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 50,633 சதுர அடி பரப்பளவில் மாநாட்டு மண்டபம், 1,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 5,12,800 சதுர அடி மொத்த பரப்பளவில் இந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் அமைக்கப்படவுள்ளது.
"எளிமை ஆளுமை" திட்டம் தொடக்கம் :
தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நிர்வாக சீர்திருத்த முன்னெடுப்பின் மூலமாக "எளிமை ஆளுமை" திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ், பொது கட்டிட உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம், மகளிர் இல்லங்கள் உரிமம், சொத்து மதிப்பு சான்றிதழ், வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல், புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்கு பயன்படுத்த தடையின்மை சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், அரசாங்க ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ் ஆகிய பத்து சேவைகளின் நடைமுறைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக இணையவழி சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 29.5.2025 அன்று தொடங்கி வைத்தார்.
’எப்போதும் அரசு சேவைகளை பொதுமக்கள் இணையவழி வாயிலாக உடனுக்குடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்" என 21.06.2021 ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் "அரசு நிர்வாக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் பொதுமக்கள் இணையவழியிலே அரசு சேவைகளை விரைவாகவும் எளிமையுடனும் பெற்றிடுவதற்காக தொடங்கப்பட்ட எளிமையான நிர்வாகம் (Simple Gov) எனும் திட்டத்தின் கீழ் எட்டு அரசுத் துறையின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் பல்வேறு துறைகளில் 150 சேவைகளை இணையவழியில் இம்முயற்சியின் கீழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக, சுகாதார சான்றிதழ் (Sanitation Certificate), பொது கட்டிட உரிமம் (Public Buildings License), முதியோர் இல்லங்கள் உரிமம் (Registration of Old Age Homes), பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம், மகளிர் இல்லங்கள் உரிமம் (Registration of Homes for Women), சொத்துமதிப்பு சான்றிதழ் (Solvency Certificate), வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் விரிவாக்கம் (List of White Category Industries under TNPCB), புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்கு பயன்படுத்த தடையின்மை சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் மற்றும் அரசாங்க ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ் ஆகிய 10 சேவைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்து ஆணையிட்டுள்ளது.
இந்த ஆணையமானது பல்வேறு நகர்ப்புர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து மாநில அரசு வழங்கிட வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கிடும். 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தொடங்கும் ஐந்தாண்டுகளுக்கு பொருந்தும் வகையில், இந்த ஆணையம், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 31 ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு அளித்திடும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்ட வகையில், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் பின்வருமாறு நியமித்து ஆணையிட்டுள்ளது:-
(1) தலைவர் : திரு. கே. அலாவுதீன், இ.ஆ.ப., (ஓய்வு)
(2) அலுவல் சாரா உறுப்பினர் : திரு. என்.தினேஷ்குமார், மேயர், திருப்பூர் மாநகராட்சி
(3) உறுப்பினர் (அலுவல் வழி) : நகராட்சி நிர்வாக இயக்குநர்
(4) உறுப்பினர் (அலுவல் வழி) : ஊரக வளர்ச்சி மற்றும் ஆணையர்
(5) உறுப்பினர் (அலுவல் வழி) : பேரூராட்சிகளின் ஆணையர்
(6) உறுப்பினர்-செயலர் : : : திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., ஊராட்சி அரசு துணைச் செயலாளர் (வரவு-செலவு) (முழு கூடுதல் பொறுப்பு), நிதித்துறை.
இந்த ஆணையம், ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின், அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் நிதி நிலையை ஆய்வு செய்து, பிற இனங்களுடன் பின்வருபவை குறித்து பரிந்துரை செய்யும்:-
(i) மாநில அரசு விதிக்கத்தக்க வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றின் நிகர வருவாயினை மாநில அரசுக்கும் ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளுதல், அத்தகைய வருவாயில் மேற்குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே அவற்றிற்குரிய பங்குகளை முறையே பிரித்தளித்தல்;
(ii) ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய அல்லது அவைகளே தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றைத் தீர்மானித்தல்; மற்றும்
(iii) மாநில அரசின் தொகுப்பு நிதியிலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவி மானியங்கள்;
திருநங்கையர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள்:
தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியம் :
கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அரவாணிகளும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதால் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக, "தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்" 15.4.2008 அன்று தொடங்கப்பட்டு, அரவாணிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் வழங்கினார்கள். அத்துடன் அரவாணிகள் என்னும் பெயரை திருநங்கையர் எனவும் மாற்றி அறிவித்தார்கள். அதன் பிறகு அரவாணிகள் நலவாரியம் திருநங்கையர் நலவாரியம் என வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திருநங்கையர் நலவாரியத்தினை 15 அலுவல்சார் உறுப்பினர்கள் (Official Members), 13(10 திருநங்கைகள், 1 திருநம்பி, 1 இடைபாலினர் மேலும் 1 பெண் உறுப்பினர்) அலுவல் சாரா உறுப்பினர்களுடன் (Non Official Members) 2025- ஆம் ஆண்டில் திருத்தியமைத்தார்கள்.
திருநங்கைகள் நலவாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், சொந்த தொழில் தொடங்கிட மானியம், சுய உதவிக்குழுக்கள் அமைத்துப் பயிற்சி அளித்தல், 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் :
வாழ்வாதாரச் செலவுகளுக்கு வருமானம் ஈட்ட இயலாத 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கைகளுக்கு மாதந் தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது அந்த ஓய்வூதியத் தொகையினை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.1,500/- ஆக உயர்த்தி உத்திரவிட்டார்கள்.
இத்திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் நிதியாண்டிற்கு ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 1,599 திருநங்கைகளுக்கு 2025 மார்ச் மாதம் வரை ரூ.281.76 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
"திருநங்கை" கைபேசி செயலி :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி திருநங்கைகளின் நலனை மேம்படுத்தும் விதமாக, அனைத்து திருநங்கைகளும் தங்களது சுயவிவரங்களைப் பதிவு செய்துகொள்ள சிறப்பு முயற்சியாக 2021-ஆம் ஆண்டு "திருநங்கை" என்னும் கைபேசி செயலி உருவாக்கப்பட்டது, அதன் மூலம் திருநங்கைகளின் சுய விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெறுவது எளிமையாக்கப்பட்டது அதன் பயனாக 10,153 திருநங்கைகள் அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளனர்.
திருநங்கைகளுக்கான சிறப்பு விருது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருநங்கைகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி அறிவித்தார்கள். அதன்படி, தங்கள் சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்து, அவர்களுள் முன்மாதிரியாகத் திகழும் திருநங்கை ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ஆம் நாளன்று "திருநங்கைகளுக்கான சிறப்பு விருது" ரூ.1,00,000/- க்கான காசோலை மற்றும் சான்றிதழுடன் வழங்க உத்தரவிட்டார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இந்தத் திட்டத்தின்படி 2.8.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் கிரேஸ் பானு என்பவர்க்கு திருநங்கைக்கு 2021 ஆண்டிற்குரிய திருநங்கைக்கான சிறப்பு விருதை வழங்கிப் பாராட்டினார்கள்.
அது போலவே, 18.4.2022 அன்று விழுப்புரம் மாவட்டம் எ. மர்லிமா என்பவருக்கு 2022 ஆம் ஆண்டிற்குரிய திருநங்கைக்கான சிறப்பு விருதும்; 14.4.2023 அன்று வேலூர் மாவட்டம் பி. ஐஸ்வர்யா என்பவருக்கு 2023ஆம் ஆண்டிற்குரிய திருநங்கைக்கான சிறப்பு விருதும்;
23.7.2024 அன்று கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த சந்தியா தேவி என்பவருக்கு 2024 ஆம் ஆண்டிற்குரிய திருநங்கைக்கான சிறப்பு விருதும்;
15.4.2025 அன்று நாமக்கல் மாவட்டம் ரேவதி என்னும் திருநங்கைக்கும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னி என்னும் திருநங்கைக்கும் ஆக இருவருக்கு 2025 ஆம் ஆண்டிற்குரிய திருநங்கைகான சிறப்பு விருதுகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கிப் பாராட்டினார்கள்.
சுயதொழில் மானியம் :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைப் பொருளாதார ரீதியாக உயர்த்தி, சமுகத்தில் அவர்களுக்கு அங்கீகாரத்தினை வழங்கும் நோக்கத்துடன், அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க மானிய வழங்கும் திட்டத்தினை உருவாக்கினார்கள். அதடன் மூலம் அவர்கள் தொடங்கும் தொழிலின் தேவைக்கேற்ப ரூ.50,000/- வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2021 ஒவ்வொரு ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.
