நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தமிழக அரசின் இ-அடங்கல் திட்டம்

விவசாயிகளின் நலனுக்காக அடங்கல் பதிவேட்டினை மின்னணு பதிவேடாக மாற்றம்  செய்யும் இ-அடங்கல் திட்டத்தை தமிழக முதலமைச்சர் 26-10-2018 அன்று துவக்கி வைத்தார்.

  • இ-அடங்கல் முறையில், கிராம நிர்வாக அலுவலர்கள் பயிர் சாகுபடி சம்பந்தமான விவரங்களை பதிவு செய்வது மட்டுமின்றி, விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில், தாங்கள் பயிர் செய்துள்ள விவரங்களை அவர்களே  பதிவு செய்யலாம். 
  • இ-அடங்கலை கொண்டு ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் `ஜி’ அறிக்கை மிக எளிதாக இறுதி செய்யப்படும். விவசாயிகள் எவ்வித கட்டணமுமின்றி இ-அடங்கல் பதிவை பார்வையிடவும், அடங்கல் நகல்  பெற அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்தி எந்நேரத்திலும், எவ்விடத்திலும் பதிவிறக்கம் செய்ய இயலும். வெள்ள சேதம் மற்றும் வறட்சி காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை இ-அடங்கல் பதிவேட்டின் மூலம்  தவறுகள் இல்லாமல் கணக்கிட முடியும்.


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!