நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC பொதுத் தமிழ் -5. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுத்தல்

பகுதி அ  : 5.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுத்தல்

இவ்வகை வினாக்கள் தேர்வரின் ஆழ்ந்த தமிழறிவை சோதிக்கும் வண்ணம் இருக்கும், ஆனால் எளிதான வினாக்களே பொதுவாகக் கேட்கப்படுகின்ற்றன.  நான்கு வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கும், அவை நான்குமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கும், ஆனால் ஒன்று மட்டும் வேறுபட்டிருக்கும். உதாரணமாக ராமன், ராவணன், லட்சுமணன், சீதை  - இவற்றில்  பொருந்தாச் சொல்லைக் கண்டறியச்சொல்வார்கள்.  நான்கு பெயர்களுமே ராமாயணத்தில் வரும்  பெயர்கள், ஆனால் சீதை மட்டும் பெண்பால். இதைப்போல் எளிய வகை வினாக்களே கேட்கப்படலாம்.


உதாரணம் :  பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடுக்கவும் ?

அ.குறிஞ்சி
ஆ.முல்லை
இ.மருதம்
ஈ.மதுரை

விடை : மதுரை

எப்படித் தயாராவது ?

இதற்காகத் தனியே சிறப்பு பயிற்சி ஒன்றும் தேவையில்லை. தமிழ் பள்ளிப் பாட புத்தகத்தைப் படிக்கும் போது, வித்தியாசமான, உங்களுக்குத் தெரியாத ஆண்பால், பெண்பால், புனைப்பெயர்களை குறிப்பெடுங்கள்.


-தொடரும் ...
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!