திருநங்கைகளுக்கான கல்விக் கனவு திட்டம் :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திருநங்கைகளும் மற்றவர்களைப் போன்றே சமமாக உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் விதமாக 2024-2025-ஆம் நிதியாண்டு முதல் உயர்கல்வி பயில விரும்பும் திருநங்கைகளுக்கான கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் உட்பட அனைத்துச் செலவினங்களையும் வாரியத்தின் மூலம் வழங்கிட உத்தரவிட்டார்கள். இத்திட்டத்திற்கென 2024-2025- ஆம் நிதியாண்டிற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4 திருநங்கைகளுக்கு கல்விக் கட்டணத் தொகை திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை (Listing Ceremony of "GCC Municipal Bonds" on National Stock Exchange) மணி ஒலித்து முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 26.5.2025 அன்று தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி 10 ஆண்டு காலத்திற்கு, ஆண்டுக்கு 7.97% என்ற மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் 200 கோடி ரூபாய் நகர்ப்புர நிதிப் பத்திரங்களை வெற்றிகரமாகத் திரட்டியது. 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட நகர்ப்புர நிதிப் பத்திர வெளியீடுகளிலும் இதுவே மிகக் குறைந்த வட்டி விகிதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெளியீட்டுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி 100 கோடி ரூபாய் அடிப்படை வெளியீட்டுத் தொகையை விட 4.21 மடங்கு அதிகமாக, அதாவது 421 கோடி ரூபாய் மதிப்பிலான ஏலங்கள் தேசிய பங்குச் சந்தையின் மின்னணு ஏலம் மூலம் பெறப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புர நிதிப் பத்திரங்களுக்கு இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் அக்யூட் ரேட்டிங்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் 'AA+' என தரமதிப்பீடு செய்துள்ளன. இது பெருநகர சென்னை மாநகராட்சியின் சீரிய நிதி மேலாண்மையை எடுத்துக்காட்டுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், முதலீட்டாளர்களின் நம்பகத் தன்மையை வலுப்படுத்தும் விதமாகவும் தமிழ்நாடு அரசு PSGF (Project Sustainability Grant Fund) திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி உதவியை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதலாக, ஒன்றிய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நகர்ப்புர நிதிப் பத்திர வெளியீட்டு ஊக்கத்தொகையாக மாநகராட்சிக்கு 26 கோடி ரூபாய் ஊக்கத்தொகையும் பெறப்படும். இது நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் மூலம் நிதியினைத் திரட்டும் செலவினை மேலும் குறைத்திட உதவும்.
இந்த நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி, கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்பிற்கு (ISWD) பயன்படுத்தப்படும். இது சென்னையின் வெள்ளத் தடுப்பு மற்றும் நிலையான நகர்ப்புர வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கியமான உட்கட்டமைப்பு திட்டமாகும்.
முதல்வர் படைப்பகம் பற்றி …
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை கொளத்தூர் தொகுதியில் புதிய திட்டமாக முதல்வர் படைப்பகம் என்னும் திட்டத்தை 4.11.2024 அன்று தொடங்கிவைத்தார்கள். இத்திட்டம் பகிர்ந்த பணியிடம் என அப்போது அறிவிக்கப்பட்டது.
அதாவது, அமைதியாக ஒருவர் வீட்டில் வசதிகள் இல்லாததால் தனியாகவோ அல்லது தன்னுடைய குழுவினருடனே அமர்ந்து, குறித்த நேரத்திற்குள் தம்முடைய வேலையைச் செய்து முடித்துக்கொள்ள வேண்டும் என்று கருதினால், அதற்குத் தேவையான இடவசதி, இருக்கைகள், மேசை வசதி, மின் இணைப்பு வசதி, இணைய வசதி, குளிர்சாதன (Air-Conditioner), அனைத்து வசதிகளுடனும் மிகமிகக் குறைந்த கட்டணத்தில் தனது மடிக்கணினியைப் பயன்படுத்தி வசதி முதலிய கருதிய வேலையைச் செய்து முடித்துக் கொள்வதற்குப் பயன்படும் இடம் இந்த முதல்வர் படைப்பகம்.
இங்கே, அரசு அரை நாளுக்கு (6 மணி நேரம்) ஓ50 மற்றும் ஒரு நாளுக்கு (12 மணி நேரம்) 100 வசூலிக்கிறது, அதே நேரத்தில் மாதந்திர கட்டணம் 2,500 ஆகும்.
"அலைகள்" திட்டம் தொடக்கம் :
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்படும் மகளிர் மீனவ கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட மீன் வியாபாரம், கடற்பாசி வளர்ப்பு, மதிப்பு கூட்டு உணவுப் பொருட்கள் தயாரித்தல் போன்ற மீன்பிடி சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டு வரும் 50,000 மீனவ மகளிர் பயடையும் வகையில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் "அலைகள்" திட்டம் 2025-26 ஆம் ஆண்டின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 28.5.2025 அன்று தொடங்கி வைத்தார்.
திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகம் :
சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகத்தை முதலமைச்சர் அவர்கள் 28.5.2025 அன்று தொடங்கி வைத்தார்
இம்மீன்பிடித் துறைமுகம் இந்தியாவிலேயே முதன் முதலாக சூரை மீன் பிடிப்பிற்கென பிரத்தியேகமாக கட்டப்பட்டதாகும். இத்துறைமுகத்தில், தெற்கு மற்றும் வடக்கு அலை தடுப்புச் சுவர்கள், படகு அணையும் சுவர், படகு அணையும் தளம், மீன் ஏலக்கூடங்கள், மீன் வலைப்பின்னும் கூடம், நிர்வாகக் கட்டடம், மீனவர் தங்கும் அறை, வானொலித் தகவல் தொடர்பு மையம், உணவகம், வலை பாதுகாப்பு கூடம், சுகாதார வளாகம், மீனவர் ஓய்வு அறை, இழுவை அறை, படகு பழுது பார்க்கும் இடம், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, மழைநீர் வடிகால் கொண்ட சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மீனவர்கள் ஆழ்கடலில் இருந்து சுகாதாரமான முறையில் தாங்கள் பிடித்து வரும் சூரை மீன்களை தரம் குறையாமல் உடனடியாக ஏற்றுமதியாளர்களுக்கு விற்பனை செய்து, கூடுதல் விலையை பெற்றிட இயலும். இதனால் மீனவர்களின் பொருளாதார நிலை உயர வழிவகுக்கும். இம்மீன்பிடித் துறைமுகம் ஆண்டிற்கு சுமார் 70,000 டன்கள் அளவிற்கு மீன்களை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இம்மீன்பிடித் துறைமுகத்தினை சுற்றியுள்ள 12 மீனவ கிராமங்களைச் சார்ந்த சுமார் 6,250 மீனவர்கள் மற்றும் மீன்பிடிப்பு சார்ந்த தொழிலில் உள்ளவர்கள் நேரடியாக பயன் பெறுவர்.
ஒருங்கிணைந்த புத்தொழில் முனைவு கல்வி - தொழில் - முதலீட்டாளர் பணிக்கான கூட்டுப் புத்தாக்க நுழைவாயில் (JIGSAW)
iTNT (Tamil Nadu Technology Hub (iTNT)) மையத்தால் Umagine TN 2024 மாநாட்டில் தொடங்கப்பட்ட JIGSAW (Joint Innovation Gateway for Synergistic Startup - Academic - Industry - Investor Work) தளமானது, கல்வி நிறுவனங்கள், தொழில்துறை, புத்தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள் (ம) மாணவர்களை ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டின் ஆழ்தொழில்நுட்ப புத்தாக்க வளர்ச்சியை முன்னெடுக்கிறது. இத்தளம், 'Innovate In TN' (ம) Build The Future' என்ற குறிக்கோள்களை முன்னெடுத்துச் செயல்படுகிறது.
குறிக்கோள்கள் :
நிகழ்நேர தொழில் சிக்கல்களைத் தீர்த்தல்
புத்தாக்க ஆதாரங்களைக் கண்டறிதல்
கூட்டாளர்களுடன் இணைந்து தீர்வுகளை உருவாக்குதல்
திட்டத்தின் தாக்கம்
இதுவரை, இத்தளத்தில், 137 கல்வி நிறுவனங்கள், 6,065 ஆராய்ச்சியாளர்கள் (ம) 303 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளனர்.
இத்தளம் மூலம், 43 தொழில்துறை கூட்டாளர்கள், 69 முதலீட்டாளர்கள் (ம) 42 தொழில்துறை வழிகாட்டிகள் புத்தாக்க நிறுவனங்களுக்கு வழிகாட்டுகின்றனர். ITNT மையம், 137 பொறியியல் கல்லூரிகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் (MoUS) மூலம், JIGSAW-இன் பயன்பாடு சென்னையைத் தாண்டி, தற்போது செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்னாகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய இரண்டாம் (ம) மூன்றாம் நிலை நகரங்களுக்கும் விரிவடைந்துள்ளது.
India (Unit III)
DRDO தலைவர் சமீர் V. கமத்திற்கு ஒரு வருட பதவி நீட்டிப்பு :
அமைச்சரவை நியமனக் குழு 26.5.2025 அன்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (DRDO) தலைவரான சமீர் V. கமத் அவர்களுக்கு மே 31, 2026 வரை மேலும் ஒரு வருட நீட்டிப்பை வழங்கியது.
கர்நாடகா கிக் தொழிலாளர்கள் (சமூக பாதுகாப்பு மற்றும் நலன்) ஆணை 2025 (Platform-Based Gig Workers (Social Security and Welfare) Ordinance 2025) ஐ வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் கர்நாடகா கிக் தொழிலாளர் (Gig Workers) உரிமைகளில் முன்னணியில் உள்ளது. ராஜஸ்தானைத் தொடர்ந்து இத்தகைய சட்டத்தை அறிமுகப்படுத்தும் இரண்டாவது இந்திய மாநிலமாக மாறியுள்ளது.
கிக் தொழிலாளர்கள் யார்?
கிக் தொழிலாளர்கள் (Gig workers) என்பவர்கள் பாரம்பரிய முழுநேர வேலைவாய்ப்பை வைத்திருப்பதற்கு பதிலாக குறுகிய கால, நெகிழ்வான, அல்லது தனிப்பட்ட திட்ட வேலைகள் (freelance jobs) செய்வதன் மூலம் வருமானம் ஈட்டும் நபர்கள். அவர்கள் பொதுவாக சுதந்திரமான ஒப்பந்தக்காரர்கள் (independent contractors), சுதந்திர தொழிலாளர்கள் (freelancers), அல்லது தேவைக்கேற்ப தொழிலாளர்கள் (on-demand workers) ஆக வேலை செய்கிறார்கள், பல்வேறு வாடிக்கையாளர்கள் அல்லது மேடைகளுக்கு குறிப்பிட்ட பணிகள், திட்டங்கள், அல்லது ஒப்படைப்புகளை மேற்கொள்கிறார்கள்.
கிக் வேலையின் எடுத்துக்காட்டுகள்: வாடகை வாகன சேவைகள் (உதாரணம், உபர், ஓலா (Uber, Ola)), உணவு அல்லது மளிகைப் பொருட்களை வினியோகித்தல், சுதந்திர எழுத்து, கிராஃபிக் டிசைன், அல்லது நிரலாக்கம் (freelance writing, graphic design, or programming) போன்றவை.
ஆபரேஷன் சக்ரா-V (Operation Chakra-V):
மத்திய புலனாய்வு பணியகம் (Central Bureau of Investigation - CBI) ஆபரேஷன் சக்ரா-V (Operation Chakra-V) என்ற பெயரில் நாடுகளிடையே செயல்படும் இணைய குற்ற கும்பல் (transnational cybercrime syndicate) உறுப்பினர்களை கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கை நாடுகளுக்கிடையேயான ஒழுங்கமைக்கப்பட்ட இணையக்குற்றங்களை, குறிப்பாக "டிஜிட்டல் கைதுகள்" (digital arrests) என அறியப்படும் திட்டங்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய மோசடிகளில், மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து, கைது அச்சுறுத்தல்கள், வங்கி கணக்குகளை முடக்குதல், மற்றும் கடவுச்சீட்டுகளை ரத்து செய்தல் போன்ற அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை பயமுறுத்தி பணம் பறிக்கிறார்கள். இணையக்குற்றங்களை மேலும் எதிர்த்துப் போராடுவதற்காக, இந்தியாவில் இந்திய இணையக்குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre - I4C), சைபர் சுரக்ஷித் பாரத் (Cyber Surakshit Bharat), சைபர் ஸ்வச்ஹதா கேந்திர (Cyber Swachhta Kendra), மற்றும் இந்திய கணினி அவசரகால மறுமொழி குழு (Indian Computer Emergency Response Team - CERT-In) உள்ளிட்ட பல முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன, இவை அனைத்தும் இணையப் பாதுகாப்பை மேம்படுத்தவும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கவும் செயல்படுகின்றன.
பிரகதி - முன்னோக்கு ஆட்சி மற்றும் சரியான நேரத்தில் திட்டங்களை செயல்படுத்தல் (PRAGATI - Pro-Active Governance and Timely Implementation) திட்டம் :
முன்னோக்கு ஆட்சி மற்றும் சரியான நேரத்தில் திட்டங்களை செயல்படுத்தல் (Pro-Active Governance and Timely Implementation - PRAGATI) திட்டத்தை இந்திய அரசு மார்ச் 25, 2015 அன்று தொடங்கியது, இது பல்நோக்கு மற்றும் பல்மாதிரி மின்னாளுமை முன்முயற்சியாக (multi-purpose and multi-modal digital governance initiative) உயர் மட்ட நிர்வாக மேற்பார்வையுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் அரசாங்க செயல்பாடுகளின் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பதிலளிக்கும் தன்மையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
பனாமா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (United Nations Security Council) நிரந்தர இடத்திற்கான இந்தியாவின் நீண்டகால பிரச்சாரத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளித்துள்ளது. இந்த ஆதரவை பனாமாவின் வெளியுறவு அமைச்சர் ஜேவியர் மார்டினெஸ் அச்சா (Javier Martinez Acha) மே 29, 2025 அன்று சசி தரூர் (Shashi Tharoor) தலைமையிலான இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போது வழங்கினார்.
உச்சநீதிமன்ற 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு : உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், ஏ.எஸ்.சந்தூா்கா் ஆகிய மூன்று நீதிபதிகளும் 30.5.2025 அன்று பதவியேற்றனா். மூன்று நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பதவிப் பிரமாணம் செய்வித்தாா். இவர்களின் நியமனத் தின் மூலம் உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 34 முழுவதும் நிரப்பப்பட்டு முழு பலத்தை உச்சநீதிமன்றம் எட்டியுள்ளது.
எல்சா 3 கப்பல் விபத்து :
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த 24.05.2025 அன்று கேரளா கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவில் எல்சா 3 என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த எரிபொருள், பிளாஸ்டிக் துகள்கள், ஆபத்தான பொருட்கள் கொண்ட பெட்டகங்கள் கடலில் விழுந்தது. வலுவடைந்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக பிளாஸ்டிக் துகள்கள், பெட்டகங்கள் உட்பட பிற பொருட்கள் கேரள மாநிலத்தின் கடற்கரையிலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையிலும் கரை ஒதுங்கி வருகிறது. 28.05.2025 அன்று பிளாஸ்டிக் துகள்கள் கன்னியாகுமாரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்ட உடன் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களுக்கும் மற்றும் தொடர்புடைய அனைத்து அரசு துறையினருக்கும் பிளாஸ்டிக் துகள்களை அப்புறப்படுத்துவதற்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்பட்டது.
ஜன் ஔஷதி கேந்திர அனுபவ கற்றல் திட்டம் (Jan Aushadhi Kendra Experiential Learning Program) தொடங்கப்பட்டது:
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மருந்து துறையுடன் (Department of Pharmaceuticals) இணைந்து ஜன் ஔஷதி கேந்திர அனுபவ கற்றல் திட்டத்தை (Jan Aushadhi Kendra Experiential Learning Program) 1.6.2025 அன்று தொடங்கியது. இந்த 15 நாள் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஐந்து ஜன் ஔஷதி கேந்திராக்களில் ஐந்து இளைஞர் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்படுவார்கள். தன்னார்வலர்கள் தினசரி செயல்பாடுகளுக்கு உதவுதல், சரக்கு மற்றும் மருந்து மேலாண்மையை ஆதரித்தல் மற்றும் பொதுவான மருந்துகள் (generic medicines) மற்றும் பொது சுகாதார கல்வியறிவு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் ஈடுபடுவார்கள். ஜன் ஔஷதி கேந்திராக்களுக்குள் இளம் தன்னார்வலர்களை இணைப்பதன் மூலம், இந்த திட்டம் நடைமுறை கற்றலை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், சேவை, ஒழுக்கம் மற்றும் சமுதாய நோக்கிய தொழில்முறை மதிப்புகளையும் வளர்க்கும். இந்த முயற்சி இளைஞர் மேம்பாடு மற்றும் பொது சுகாதார விரிவாக்கத்திற்கு இடையே ஒரு முக்கியமான இணைப்பை உருவாக்கும், அதே நேரத்தில் பிரதான் மந்திரி பாரதிய ஜனஔஷதி பரியோஜனாவின் (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana) வீச்சையும் மேம்படுத்தும்.
ஆயுஷ் சுரக்ஷா இணையதளம் (Ayush Suraksha Portal) :
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தனிப்பொறுப்பு இணை அமைச்சர் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை அமைச்சர், இந்திய அரசின் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுஷ் சுரக்ஷா இணையதளத்தை (AyushSuraksha Portal) 30.5.2025 அன்று தொடங்கினார். இந்த இணையதளம் ஆயுஷ் துறையில் பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான அரசின் முக்கிய முயற்சியாகும்.
இந்த இணையதளம், சென்னையில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி மத்திய கவுன்சிலின் (Central Council for Research in Siddha - CCRS) தொழில்நுட்ப ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.
இந்த இணையதளத்தின் தொடக்கத்துடன், ஆயுஷ் அமைச்சகம் இப்போது புகாரளிக்கப்பட்ட வழக்குகளின் மையப்படுத்தப்பட்ட மற்றும் அணுகக்கூடிய தகவல் பலகையை கொண்டுள்ளது, இது நிகழ்நேர கண்காணிப்பு, விரைவான ஒழுங்குமுறை நடவடிக்கை மற்றும் விரிவான தரவு பகுப்பாய்வை செயல்படுத்துகிறது. இந்த அமைப்பு குடிமக்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்த நேரடி வழியையும் உறுதி செய்கிறது, அவர்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த வெளிப்படையான தெரிவுநிலையுடன்.
"ஆயுஷ் சுரக்ஷா இணையதளம் ஆயுஷ் சூழல் அமைப்பில் மருந்து பாதுகாப்பு கண்காணிப்பு (pharmacovigilance) மற்றும் ஒழுங்குமுறை ஒருங்கிணைப்பில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மாநில உரிம வழங்கும் அதிகாரிகள் (State Licensing Authorities), தேசிய மருந்து பாதுகாப்பு கண்காணிப்பு மையங்கள் மற்றும் முக்கிய ஒழுங்குமுறை பங்குதாரர்களிடமிருந்து தரவுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த இணையதளம் தவறான விளம்பரங்கள் மற்றும் மருந்துகளின் பாதகமான எதிர்வினைகள் குறித்த நிகழ்நேர கண்காணிப்பு, முறையான பகுப்பாய்வு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை எளிதாக்குகிறது.
ஆயுஷ் சுரக்ஷா இணையதளம் உச்ச நீதிமன்றத்தின் ஜூலை 30, 2024 தேதியிட்ட உத்தரவின்படி, எழுத்து மனு (சிவில்) எண். 645/2022 இல், தவறான விளம்பரங்கள் மற்றும் மருந்துகளின் பாதகமான எதிர்வினைகள் தொடர்பான தரவுகளை கண்காணிப்பதற்கும் வெளியிடுவதற்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட தகவல் பலகையின் தேவையை நீதிமன்றம் வலியுறுத்தியது. மாநில உரிம வழங்கும் அதிகாரிகள் புகார்களை புகாரளிக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான பரிந்துரைகளை பகிர்ந்து கொள்ளவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் நிலையை புதுப்பிக்கவும் அனுமதிக்கும் வகையில் இத்தகைய அமைப்பை நிறுவுவதை உறுதி செய்யுமாறு இந்திய ஒன்றியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆயுஷ் அமைச்சகம் நீதிமன்றத்தின் ஜூன் 2025 காலக்கெடுவிற்கு முன்பே இந்த உத்தரவை நிறைவேற்றியுள்ளது.
மூன்று நிறுவனங்களுக்கு "மினிரத்னா" அந்தஸ்து :
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (Munitions India Limited - MIL), ஆர்மர்ட் வெஹிக்கிள்ஸ் நிகம் லிமிடெட் (Armoured Vehicles Nigam Limited - AVNL) மற்றும் இந்தியா ஆப்டெல் லிமிடெட் (India Optel Limited - IOL) ஆகியவற்றிற்கு "மினிரத்னா" அந்தஸ்து வகுப்பு-I வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அமைந்துள்ள இடங்கள்:
முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (MIL): புனே, மகாராஷ்டிரா
ஆர்மர்ட் வெஹிக்கிள்ஸ் நிகம் லிமிடெட் (AVNL): அவடி, சென்னை, தமிழ்நாடு
இந்தியா ஆப்டெல் லிமிடெட் (IOL): தேராதூன், உத்தரகண்ட்
ஏப்ரல் 30, 2025 நிலவரப்படி தொலைத்தொடர்பு சந்தா தரவுகள்:
Source : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132280
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் செயற்கை நுண்ணறிவு தேசிய மாநாடு (National Conference on AI for Empowering Persons with Disabilities) கர்நாடகாவின் பெங்களூருவில் 30.5.2025 அன்று நடைபெற்றது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சரும் மின்சாரம் அமைச்சருமான திரு மனோகர் லால் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு மசதோ கந்தா இன்று ஸ்ரம் சக்தி பவனில் சந்தித்து இந்திய நகரமயமாக்கலில் ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank - ADB) தொடர்ச்சியான ஆதரவு மற்றும் முதலீடு குறித்து விவாதித்தனர்.
கோவா மாநிலம் முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பு :
30.5.2025 அன்று கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், உல்லாஸ் - நவ் பாரத் சாக்ஷரதா கார்யக்ரம் (New India Literacy Programme) இன் கீழ் கோவா மாநிலம் அதிகாரப்பூர்வமாக முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், இது தேசிய கல்விக் கொள்கை (National Education Policy - NEP) 2020 இல் எதிர்பார்க்கப்பட்டுள்ள 2030 ஆம் ஆண்டுக்குள் முழுமையான கல்வியறிவை அடைவதற்கான இந்தியாவின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது. இது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட முழுமையான கல்வியறிவிற்கான 95% அளவுகோலை கடந்த நாட்டின் இரண்டாவது மாநிலமாக கோவாவை ஆக்குகிறது.
கால அடிப்படையிலான தொழிலாளர் ஆய்வு அறிக்கை (Periodic Labour Force Survey Report) 2023-24 இன் படி, கோவாவின் கல்வியறிவு விகிதம் 93.60% ஆக உள்ளது, இது நாட்டில் மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும், ஆண் மற்றும் பெண் மக்கள்தொகை இரண்டிலும் வலுவான செயல்திறனுடன். இருப்பினும், கோவாவின் சொந்த ஆய்வின்படி, மாநிலம் இந்த எண்ணிக்கையை தாண்டி முழுமையான கல்வியறிவை அடைந்துள்ளது.
உல்லாஸ் - நவ் பாரத் சாக்ஷரதா கார்யக்ரம் அல்லது புதிய இந்திய கல்வியறிவு திட்டம் 2022-2027 வரை செயல்படுத்தப்படும் மத்திய நிதியுதவி திட்டமாகும். NEP 2020 உடன் இணைந்த இந்த திட்டம், பள்ளிக்கு செல்ல முடியாத பெரியவர்களை (15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) இலக்காகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் ஐந்து கூறுகள் உள்ளன - அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல், முக்கியமான வாழ்க்கைத் திறன்கள், அடிப்படைக் கல்வி, தொழில்முறை திறன்கள் மற்றும் தொடர்ச்சியான கல்வி. உல்லாஸ் திட்டத்தின் நோக்கம் இந்தியாவை ஜன் ஜன் சாக்ஷர் ஆக்குவதாகும் மற்றும் இது கர்த்தவ்ய போத் என்ற உணர்வின் அடிப்படையில் அமைந்துள்ளது மற்றும் தன்னார்வத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. உல்லாஸ் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இதுவரை 1.77 கோடிக்கும் மேற்பட்ட கற்றவர்கள் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் மதிப்பீட்டு தேர்வில் (Foundational Literacy and Numeracy Assessment Test - FLNAT) தோன்றியுள்ளனர். உல்லாஸ் மொபைல் ஆப்பில் 2.40 கோடிக்கும் மேற்பட்ட கற்றவர்கள் மற்றும் 41 லட்சம் தன்னார்வ ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.
துருவா (குறிப்பு மற்றும் தனிப்பட்ட மெய்நிகர் முகவரிக்கான டிஜிட்டல் மையம்) DHRUVA (Digital Hub for Reference and Unique Virtual Address):
இந்திய அஞ்சல் துறை த்ருவா (Digital Hub for Reference and Unique Virtual Address - DHRUVA) என்ற தலைப்பில் ஒரு விரிவான கொள்கை ஆவணத்தை வெளியிட்டது. இந்த கொள்கை தேசிய டிஜிட்டல் முகவரி டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பிற்கான (Digital Public Infrastructure - DPI) கட்டமைப்பை வகுக்கிறது.
த்ருவா (DHRUVA) முகவரி தகவல் பகிர்வை பாதுகாப்பான, ஒப்புதல் அடிப்படையிலான மற்றும் தடையற்ற வகையில் ஆதரிக்கும் தரப்படுத்தப்பட்ட, ஒன்றோடொன்று இயங்கக்கூடிய மற்றும் புவிசார் குறியிடப்பட்ட டிஜிட்டல் முகவரி அமைப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் மையத்தில் முகவரி-ஒரு-சேவையாக (Address-as-a-Service - AaaS) என்ற கருத்து உள்ளது - பயனர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு இடையே பாதுகாப்பான மற்றும் திறமையான தொடர்புகளை ஆதரிக்கும் முகவரி தரவு மேலாண்மையுடன் தொடர்புடைய சேவைகளின் வரிசை.
இந்த முயற்சி முகவரி தகவல் மேலாண்மையை ஒரு அடிப்படை பொது உள்கட்டமைப்பாக அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது - திறமையான ஆளுமை, உள்ளடக்கிய சேவை வழங்கல் மற்றும் மேம்பட்ட பயனர் அனுபவத்திற்கு இன்றியமையாதது. இது பொது மற்றும் தனியார் துறைகள் இரண்டிலும் மென்மையான ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் ஒரு வலுவான முகவரி தரவு பகிர்வு மற்றும் மேலாண்மை சூழல் அமைப்பை உருவாக்க முயல்கிறது. பயனர்களுக்கு அவர்களின் முகவரி தரவின் மீது அர்த்தமுள்ள கட்டுப்பாட்டை வழங்குவதன் மூலம், இந்த கொள்கை பயனர் சுயாட்சியை ஊக்குவிக்கிறது, புதுமையை இயக்குகிறது மற்றும் வாழ்க்கையின் எளிமையை ஆதரிக்கிறது.
மேலும், த்ருவா பொது மற்றும் தனியார் பங்குதாரர்கள் பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட பயனர் மைய தீர்வுகளை இணைந்து உருவாக்கும் ஒரு கூட்டு சூழல் அமைப்பை வளர்க்க முயல்கிறது. இது அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களின் பரந்த அடிப்படையிலான ஏற்றுக்கொள்ளலின் மூலம் ஆளுமை, மின்வணிகம், தளவாடம் மற்றும் நிதி உள்ளடக்கம் போன்ற முக்கிய துறைகளில் புதுமையை ஊக்குவிக்க நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் தபால் குறியீட்டு எண் (Digital Postal Index Number - DIGIPIN) அமைப்பின் தொடக்கம் புவிசார் ஆளுமையின் வலுவான மற்றும் உறுதியான தூணாக செயல்படுகிறது, பொது சேவை வழங்கல், அவசரகால பதிலளித்தல் மற்றும் தளவாட திறன் ஆகியவற்றில் மேம்பாடுகளை செயல்படுத்துகிறது. இது திசைமுக பண்புகளுடன் பெயரிடல் முறையின் மூலம் முகவரிகளின் தர்க்கரீதியான இருப்பிடத்தை அனுமதிக்கிறது மற்றும் பொது களத்தில் இலவசமாக அணுகக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கதம்பூர் வெப்ப மின் திட்டம் :
பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகர் மாவட்டத்தில் உள்ள கதம்பூர் வெப்ப மின் திட்டத்தின் (3x660 MW) யூனிட்-1 (660 MW) ஐ 30.5.2025 அன்று தேசத்திற்கு அர்ப்பணித்தார், இது இந்தியாவின் எரிசக்தி துறையில் ஒரு மைல்கல் சாதனையாக அமைகிறது. இந்த லட்சியமான மின் திட்டம் நெய்வேலி உத்தர பிரதேச பவர் லிமிடெட் (Neyveli Uttar Pradesh Power Ltd - NUPPL) இன் முதன்மை முயற்சியாகும், இது NLC இந்தியா லிமிடெட் (51%) மற்றும் உத்தர பிரதேச ராஜ்ய வித்யுத் உற்பாதன் நிகம் லிமிடெட் (Uttar Pradesh Rajya Vidyut Utpadan Nigam Limited - UPRVUNL) (49%) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இந்த திட்டம் தலா 660 MW கொண்ட மூன்று சூப்பர் கிரிட்டிகல் வெப்ப மின் யூனிட்களை கொண்டுள்ளது, இது கணிசமான 1,980 MW நிறுவப்பட்ட திறனை சேர்க்கிறது. இந்த முயற்சி உத்தர பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் வளர்ந்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, நிலையான மற்றும் நம்பகமான மின் உற்பத்திக்கான தேசத்தின் அர்ப்பணிப்புடன் இணைந்து எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
மொத்தம் ₹21,780.94 கோடி திட்ட செலவுடன், கதம்பூர் வெப்ப மின் திட்டத்தின் மீதமுள்ள இரண்டு யூனிட்கள் நிதியாண்டு 2025-26 க்குள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் (11th BRICS Parliamentary Forum) இந்தியா: 2025 ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெறும் 11-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் (11th BRICS Parliamentary Forum) பங்கேற்கும் இந்திய நாடாளுமன்றக் குழுவை, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தலைமை ஏற்று வழிநடத்துவார்.
2025-ம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை செவிலியர்களுக்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 30.5.2025 அன்று வழங்கினார். தமிழ்நாட்டிலிருந்து K.அலமேலு மங்கையர்க்கரசி மற்றும் புதுச்சேரியிலிருந்து L.S. மணிமொழி ஆகியோர் இந்த விருதை இவ்வாண்டு பெற்றுள்ளனர்.
சட்னா, தாதியா விமான நிலையங்கள் : மத்தியப் பிரதேச மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சட்னா விமான நிலையத்தையும் மேம்படுத்தப்பட்ட தாதியா விமான நிலையத்தையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி 31.5.2025 அன்று திறந்து வைத்தார்.
லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300வது பிறந்த தினம் : லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற லோக்மாதா தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தில் 31.5.2025 அன்று உரையாற்றினார். லோகமாதா தேவி அஹில்யாபாய்க்கு பெருமை சேர்க்கும் வகையில் நினைவு அஞ்சல்தலை மற்றும் சிறப்பு நாணயத்தையும் அவர் வெளியிட்டார். 300 ரூபாய் நாணயத்தில் அஹில்யாபாய் ஹோல்கரின் உருவப்படம் இடம்பெறும்.
லோக்மாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கர் (Lokmata Devi Ahilya Bai Holkar) (31 மே 1725 – 13 ஆகஸ்ட் 1795) இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் மற்றும் தொலைநோக்குடைய பெண் ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்தார். மஹாராஷ்டிராவின் அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள சோண்டி (Chondi) கிராமத்தில் பிறந்த அவர், எளிமையான தொடக்கத்திலிருந்து எழுந்து மராத்தா பேரரசின் ஒரு பகுதியான ஹோல்கர் வம்சத்தில் மால்வா அரசின் ராணியாக ஆனார்.
அஹில்யாபாய் ஹோல்கர் சமூக நலன், மத நன்கொடைகள் மற்றும் பொதுப் பணிகளுக்கான அவரது மகத்தான பங்களிப்புகளுக்காக கொண்டாடப்படுகிறார்.
அவர் பர்தா (purdah) கடைபிடிக்காமை போன்ற தனது காலத்தின் சமூக நியதிகளை உடைத்தார், மேலும் அவரது ஞானம், கருணை மற்றும் நிர்வாக திறமைக்காக அறியப்பட்டார். அவரது தலைமைத்துவ பாணி, வலிமையை அனுதாபத்துடன் சமநிலைப்படுத்தியது, அவருக்கு "லோக்மாதா (Lokmata)" (மக்களின் தாய்) என்ற அன்பான பட்டத்தை பெற்றுத் தந்தது.
வளர்ச்சி அடைந்த விவசயாத்துக்கான சங்கல்ப இயக்கத்தை (‘Viksit Krishi Sankalp Abhiyan’) புவனேஸ்வரில் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் 29.5.2025 அன்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மேம்பட்ட விவசாய, மீன்வள செயல்பாடுகளில் புதிய தொழில்நுட்பங்களை பரவலாக ஏற்றுக்கொள்வதை இது ஊக்குவிக்கும்.தொழில்நுட்ப பரவல், திறன் மேம்பாடு, அடித்தள அளவிலான ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் இந்தியா முழுவதும் 1.5 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்ற லட்சிய இலக்குடன் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
'நிவேஷக் ஷிவிர்' / முதலீட்டாளர் முகாம் திட்டம் (‘Niveshak Shivir’ Scheme) :
இந்திய அரசின் பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (Investor Education and Protection Fund Authority (IEPFA)), இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துடன் (Securities and Exchange Board of India (SEBI)) இணைந்து, அதன் முன்னோடி முயற்சியான முதலீட்டாளர் முகாமை (நிவேஷக் ஷிவிர்) அறிமுகப்படுத்தியுள்ளன. முதல் முன்னோடி முகாம் ஜூன் 1, 2025 அன்று புனேவில் நடைபெற்றது.
ஷாங்ரி-லா உரையாடல் 2025 (Shangri-La Dialogue 2025) இல் கலந்துகொண்ட முப்படைகளின் தளபதி :
சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச உத்திசார் ஆய்வுகள் நிறுவனத்தால் (International Institute for Strategic Studies (IISS)) ஆண்டுதோறும் நடத்தப்படும் ஷாங்ரி-லா உரையாடலின் 22-வது பதிப்பில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான் 2025 மே 30 முதல் 2015 ஜூன் 01 வரை கலந்துகொண்டு 'எதிர்கால போர்கள் மற்றும் போர்முறைகள் (Future Wars and Warfare)' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சர்வதேச உத்திசார் ஆய்வுகள் நிறுவனம் (International Institute for Strategic Studies) (IISS) 1958 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் முதன்மை அலுவலகம் லண்டனில் உள்ளது. மேலும் வாஷிங்டன் டி.சி, சிங்கப்பூர் மற்றும் மனாமா (பஹ்ரைன்) ஆகிய இடங்களிலும் அலுவலகங்கள் உள்ளன.
ஆயுஷ் அமைச்சகத்திற்கும் உலக சுகாதார அமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் : பாரம்பரிய மருத்துவ முறைகளில் உலகளாவிய நிலையை மாற்றும் ஒரு மைல்கல் வளர்ச்சியில், ஆயுஷ் அமைச்சகத்திற்கும் உலக சுகாதார அமைப்புக்கும் இடையே 2025, மே 24 அன்று ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் சர்வதேச சுகாதார தலையீடுகள் வகைப்பாட்டின் கீழ் ஒரு தனிச்சிறப்பான பாரம்பரிய மருத்துவத் தொகுப்புப் பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நோய் வகைப்பாடு (International Classification of Diseases (ICD-11)) க்கு துணையாக, சுகாதார தலையீடுகளின் சர்வதேச வகைப்பாடு (International Classification of Health Interventions (ICHI)) எந்த சிகிச்சைகள் மற்றும் சுகாதார தலையீடுகள் வழங்கப்படுகின்றன என்பதை ஆவணப்படுத்துகிறது. பாரம்பரிய மருத்துவ தொகுதியின் சேர்க்கையுடன், ஆயுர்வேதம், யோகா, சித்தா மற்றும் யுனானி முறைகளின் சிகிச்சைகள்—பஞ்சகர்மா, யோகா சிகிச்சை, யுனானி முறைகள் மற்றும் சித்தா செயல்முறைகள் போன்றவை—இப்போது உலகளாவிய தரப்படுத்தப்பட்ட சொற்களில் அங்கீகரிக்கப்படும்.
இது பல நன்மைகளைக் கொண்டு வரும்:
● ஆயுஷ் சேவைகளுக்கான வெளிப்படையான மற்றும் நியாயமான விலை நிர்ணயம்.
● சுகாதார காப்பீட்டில் ஆயுஷ் சிகிச்சைகளின் எளிதான ஒருங்கிணைப்பு.
● மேம்பட்ட மருத்துவமனை நிர்வாகம், மருத்துவ ஆவணப்படுத்தல் மற்றும் சுகாதார ஆராய்ச்சி.
● மிக முக்கியமாக, ஆயுஷ் தலையீடுகளுக்கான அதிக உலகளாவிய அணுகல்.
எலக்ட்ரிக் ஹன்சா (E-Hansa) :
இந்தியா அடுத்த தலைமுறை இரண்டு இருக்கை மின்சார பயிற்சி விமானமான எலக்ட்ரிக் ஹன்சா (E-Hansa) ஐ உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
CSIR-NAL (CSIR - அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய வானூர்தி ஆய்வகங்கள்) ஆல் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் ஹன்சா (E-HANSA) பயிற்சி விமானம், இறக்குமதி செய்யப்பட்ட மாற்று விமானங்களை விட கணிசமாக குறைவான செலவில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஏறக்குறைய ரூபாய் 2 கோடி ஆகும். இது ஒப்பிடக்கூடிய இறக்குமதி பயிற்சி விமானத்தின் விலையில் தோராயமாக பாதி ஆகும்.
9வது பிரிக்ஸ் தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் (BRICS Industry Ministers’ Meeting) இந்தியா : “நிலையான நிர்வாகத்திற்கான உலகளாவிய தெற்கு பகுதி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்" (Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance) என்ற கருப்பொருளில் பிரேசில் தலைமையில் பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரில் 2025 மே 21 அன்று நடைபெற்ற 9வது பிரிக்ஸ் தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் (BRICS Industry Ministers’ Meeting) இந்தியா பங்கேற்றது.
இந்தியா மொபைல் காங்கிரஸ் 2025 (India Mobile Congress 2025) இன் 9வது பதிப்பு 'புதுமைப்படுத்து, மாற்றத்திற்காக' (Innovate to Transform) என்ற கருப்பொருளின் கீழ் அக்டோபர் 8 முதல் 11 வரை புது தில்லியின் யசோபூமி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது.
பாரத் முன்னறிவிப்பு அமைப்பு (Bharat Forecast System) நாட்டிற்கு அற்பணிப்பு :
உலகின் முதலாவது மற்றும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் வானிலை முன்னறிவிப்பு அமைப்புகளில் ஒன்றான பாரத் முன்னறிவிப்பு அமைப்பை (Bharat Forecast System) மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்கள் 26.5.2025 அன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலையியல் நிறுவனத்தால் (Indian Institute of Tropical Meteorology - IITM) உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன அமைப்பு, இந்தியாவின் வானிலை கணிப்பு தெளிவுத்திறனை 12 கிமீ இருந்து 6 கிமீ ஆக மேம்படுத்துகிறது, இதன் மூலம் இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் மிகவும் துல்லியமான மற்றும் இடம் சார்ந்த முன்னறிவிப்புகளை அணுக முடியும்.
பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு (Panchayat Advancement Index - PAI) 2.0 போர்டல் https://pai.gov.in/ 26.5.2025 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு 2.0 என்பது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட பல பரிமாண மதிப்பீட்டு கட்டமைப்பாகும், இது உள்ளூர்மயமாக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளின் (Localization of Sustainable Development Goals - LSDGs) இணைந்த ஒன்பது கருப்பொருள்களில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் செயல்திறன் கண்காணிப்பை உறுதி செய்கிறது.
PAI பதிப்பு 1.0 அடிப்படையாக செயல்பட்டு 29 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.16 லட்சம் கிராம பஞ்சாயத்துகளின் தரவுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் PAI பதிப்பு 2.0 செயல்பாடு, திறன் மற்றும் பயன்பாட்டில் பெரும் முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
PAI 1.0 இலிருந்து 2.0 க்கு மாற்றம் கட்டமைப்பின் கவனமான செம்மைப்படுத்தலை பிரதிபலிக்கிறது, கருப்பொருள் விரிவாக்கத்தை தக்கவைத்துக்கொண்டு பயன்பாட்டு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த மிகவும் கூர்மையான மற்றும் நடைமுறை சார்ந்த குறிகாட்டிகள் மற்றும் தரவு புள்ளிகளுடன் உள்ளது.
திருத்தப்பட்ட கட்டமைப்பு அறிக்கைகள் தயாரித்தல் சார்ந்த பிரச்சனைகளைக் குறைப்பது மட்டுமல்லாமல் தரவு தரம் மற்றும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்துகிறது. உள்ளூர்மயமாக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளின் உடன் இணைந்த ஒன்பது கருப்பொருள்களில் அடங்குபவை: வறுமையற்ற மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்வாதார பஞ்சாயத்து, ஆரோக்கியமான பஞ்சாயத்து, குழந்தை நட்பு பஞ்சாயத்து, நீர் தன்னிறைவான பஞ்சாயத்து, சுத்தமான மற்றும் பசுமையான பஞ்சாயத்து, தன்னிறைவான உள்கட்டமைப்பு கொண்ட பஞ்சாயத்து, சமூக நீதி மற்றும் சமூக பாதுகாப்பு கொண்ட பஞ்சாயத்து, நல்ல ஆட்சியுடன் கூடிய பஞ்சாயத்து, மற்றும் பெண் நட்பு பஞ்சாயத்து.
இந்தியா-மங்கோலியா கூட்டு இராணுவப் பயிற்சி நோமாடிக் எலிஃபன்ட் (NOMADIC ELEPHANT) மங்கோலியாவின் உலான்பாத்தரில் (Ulaanbaatar) 31ஆம் தேதி மே முதல் 13ஆம் தேதி ஜூன் 2025 வரை நடத்தப்படுகிறது. நோமாடிக் எலிஃபன்ட் (NOMADIC ELEPHANT) பயிற்சி ஆண்டுதோறும் இந்தியா மற்றும் மங்கோலியாவில் மாற்றி மாற்றி நடத்தப்படும் நிகழ்வாகும். இதே பயிற்சியின் கடந்த பதிப்பு ஜூலை 2024 இல் மேகாலயாவின் உம்ராய் (Umroi) இல் நடத்தப்பட்டது.
Economy (Unit V)
நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் இந்தியா :
சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையின்படி (International Monetary Fund's (IMF) World Economic Outlook report), இந்தியா 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாற உள்ளது. இந்தியாவின் பெயரளவு GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 2025-26 நிதியாண்டில் தோராயமாக $4.187 டிரில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது, இது 2025 ஆம் ஆண்டுக்கான ஜப்பானின் மதிப்பிடப்பட்ட $4.186 டிரில்லியனை சற்று விஞ்சுகிறது. 2014 ஆம் ஆண்டில் இந்தியா $2 டிரில்லியன் GDP உடன் பத்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்ததிலிருந்து இது குறிப்பிடத்தக்க உயர்வாகும், ஒரு தசாப்தத்திற்கு சற்று மேலாக அதன் பொருளாதார அளவை திறம்பட இரட்டிப்பாக்கியுள்ளது. விரைவான நகரமயமாக்கல், 29 வயதுக்கு அருகில் சராசரி வயதைக் கொண்ட இளம் மக்கள்தொகை, மற்றும் GDP-யில் தனியார் நுகர்வு கிட்டத்தட்ட 70% அளவிற்கு பங்களிக்கும் வலுவான உள்நாட்டு தேவை உள்ளிட்ட பல கட்டமைப்பு காரணிகளால் இந்த வளர்ச்சி உந்தப்படுகிறது. பெரிய வேலை வயது மக்கள்தொகையால் வகைப்படுத்தப்படும் இந்தியாவின் மக்கள்தொகை பலாபலன் இந்த வளர்ச்சி திறனை ஆதரிக்கிறது, இருப்பினும் திறன் வளர்ச்சி மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் போன்ற சவால்கள் இன்னும் உள்ளன. ஈர்க்கக்கூடிய பெயரளவு GDP வளர்ச்சி இருந்தபோதிலும், இந்தியாவின் தனிநபர் GDP ஜப்பானை விட மிகவும் குறைவாகவே உள்ளது, இது வளரும் பொருளாதாரமாக அதன் நிலையை பிரதிபலிக்கிறது. இருப்பினும், இந்தியா தொடர்ந்து வலுவான வளர்ச்சி விகிதத்தை பராமரிக்கிறது, 2025 இல் 6.2% மற்றும் 2026 இல் 6.3% என எதிர்பார்க்கப்படுகிறது, இது உலகளவில் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக அதை நிலைநிறுத்துகிறது மற்றும் உலக பொருளாதார மேடையில் அதன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு :
ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் புதிய விதிமுறையை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் நிதியமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
2024-25ஆம் ஆண்டின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகள்(Provisional Estimates of Annual Gross Domestic Product)
புள்ளிவிவர மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation - MoSPI) தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistics Office - NSO), நிதியாண்டு (Financial Year - FY) 2024-25க்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product - GDP) தற்காலிக மதிப்பீடுகளையும் (Provisional Estimates - PE) நிதியாண்டு 2024-25ன் ஜனவரி-மார்ச் காலாண்டிற்கான (Q4) GDP இன் காலாண்டு மதிப்பீடுகளையும் அதன் செலவின கூறுகளுடன் நிலையான (2011-12) மற்றும் தற்போதைய விலைகளில் வெளியிட்டுள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
உண்மையான GDP நிதியாண்டு 2024-25இல் 6.5% வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெயரளவு GDP நிதியாண்டு 2024-25இல் 9.8% வளர்ச்சி விகிதத்தை கண்டுள்ளது. உண்மையான GDP அல்லது நிலையான விலைகளில் GDP நிதியாண்டு 2024-25இல் ₹187.97 லட்சம் கோடி அளவை அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது நிதியாண்டு 2023-24க்கான முதல் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் (First Revised Estimates - FRE) GDP ₹176.51 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 6.5% வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.
நிதியாண்டு 2024-25ன் Q4இல், உண்மையான GDP மற்றும் பெயரளவு GDP முறையே 7.4% மற்றும் 10.8% வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
'கட்டுமான' துறை நிதியாண்டு 2024-25இல் 9.4% வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து 'பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பிற சேவைகள்' துறையில் 8.9% வளர்ச்சி விகிதமும், 'நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள்' துறையில் 7.2% வளர்ச்சி விகிதமும் உள்ளது.
நிதியாண்டு 2024-25ன் Q4 போது, 'கட்டுமான' துறை 10.8% வளர்ச்சி விகிதத்தை கண்டுள்ளது, அதைத் தொடர்ந்து 'பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பிற சேவைகள்' துறையில் 8.7% வளர்ச்சி விகிதமும், 'நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள்' துறையில் 7.8% வளர்ச்சி விகிதமும் உள்ளது.
முதன்மை துறை 4.4% வளர்ச்சி விகிதத்தை கண்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டில் காணப்பட்ட 2.7% வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். நிதியாண்டு 2024-25ன் Q4 போது, இந்த துறை 5.0% வளர்ச்சி விகிதத்தை கண்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டின் Q4இல் இருந்த 0.8% வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
தனியார் இறுதி உபயோக செலவு (Private Final Consumption Expenditure - PFCE) நிதியாண்டு 2024-25 போது 7.2% வளர்ச்சி விகிதத்தை அறிவித்துள்ளது, இது முந்தைய நிதியாண்டின் 5.6% வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (Gross Fixed Capital Formation - GFCF) நிதியாண்டு 2024-25 போது 7.1% வளர்ச்சி விகிதத்தையும், நிதியாண்டு 2024-25ன் Q4இல் 9.4% வளர்ச்சி விகிதத்தையும் பதிவு செய்துள்ளது.
Science & Technology (Unit I)
இந்தியாவின் முதல் மரபணு-திருத்தப்பட்ட ஆடு (Gene-Edited Sheep) காஷ்மீர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுடன் (Council of Agricultural Research (ICAR)) உடன் இணைந்து உற்பத்தி செய்யப்பட்டது.
ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (Sher-e-Kashmir University of Agricultural Sciences and Technology (SKUAST)) ஆராய்ச்சியாளர்கள், காஷ்மீர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுடன் (Council of Agricultural Research (ICAR)) (இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்) இணைந்து, இந்தியாவின் முதல் மரபணு-திருத்தப்பட்ட ஆட்டை உற்பத்தி செய்துள்ளனர். இந்த அறிவியல் முன்னேற்றம் இந்திய விலங்கு உயிரி தொழில்நுட்பம் மற்றும் கால்நடை வளர்ப்பிற்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
டாக்டர் ரியாஸ் அஹ்மத் ஷா தலைமையிலான ஆராய்ச்சி குழு, CRISPR-Cas9 மரபணு-திருத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்டின் DNA-வை துல்லியமாக மாற்றியமைத்தது.
மயோஸ்டேட்டின் மரபணு (myostatin gene) இலக்காக வைக்கப்பட்டது, இது விலங்குகளில் தசை வளர்ச்சியின் இயற்கையான கட்டுப்பாட்டாளராக செயல்படுகிறது. இந்த மரபணுவை செயலிழக்கச் செய்வதன் (knocking out) மூலம், ஆட்டின் தசை நிறை சாதாரண இந்திய இனங்களுடன் ஒப்பிடும்போது சுமார் 30% அதிகரித்தது.
மரபணு-திருத்தப்பட்ட ஆட்டில் எந்த வெளிநாட்டு DNA-வும் இல்லை, இது பாரம்பரிய மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களிடமிருந்து (GMOs) (மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள்) வேறுபடுத்துகிறது மற்றும் இதை ஒரு அல்லாத-மரபணு மாற்று உயிரினமாக (non-transgenic organism) ஆக்குகிறது.
இந்த தொழில்நுட்பம் வெளி மரபணுகளை அறிமுகப்படுத்தாமல் துல்லியமான, இலக்கு வைத்த மாற்றங்களை அனுமதிக்கிறது, இது உயிர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஏற்புத்தன்மையை மேம்படுத்துகிறது.
தெற்காசியாவின் மிகப்பெரிய பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (Battery Energy Storage System (BESS)) டெல்லியில் திறக்கப்பட்டது
டெல்லி தெற்காசியாவின் மிகப்பெரிய பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பை (Battery Energy Storage System - BESS) திறந்து வைத்துள்ளது, இது தெற்கு டெல்லியின் கிலோகரியில் (Kilokari, South Delhi) உள்ள பிஎஸ்இஎஸ் ராஜதானி பவர் லிமிடெட் (BSES Rajdhani Power Limited - BRPL) துணை மின்நிலையத்தில் அமைந்துள்ள 20-மெகாவாட் (40 மெகாவாட் மணிநேரம்) (20-MW (40 MWh)) வசதி ஆகும். இந்த திட்டம் இந்தியாவின் முதல் வணிக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டு-அளவிலான ஆற்றல் சேமிப்பு அமைப்பு (utility-scale energy storage system) ஆகும், இது நாட்டின் மின்சார துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது.
திறன் மற்றும் கவரேஜ்:
இந்த பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) 20 மெகாவாட்/40 மெகாவாட் மணிநேரம் (20 MW/40 MWh) திறன் கொண்டது மற்றும் தினமும் நான்கு மணிநேரம் வரை நம்பகமான மின்சாரத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது—பகல் மற்றும் இரவு தலா இரண்டு மணிநேரம்—இது அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட கிலோகரி பகுதியில் 100,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு நேரடியாக பயனளிக்கும்.
தொழில்நுட்பம்:
இந்த அமைப்பு மேம்பட்ட லித்தியம் அயர்ன் பாஸ்பேட் (Lithium Iron Phosphate - LFP அல்லது LiFePO4) பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது, இது அதன் உயர்ந்த பாதுகாப்பு, வெப்ப நிலைத்தன்மை மற்றும் நீடித்த தன்மைக்கு (superior safety, thermal stability, and durability) பெயர் பெற்றது. இந்த பேட்டரிகளில், கேத்தோட் (cathode) லித்தியம் உலோக பாஸ்பேட்டால் (lithium metal phosphate) ஆனது, லித்தியம் உலோக ஆக்சைடால் (lithium metal oxide) அல்ல, இது பாதுகாப்பு மற்றும் ஆயுட்காலத்தை அதிகரிக்கிறது.
சீனா தியன்வென்-2 (Tianwen-2 probe) திட்டம் என்ற பெயரில் ஒரு முக்கிய விண்வெளி திட்டத்தை தனது ஆழ்ந்த வெளிப்புற ஆய்வு திட்டத்தின் (deep space exploration program) ஒரு பகுதியாக லாங் மார்ச் 3-பி ராக்கெட் (Long March 3-B rocket) பயன்படுத்தி செலுத்தியுள்ளது. 2027 ஆம் ஆண்டின் முடிவு வரை நீடிக்க திட்டமிடப்பட்ட இந்த பயணம், பூமிக்கு அருகாமையிலுள்ள சிறுகோள் 2016 HO3 (கமோஓஅலேவா (Kamoʻoalewa) என்றும் அழைக்கப்படுகிறது) இல் இருந்து மாதிரிகளை சேகரித்து திருப்பி அனுப்புவதையும், அதன் பின்னர் செவ்வாய் கிரகத்தை விட பூமியிலிருந்து மேலும் தொலைவில் உள்ள முக்கிய-பட்டை வால்நட்சத்திரம் 311P/PANSTARRS-ஐ (main-belt comet 311P/PANSTARRS) ஆய்வு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இரட்டை-இலக்கு பயணம் சூரிய குடும்பத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த மதிப்புமிக்க அறிவியல் நுண்ணறிவுகளை வழங்கும் மற்றும் தன்னாட்சி தரையிறக்கம், மாதிரி சேகரிப்பு, மற்றும் ஆழ்ந்த வெளிப்புற வழிசெலுத்தல் (autonomous landing, sample collection, and deep space navigation) ஆகியவற்றில் சீனாவின் மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களை நிரூபிக்கும்.
இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station - ISS) உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான சோதனைகளை நடத்துவார். இந்த சோதனைகள் வரவிருக்கும் ஆக்சியம் மிஷன் 4 (Axiom Mission 4) இன் ஒரு பகுதியாக நடத்தப்படும். குரூப் கேப்டன் சுக்லா மனித விண்வெளி பயணத்திற்காக பயிற்சி பெற்ற முதல் இந்திய விண்வெளி வீரர்கள் குழுவின் ஒரு பகுதியாவார். ஆக்சியம் 4 மிஷன் என்பது ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் நாசா (NASA) நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான திட்டமிடப்பட்ட தனியார் விண்வெளி பயணமாகும். இந்த விமானம் ஜூன் 8ஆம் தேதி கென்னடி விண்வெளி மையத்திலிருந்து (Kennedy Space Center) புறப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
தஜிகிஸ்தானில் உள்ள துஷான்பே-யில் 2025-ம் ஆண்டுமே 29 - ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்ற பனிப்பாறைகள் பாதுகாப்பிற்கான சர்வதேச உயர்நிலை மாநாட்டில் (High-Level International Conference on Glaciers’ Preservation) மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்தியா பாரிஸ் உடன்படிக்கையின் (Paris Agreement) கீழ் தனது தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (Nationally Determined Contributions) (NDCs) நோக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. முக்கிய சாதனைகள் பின்வருமாறு:
நாட்டின் நிறுவப்பட்ட மின்சார திறனில் 48% க்கும் மேல் இப்போது புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்படுகிறது;
2005 மற்றும் 2020 க்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) உமிழ்வு தீவிரத்தில் 36% குறைப்பு;
2005 மற்றும் 2021 க்கு இடையில் அதிகரித்த வன மற்றும் மர உறை மூலம் 2.29 பில்லியன் டன்கள் CO₂ சமமான கூடுதல் கார்பன் சிங்க் (carbon sink) உருவாக்கம்.
World
சர்வதேச மத்தியஸ்த அமைப்பு (International Organisation for Mediation - IOMed) தொடங்கப்பட்டது:
சீனா மே 30, 2025 அன்று சர்வதேச மத்தியஸ்த அமைப்பை (International Organisation for Mediation - IOMed) ஹாங்காங்கில் அதன் தலைமையகத்துடன் தொடங்கியுள்ளது, இது அமைதியான தகராறு தீர்வுக்கான முறையாக மத்தியஸ்தத்திற்கு குறிப்பாக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் அரசுகளிடையேயான அமைப்பின் (intergovernmental organization) நிறுவனத்தை குறிக்கிறது.
சீனா உள்ளிட்ட மொத்தம் 33 நாடுகள் சர்வதேச மத்தியஸ்த அமைப்பு நிறுவனத்தின் மாநாட்டில் (Convention on the Establishment of IOMed) கையெழுத்திட்டன.
இந்த நடவடிக்கை சர்வதேச தகராறு தீர்வு கட்டமைப்பில் (international dispute settlement framework) குறிப்பிடத்தக்க இடைவெளியை நிரப்புகிறது, ஏனெனில் ஐ.நா. சாசனத்தின் பிரிவு 33 (Article 33 of the UN Charter) பேச்சுவார்த்தை, விசாரணை, மத்தியஸ்தம், சமரசம், நடுவர் மன்றம், மற்றும் நீதித்துறை தீர்வு (negotiation, enquiry, mediation, conciliation, arbitration, and judicial settlement) போன்ற பல்வேறு வழிமுறைகள் மூலம் தகராறுகளின் அமைதியான தீர்வை ஊக்குவித்தாலும், முன்னர் மத்தியஸ்தத்தில் மட்டும் கவனம் செலுத்தும் அர்ப்பணிப்புள்ள அரசுகளிடையேயான அமைப்பு இல்லை. சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice - ICJ) மற்றும் நிரந்தர நடுவர் மன்றம் (Permanent Court of Arbitration) போன்ற தற்போதுள்ள நிறுவனங்கள் முக்கியமாக நடுவர் மன்றம் மற்றும் நீதித்துறை தீர்வுகளை கையாளுகின்றன, ஆனால் சர்வதேச மத்தியஸ்த அமைப்பு நாடுகள் மத்தியஸ்தத்தின் மூலம் தகராறுகளை தீர்க்க ஒரு முறையான மேடையை வழங்கும், இது அமைதியான சர்வதேச உறவுகளுக்கான உலகளாவிய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும்.
Others - Sports, Dates, Books, Awards
உலக புகையிலை எதிர்ப்பு தினம் - மே 31 | மையக்கருத்து 2025 - முறையீட்டை மறைத்தல்: புகையிலை மற்றும் நிக்கோடின் பொருட்கள் மீதான தொழில்துறை தந்திரங்களை அம்பலப்படுத்துதல்(Unmasking the Appeal: Exposing Industry Tactics on Tobacco and Nicotine Products)
உலக பல்லுறுப்பு காய்ச்சல் நாள் (World Multiple Sclerosis Day) - மே 30 | உலக MS நாள் 2025 இன் கருப்பொருள் 'என் MS நோயறிதல்' (My MS Diagnosis)
ليست هناك تعليقات:
إرسال تعليق
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.